[Term-3] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 Virundhombal Book Back Solution

இயல் மூன்று – விருந்தோம்பல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.1 ‘Virundhombal’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 1.1 விருந்தோம்பல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.1 Virundhombal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

விருந்தோம்பல் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Virundhombal’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Virundhombal subject.

Next Lesson: திருக்குறள்

விருந்தோம்பல் பாடல்

மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுறா முன்றிலோ இல்

– முன்றுறை அரையனார்

பாடலின் பொருள்

மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி “ஒன்றுறா முன்றிலோ இல்” என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.

நூல்வெளி

  • பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
  • இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
  • பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
  • பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது நானூறு பாடல்களைக் கொண்டது.
  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.

சொல்லும் பொருளும்

  • மாரி – மழை
  • வறந்திருந்த – வறண்டிருந்த
  • புகவா – உணவாக
  • மடமகள் – இளமகள்
  • நல்கினாள் – கொடுத்தாள்
  • முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மரம் வளர்த்தால் _________ பெறலாம்

  1. மாறி
  2. மாரி
  3. காரி
  4. பாரி

விடை : மாரி

2. நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. நீரு + உலையில்
  2. நீர் + இலையில்
  3. நீர் + உலையில்
  4. நீரு + இலையில்

விடை : நீர் + உலையில்

3. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.

  1. மாரியொன்று
  2. மாரிஒன்று
  3. மாரியின்று
  4. மாரியன்று

விடை : மாரியொன்று

குறு வினா

1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக

அங்கவை, சங்கவை

2. “பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை” எவ்வாறு?

மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.

பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

சிந்தனை வினா

தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக

ஈகை, உயிரிரக்கம், நடுவுநிலைமை, பிறருக்கென வாழ்தல், எளிய வாழ்க்கை, தூய அன்பு, உலகப்பொதுமை ஆகியன தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “விருந்தோம்பல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மழை என்று பொருள் தரும் சொல்

  1. மாறன்
  2. வறந்திருந்த
  3. புகாவாக
  4. மாரி

விடை : முன்றில்

2. மடமகள் என்பதன் பொருள் ………………

  1. இளமகள்
  2. உணவாக
  3. மடமகள்
  4. முன்றில்

விடை : மழை

3. முன்றுறை அரையனார் எழுதிய நூல்

  1. பழமொழி நானூறு
  2. கார் நாற்பது
  3. களவழி நாற்பது
  4. ஐந்திணை ஐம்பது

விடை : பழமொழி நானூறு

4. பழமொழி நானூறு __________ நூல்களுள் ஒன்று

  1. பதினெண்கீழ்கணக்கு
  2. பதினெண்மேல்கணக்கு
  3. சிற்றிலக்கியம்
  4. காப்பியம்

விடை : பதினெண்கீழ்கணக்கு

5. மாரியொன்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. மாரி + ஒன்று
  2. மாரி + யொன்று
  3. மாரி + ஓன்று
  4. மார்ரி + யொன்று

விடை : மாரி + ஒன்று

6. வறந்திருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வறந்தி + இருந்த
  2. வறந்து + இருந்த
  3. வறந்து + திருந்த
  4. வறந்தி + திருந்த

விடை : வறந்து + இருந்த

7. ஒன்று + ஆகு என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. ஒன்று ஆகு
  2. ஒன்றாகு
  3. ஒன்றுறாகு
  4. ஒன்ற்றாகு

விடை : ஒன்றாகு

8. முன்று + இலோ என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. முன்று இலோ
  2. முன்றிலோ
  3. முன்றில்லோ
  4. முன்றிஅல்லோ

விடை : முன்றிலோ

குறு வினா

1. பழமொழி நானூறு என பெயர் வரக் காரணம் கூறுக

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் பழமொழி நானூறு எனப் பெயர் பெற்றது.

2. ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பதற்கு பழமொழி நானூறு கூறும் பழமொழி யாது?

ஒன்றாகு முன்றிலோ இல்

3. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையாக எதனைக் கருதுகின்றன?

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும்.

4. முன்றுறை அரையனார் பற்றி குறிப்பு வரைக

  • பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்
  • காலம் – கி.பி (பொ.ஆ) 4-ம் நூற்றாண்டு
  • சமயம் – சமணம்

5. பழமொழி நானூறு பற்றி குறிப்பு வரைக

  • பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று
  • 400 பாடல்களை கொண்டது.
  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றுள்ளது.

Leave a Comment