[Term-2] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.6 Thirukkural Book Back Solution

இயல் மூன்று – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 3.6 ‘Thirukkural’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 3.6 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 3.6 Thirukkural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirukkural’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Thirukkural subject.

Next Lesson: தொழிற்பெயர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. _____________ தீமை உண்டாகும்.

  1. செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
  2. செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
  3. செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
  4. எதுவும் செய்யாமல் இருப்பதால்

விடை : செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

2. தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ______ இருக்கக் கூடாது.

  1. சோம்பல்
  2. சுறுசுறுப்பு
  3. ஏழ்மை
  4. செல்வம்

விடை : சோம்பல்

3. எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

  1. எழுத்து + தென்ப
  2. எழுத்து + என்ப
  3. எழுத்து + இன்ப
  4. எழுத் + தென்ப

விடை : எழுத்து + என்ப

4 . குடியாக என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

  1. குடி + யாக
  2. குடி + ஆக்க
  3. குடி + ஆக
  4. குடி + யாக்க

விடை : குடி + ஆக

5. கற்றனை + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

  1. கற்றனைத்தூறும்
  2. கற்றனைதூறும்
  3. கற்றனைத்தீறும்
  4. கற்றனைத்தோறும்

விடை : கற்றனைத்தூறும்

பொருத்துக.

  1. கற்கும் முறை – செயல்
  2. உயிர்க்குக் கண்கள் – காகம்
  3. விழுச்செல்வம் – பிழையில்லாமல் கற்றல்
  4. எண்ணித் துணிக – எண்ணும் எழுத்தும்
  5. கரவா கரைந்துண்ணும் – கல்வி

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

குறு வினா

1. ‘நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்’ எப்போது?

நாம் ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்

2. தீமை உண்டாக்கும் இரண்டு செயல்களை எழுதுக.

செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்

3. துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் யார்?

துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்

பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Thirukkural Book Back Solution b

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

Samacheer Kalvi 7th Tamil Guide Thirukkural Book Back Solution a

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கசடற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. கசடு + அற
  2. கசட + அற
  3. கசடு + உற
  4. கசட + உற

விடை :  கசடு + அற

2. எண்ணென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. எண்  + ணென்ப
  2. எண்  + நென்ப
  3. எண் + என்ப
  4. எண்  + ணெண்ப

விடை : எண் + என்ப

3. கரைந்து + உண்ணும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. எண்  + ணென்ப
  2. எண்  + நென்ப
  3. கரைந்துண்ணும்
  4. எண்  + ணெண்ப

விடை : எண் + என்ப

4. இழுக்கு என்னும் சொல்லின் பொருள் ________________

  1. உலகம்
  2. குற்றம்
  3. காலம்
  4. பிணி

விடை : குற்றம்

5. மடி + இன்மை என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

  1. மடியின்மை
  2. மடி இன்மை
  3. மடி இனிமை
  4. மடி யினிமை

விடை : மடியின்மை

குறு வினா

1.கற்க வேண்டியவற்றை எவ்வாறு கற்க வேண்டும்?

கற்க வேண்டியவற்றைப் பிழை இல்லாமல் கற்க வேண்டும்.

2. மக்களுக்குக்கு கண்கள் போன்றது எது?

எண்ணும் எழுத்தும்

3. மணற்கேணியில் ஊறும் நீரிற்கு ஒப்பாக வள்ளுவர் எதனைக் கூறுகிறார்?

மணற்கேணியில் ஊறும் நீரிற்கு ஒப்பாக கற்பதற்கேற்ப மக்களுக்கு அறிவு வளர்வதை ஒப்பிடுகிறார்.

4. செல்வத்துள் சிறந்த செல்வம் எது?

அழிவில்லாத கல்வியே செல்வத்துள் சிறந்த செல்வம் ஆகும். ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை.

5. எது குற்றம் என வள்ளுவர் கூறுகிறார்?

எந்தச் செயலையும் நன்கு சிந்தித்த பின் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றம் என வள்ளுவர் கூறுகிறார்

Leave a Comment