[Term-2] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 Valvikkum Kalvi Book Back Solution

இயல் இரண்டு – வாழ்விக்கும் கல்வி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.3 ‘Valvikkum Kalvi’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 2.3 வாழ்விக்கும் கல்வி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.3 Valvikkum Kalvi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

வாழ்விக்கும் கல்வி பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Valvikkum Kalvi’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Valvikkum Kalvi subject.

Next Lesson: அழியாச்செல்வம்

நூல் வெளி

  • திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி.
  • நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி.
  • வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது.
  • இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ____________.

  1. கல்வி
  2. காலம் அறிதல்
  3. வினையறிதல்
  4. மடியின்மை

விடை : காலம் அறிதல்

2. கல்வியில்லாத நாடு ______________ வீடு.

  1. விளக்கில்லாத
  2. பொருளில்லாத
  3. கதவில்லாத
  4. வாசலில்லாத

விடை : விளக்கில்லாத

3. பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர் ______________.

  1. திருக்குறளார்
  2. பாரதியார்
  3. திருவள்ளுவர்
  4. பாரதிதாசன்

விடை : பாரதியார்

4. உயர்வடைவோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

  1. உயர் + வடைவோம்
  2. உயர் + அடைவோம்
  3. உயர்வு + வடைவோம்
  4. உயர்வு + அடைவோம்

விடை : உயர்வு + அடைவோம்

5. இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____________.

  1. இவைஎல்லாம்
  2. இவையெல்லாம்
  3. இதுயெல்லாம்
  4. இவயெல்லாம்

விடை : இவையெல்லாம்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. செல்வம்

விடை: இவ்வுலக வாழ்க்கைக்கு பொருட்செல்வம் முக்கியமானது

2. இளமைப்பருவம்

விடை: இளமைப்பருவம் கல்விக்குரிய பருவம் ஆகும்

3. தேர்ந்தெடுத்து

விடை: நல்ல நூல்களைத் தேர்ந்துதெடுத்து படிக்க வேண்டும்

குறு வினா

1. மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

எதிர்காலத்தில் பிற உயிரினங்கள் என்னவாகும் என்பதைச் சொல்ல முடியும். ஆனால் மனிதப் பிறவியின் எதிர்காலத்தை கூறவே முடியாது.

மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும்.

2. கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?

கல்வி அறிவு இல்லாதவர்கள் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகின்றார்

3. நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?

படிக்க வேண்டிய நூல்களை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

சிறு வினா

1. கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.

  • இந்த உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும்; அழிந்துவிடும்.
  • ”இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இங்க[ ஒரு பெரிய ஆலமரம் இருந்த, எங்கே?” என்றால் ”அது புயலில் விழுந்து விட்டது” என்போம்
  • இங்கிருந்த பெரிய கட்டடம் எங்கே என்றால் ”அது மழையால் இடிந்து விட்டது” என்பர்.
  • பத்து ஆண்டுகளுக்கு முன் 2 இலட்ச ரூபாய் வைத்திருந்தவர். இன்று 2 ரூபாய் கடன் கேட்கிறார்” என்போம்.
  • எல்லாம் அழியும், ஆனால் கல்வி அப்படியன்று
  • பத்து ஆண்டுகளுக்கு முன்னே பட்டம் பெற்றவர். இன்று பத்தாம் வகுப்பு ஆகி விட்டார்” என்று சொல்ல முடியாது ஏனென்றால் கல்வி அழியாதது

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”  என்று வள்ளுவர் கூறுகிறார்.

2. கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?

  • கல்வி ஓர் ஒளிவிளக்கு. அதாவது இருக்கும் இடத்தை ஒளிமயமாக ஆக்கும்.
  • அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிக் கற்ற கல்வியைப் பலருக்கும் அளிக்க வேண்டும். அப்படிப் பலருக்கும் ஒளி தருவதுதான் கல்வி.
  • கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு. விளக்கில்லாத வீட்டில் யார் குடியிருப்பார்கள்?
  • வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.

சிந்தனை வினா

நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?

  • உண்மைப் பொருளை விளக்க வேண்டும்.
  • நன்னெறிப் பாதை காட்ட வேண்டும்.
  • அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இருக்க வேண்டும்.
  • எளிமை, தெளிவு ஆகியவை கொண்ட நடையில் இருத்தல் வேண்டும்.

ஆகியவையே நல்ல நூலின் இயல்புகளாக நான் கருதுவதாகும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வாழ்விக்கும் கல்வி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வீ.முனிசாமி _____________ என்று அழைக்கப்படுகிறார்.

  1. தமிழ்த்தென்றல்
  2. திருக்குறளார்
  3. புலவரேறு
  4. பாவலரேறு

விடை : திருக்குறளார்

2. திருக்குறளார் வீ.முனிசாமி எழுதிய நூல்களில் பொருந்தாது

  1. திருவள்ளுவர் வரலாறு
  2. வள்ளுவர் உள்ளம்
  3. வள்ளுவர் காட்டிய வழி
  4. திருக்குறளில் நகைச்சுவை

விடை : திருவள்ளுவர் வரலாறு

3. திருக்குறளார் வீ.முனிசாமி எழுதிய நூல்களில் புகழ் பெற்ற நூல்

  1. உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்
  2. வள்ளுவர் உள்ளம்
  3. வள்ளுவர் காட்டிய வழி
  4. திருக்குறளில் நகைச்சுவை

விடை : உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

4. நன்றின்பால் உய்ப்பது அறிவு எனக் கூறியவர்

  1. திருக்குறளார்
  2. திருவள்ளுவர்
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்

விடை : திருவள்ளுவர்

5. அப்படியில்லாமல் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. அப்படி + யில்லாமல்
  2. அப்படி + இல்லாமல்
  3. அப்படியில்லா + மல்
  4. அப்படியில்லா + அல்

விடை : திருவள்ளுவர்

6. சொல்லிக்கொடுத்த என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. சொல்லிக் + கொடுத்த
  2. சொல்லி + கொடுத்த 
  3. சொல்லி + கோடுத்த
  4. சொல்லிக் + கோடுத்த

விடை : சொல்லி + கொடுத்த

7. கசடற என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. கசடு + உற
  2. கசடு + டற
  3. கசடு + அற
  4. கசடு + ஊற

விடை : கசடு + அற

8. தலம் + அனைத்தும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. தலம் அனைத்தும்
  2. தலம்மனைத்தும்
  3. தலம அனைத்தும்
  4. தலமனைத்தும்

விடை : கசடு + அற

9. திருவள்ளுவர் _____________ இல்லாதவனை விலங்கு என்கிறார்

  1. பொருள்
  2. கல்வியறிவு
  3. ஊக்கம்
  4. அறிவு

விடை : கல்வியறிவு

குறு வினா

1. பாரதியார்  பள்ளிக்கு கோயில் வைக்க காரணம் யாது?

  • நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார்.
  • அதனால் தான் “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்றார்.

2. திருக்குறளார் வீ. முனிசாமி – சிறுகுறிப்பு வரைக

  • பணி – திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர்
  • சிறப்பு – நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர்.
  • படைப்புகள் – வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, சிந்தனைக் களஞ்சியம்
  • புகழ் பெற்ற நூல் – உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

Leave a Comment