[Term-3] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 Thannai Arithal Book Back Solution

இயல் இரண்டு – தன்னை அறிதல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 3.2 ‘Thannai Arithal’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 3 Lesson 3.2 தன்னை அறிதல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 3.2 Thannai Arithal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

தன்னை அறிதல் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thannai Arithal’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Thannai Arithal subject.

Next Lesson: மலைப்பொழிவு

தன்னை அறிதல் பாடல்

அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு
அது குயில் குஞ்சு என்று தெரிந்தது
தெரிந்த பிறகு
இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது.
போய்விடு என்றதுபாவம் குயில் குஞ்சு!
அது எங்குப் போகும்?
அதுக்கு என்ன தெரியும்?
அது எப்படி வாழும்?குயில் குஞ்சும்
எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தது
அம்மா காக்கா கேட்கவில்லை
கிளம்பிப் போகச் சொல்லிவிட்டதுகுயில் குஞ்சால் அம்மா காக்கையைப்
பிரியமுடியவில்லை
அதுவும் அந்த மரத்திலேயே
வாழ ஆரம்பித்தது

அம்மா காக்கையைப் போல “கா” என்று
அழைக்க முயற்சி செய்தது
ஆனால் அதற்குச் சரியாக வரவில்லை

அதற்குக் கூடு கட்டத் தெரியாது
பாவம் சிறிய பறவைதானே!
கூடு கட்ட அதற்கு யாரும்
சொல்லித் தரவும் இல்லை
அம்மா அப்பா இல்லை
தோழர்களும் இல்லை

குளிரில் நடுங்கியது
மழையில் ஒடுங்கியது
வெயிலில் காய்ந்தது
அதற்குப் பசித்தது
தானே இரை தேடத் தொடங்கியது

வாழ்க்கை எப்படியும்
அதை வாழப் பழக்கிவிட்டது

ஒரு விடியலில் குயில் குஞ்சு
“கூ” என்று கூவியது
அன்று தானொரு
குயில் என்று கண்டு கொண்டது.

– சே. பிருந்தா

கவிதையின் உட்பொருள்

குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக்குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது. தனியே சென்று வாழ அஞ்சுகிறது. தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது. நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பது இக்கவிதையின் உட்பொருள் ஆகும்.

நூல் வெளி

  • சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர்.
  • மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
  • இக்கவிதை மகளுக்குச் சொன்ன கதை என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கூடுகட்டத் தெரியாத பறவை _______.

  1. காக்கை
  2. குயில்
  3. சிட்டுக்குருவி
  4. தூக்கணாங்குருவி

விடை : குயில்

2. தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. தா + ஒரு
  2. தான் + னொரு
  3. தான் + ஒரு
  4. தானே + ஒரு

விடை : தான் + ஒரு

குறு வினா

1. காக்கை ஏன் குயில் குஞ்சை போகச் சொன்னது?

காக்கை கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல. குயில் குஞ்சு தான் என்று ஒரு நாள் தெரிய வந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

2. குயில் குஞ்சு தன்னை எப்போது குயில் என உணர்ந்தது?

ஒரு விடியலில் குயில் குஞ்ச “கூ” என்று கூவயிது. அன்று தான் ஒரு “குயில்” என உணர்ந்தது.

சிறு வினா

குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக

காக்கை கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல. குயில் குஞ்சு தான் என்று ஒரு நாள் தெரிய வந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

அதனால் தாய் காக்கையை விட்டுச் செல்ல முடியவில்லை. அந்த மரத்திலேயே வாழ ஆரம்பித்தது. “கா” என்று கத்த முயற்சித்தது, அதனால் முடியவில்லை.

அதற்குக் கூடு கட்டத் தெரியாது. அம்மா, அப்பா, தோழர் யாரும் இல்லை. குளிர், மழை, வெயில் ஆகியவற்றை கடந்தது. தானே இரை தேடத் தொடங்கியது.

வாழ்க்கை வாழப் பழகி விட்டது. ஒரு விடியலில் குயில் குஞ்ச “கூ” என்று கூவயிது. அன்று தான் ஒரு “குயில்” என உணர்ந்தது. 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தன்னை அறிதல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தன்னை அறிதல் கவிதையை எழுதியவர்

  1. சுகந்தி சுப்பிரமணியம்
  2. கலா
  3. சே.பிருந்தா
  4. ஆசிரியர் பெயர் தெரியவில்லை

விடை : சே.பிருந்தா

2. குயில் குஞ்சு __________ எனக் கூவியது

  1. கூ கூ
  2. கீ கீ
  3. கொக் கொக்
  4. கா கா

விடை : கூ கூ

3. காக்கைக்குஞ்சு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. காக்கை + குஞ்சு
  2. காக் + கை + குஞ்சு
  3. காக்கை +க் + குஞ்சு
  4. காக்கைக் + குஞ்சு

விடை : காக்கை + குஞ்சு

குறு வினா

2. காக்கையைப் போல கரைய முயன்றது எது?

குயில் குஞ்சு காக்கையைப் போல கரைய முயன்றது

3. தன்னை அறிதல் என்னும் கவிதை மூலம் நீவிர் அறிந்து கொண்டன யாது?

நாம் நம்முடைய ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் பல சாதனைகள் புரியலாம்

3. சே.பிருந்தாவின் படைப்புகள் சிலவற்றை கூறுக

  • மழை பற்றி பகிர்தல்கள்
  • வீடு முழுக்க வானம்
  • மகளுக்கு சொன்ன கதை

Leave a Comment