[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 Thirukkural Book Back Solution

இயல் இரண்டு – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.6 ‘Thirukkural’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 2.6 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.6 Thirukkural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirukkural’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Thirukkural subject.

Next Lesson: நால்வகைக் குறுக்கங்கள்

ஆசிரியர் குறிப்பு

  • திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று கூறுவர்.
  • இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார்.

நூற் குறிப்பு

  • தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது.
  • இதில் அறம்- 38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  • இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வாய்மை எனப்படுவது ______________

  1. அன்பாகப் பேசுதல்
  2. தீங்குதராத சொற்களைப் பேசுதல்
  3. தமிழ்ல் பேசுதல்
  4. சத்தமா பேசுதல்

விடை : தீங்குதராத சொற்களைப் பேசுதல்

2. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும் ______________

  1. மன்னன்
  2. பொறாமை இல்லாதவன்
  3. பொறாமை உள்ளவன்
  4. செல்வந்தன்

விடை : பொறாமை உள்ளவன்

3. பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. பொரு + செல்வம்
  2. பொருட் + செல்வம்
  3. பொருள் + செல்வம்
  4. பொரும் + செல்வம்

விடை : பொருள் + செல்வம்

4. யாதெனில் என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது ______________

  1. யா + எனில்
  2. யாது + தெனில்
  3. யா + தெனில்
  4. யாது + எனில்

விடை : யாது + எனில்

5. தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________

  1. தன்நெஞ்சு
  2. தன்னெஞ்சு
  3. தானெஞ்சு
  4. தனெஞ்சு

விடை : தன்நெஞ்சு

6. தீது + உண்டோ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது __________________

  1. தீதுண்டோ
  2. தீதுஉண்டோ
  3. தீதிண்டோ
  4. தீயுண்டோ

விடை : தீதுண்டோ

சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்தி எழுதுக.

அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.

விடை :

ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.

குறு வினா

1. எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?

ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் அவர் நெஞ்சமே அவனை வருத்தும்

2. வாழும் நெறி யாது?

ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.

3. உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார் ?

உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.

கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க.

பொருட்செல்வம் எல்லாம் பூரியார் செல்வத்துள்
கண்ணும் அருட்செல்வம் உள செவிச்செல்வம்
அச்செல்வம் தலை செல்வம்

 

1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடு.

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்தார் . அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் ‘பொய் பேசாமை ’ என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய்யே பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார் . அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
   அழுக்காறு இலாத இயல்பு.

2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
    உள்ளத்துள் எல்லாம் உளன்.

விடை :-

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன். 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சொல்லும் பொருளும்

  • அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை
  • அழுக்காறு – பொறாமை
  • ஆக்கம் – செல்வம்
  • கேடு – வறுமை
  • எதிலார் – பிறர்
  • பூரியார் – இழிந்தவர்
  • வாய்மை – உண்மை
  • செவ்வியான் – சான்றோர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி என்ற பிற பெயர்களில் அழைக்கப்படும் நூல் ____________

  1. திரிகடுகம்
  2. சிறுபஞ்சமூலம்
  3. திருக்குறள்
  4. நாலடியார்

விடை : திருக்குறள்

2. திருக்குறள் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை

  1. 133
  2. 1340
  3. 1330
  4. 134

விடை : 1330

3. தீங்கும் தராத சொற்களைச் சொல்லுதல் ____________

  1. தூய்மை
  2. இனிமை
  3. வாய்மை
  4. புதுமை

விடை : வாய்மை

4. பொறாமையில்லா என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. பொறாம்மை + இல்லாத
  2. பொறாமை + யில்லாத
  3. பொறாமை + இல்லாத
  4. பொறா + இல்லாத

விடை: பொறாமை + இல்லாத

5. தீதுண்டோ என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. தீது + ண்டோ
  2. தீது + உண்டோ
  3. தீத் + உண்டோ
  4. தீது + யுண்டோ

விடை: தீது + உண்டோ

6. யாது + ஒன்றும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. யாதொன்றும்
  2. யாது ஒன்றும்
  3. யாது தொன்றும்
  4. யாத்தொன்றும்

விடை: யாதொன்றும்

7. வலிமை + உடையவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. வலிம்மை உடையவர்
  2. வலிமை உடையவர்
  3. வலிமைய்டையவர்
  4. வலிமையுடையவர்

விடை: வலிமையுடையவர்

குறு வினா

1. செல்வத்துள் சிறந்த செல்வம் எது?

செல்வங்களுள் சிறந்தது அருட்செல்வம்

2. வலிமையுடையவர் எப்போது தன் நிலையை எண்ணி பார்க்க வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார்?

ஒருவர் தன்னை விட மெலிந்தவரை துன்புறுத்தும் போது, தன்னை விட வலிமையுடையவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

Leave a Comment