[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 Puli Thangiya Kukai Book Back Solution

இயல் மூன்று- புலி தங்கிய குகை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 3.1 ‘Puli Thangiya Kukai’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 3.1 புலி தங்கிய குகை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 3.1 Puli Thangiya Kukai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

புலி தங்கிய குகை பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Puli Thangiya Kukai’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Puli Thangiya Kukai subject.

Next Lesson: திருக்குறள்

புலி தங்கிய குகை பாடல்

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்
யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே

– காவற்பெண்டு

கவிநடை உரை

எம் சிறுகுடிலின் அழகிய தூணைப் பற்றி நின்று
என் மகன் எங்கே என்று வினவும் பெண்ணே!
அவனிருக்கும் இடம் யானறியேன்;
புலி தங்கிச் சென்ற குகை போல
அவனைப் பெற்்ற வயிறு இங்குள்ளது;
ஒருவேளை அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும்!

பாடலின் பொருள்

(சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று, ‘அன்னையே! உன் மகன்
எங்கு உள்ளான்?’ என்று கேட்டாள். )

‘சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று புலவர் பதிலளித்தார்.

நூல் வெளி

  • காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.
  • சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.
  • கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார்.
  • இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
  • புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள்
  • ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.
  • இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

  • சிற்றில் – சிறு வீடு
  • யாண்டு – எங்கே
  • கல் அளை – கற்குகை
  • ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. யாண்டு என்னும் சொல்லின் பொருள் ______________

  1. எனது
  2. எங்கு
  3. எவ்வளவு
  4. எது

விடை : எங்கு

2. யாண்டுளனோ என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. யாண்டு + உளனோ?
  2. யாண் + உளனோ?
  3. யா + உளனோ?
  4. யாண்டு + உனோ?

விடை : யாண்டு + உளனோ?

3. கல் + அளை என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது ______________

  1. கல்லளை
  2. கல்அளை
  3. கலலளை
  4. கல்லுளை

விடை :  கல்லளை

குறு வினா

தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?

தம் வயிற்றுக்குத் தாய் “புலி தங்கிய குகை” உவமையாகக் கூறுகிறார்

சிறு வினா

தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

சிறிய என் வீட்டில் தூணைப் பற்றிக் கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே ?” என என்னைக் கேட்கின்றாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் “புலி தங்கிய குகை” போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது.அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’  என்று தன் மகன் குறித்து தாய் கூறினார்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “புலி தங்கிய குகை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. காவற்பெண்டு ______________ செவிலித்தாயாக விளங்கியவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. ஓளவையார்
  4. கோப்பெரு நற்கிள்ளியின்

விடை : கோப்பெரு நற்கிள்ளியின்

2. புறநானூறு ____________ நூல்களுள் ஒன்று

  1. பத்துப்பாட்டு
  2. எட்டுத்தொகை
  3. பதினெண்கீழ்கணக்கு
  4. பதினெண்மேல்கணக்கு

விடை : எட்டுத்தொகை

3. சிற்றில் என்பதன் பொருள் _________

  1. சிறு வீடு
  2. காடு
  3. நாடு
  4. நகரம்

விடை : சிறு வீடு

4. கல் அளை என்பதன் பொருள் _________

  1. கல்வீடு
  2. கற்குகை
  3. சிறுவீடு
  4. வயிறு

விடை : கற்குகை

5. யாண்டு என்பதன் பொருள் _________

  1. அங்கே
  2. இங்கே
  3. எங்கே
  4. உங்கே

விடை : எங்கே

6. எங்குள்ளான் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. எங்கே + உள்ளான்
  2. எங்கு + குள்ளான்
  3. எங்கு + உள்ளான்
  4. எங் + குள்ளான்

விடை : எங்கு + உள்ளான்

7. இங்கில்லை என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. இங்க் + இல்லை
  2. இங்கு + இல்லை
  3. இங் + இல்லை
  4. இங் + கில்லை

விடை : இங்கு + இல்லை

8. போர் + களம் என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. போர் களம்
  2. போர்க்க்களம்
  3. போர்க்களம்
  4. போர் அளம்

விடை : போர்க்களம்

9. பதில் + அளித்தார் என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. பதில் அளித்தார்
  2. பதிலலளித்தார்
  3. பதில் லளித்தார்
  4. பதிலளித்தார்

விடை : பதிலளித்தார்

குறு வினா

1. எதில் தமிழர்கள் சிறந்து விளங்கினர்?

கல்வி, வீரம்

1. நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் கருதியவர்கள் யார்?

தமிழர்கள்

3. காவற்பெண்டு – சிறு குறிப்பு வரைக

  • காவற்பெண்டு சங்காலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.
  • சோழ மன்னன் போரவைக் காேப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.
  • கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் காெண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

4. புறநானூறு குறிப்பு வரைக

  • புறநானூறு எட்டுத்தாெகை நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின வாழ்க்கடை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.

Leave a Comment