[Term-3] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 Thirukkural Book Back Solution

இயல் இரண்டு – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.6 ‘Thirukkural ‘ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 3 Lesson 2.6 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.6 Thirukkural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ” which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Thirukkural subject.

Next Lesson: அணி இலக்கணம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. _______________ ஒரு நாட்டின் அரணன்று.

  1. காடு
  2. வயல்
  3. மலை
  4. தெளிந்த நீர்

விடை : வயல்

2. மக்கள் அனைவரும் _______________ ஒத்த இயல்புடையவர்கள்.

  1. பிறப்பால்
  2. நிறத்தால்
  3. குணத்தால்
  4. பணத்தால்

விடை : பிறப்பால்

3. நாடென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

  1. நான் + என்ப
  2. நா + டென்ப
  3. நாடு + என்ப
  4. நாடு + டென்ப

விடை : நாடு + என்ப

4. கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

  1. கணிஇல்லது
  2. கணில்லது
  3. கண்ணில்லாது
  4. கண்ணில்லது

விடை : கண்ணில்லது

பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.

2. வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
    யானையால் யானையாத் தற்று.

3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்.

விடை:

வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

குறு வினா

1. ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

பொருள், கருவி, காலம் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்து ஆராய்ந்து அறிந்து ஒரு செயலை செய்ய வேண்டும்.

2. ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?

தெளிந்த நீர், நிலம், மலை, நிழல் உடைய காடு – ஆகிய நான்கும் ஒரு நாட்டிற்கு அரணாக அமையும்

3. சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

மிக்க பசி, ஓயாத நோய், அழிவு செய்யும் பகை சேராமல் நல்வகையில் நடைபெறுவதே நாடு ஆகும். பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடு ஆகும்.

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக

Samacheer Kalvi 7th Tamil Guide Thirukkural Book Back Solution Poruthamana Thirukurali Eluthuga a
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.
Samacheer Kalvi 7th Tamil Guide Thirukkural Book Back Solution Poruthamana Thirukurali Eluthuga b
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.

 

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஒரு செயலைச் செய்யும் போது மற்றொரு செயலைச் செய்வதற்கு வள்ளுவர் கூறிய உவமை ___________

  1. யானை
  2. புலி
  3. மான்
  4. கொக்கு

விடை : யானை

2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
   யானையால் யானையாத் தற்று இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி

  1. உருவக அணி
  2. உவமை அணி
  3. எடுத்துக்காட்டு உவமை அணி
  4. ஏகதேச உருவக அணி

விடை : உவமை அணி

3. நோய் என்னும் பொருள் தரும் சொல்

  1. உலகம்
  2. செயல்
  3. பிணி
  4. காலம்

விடை : நோய்

4. பிறப்பொக்கும் ___________ உயிர்க்கும்

  1. அனைத்து
  2. மக்கள்
  3. இயல்பு
  4. எல்லா

விடை : எல்லா

5. உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு _____________ செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்.

  1. எளிய
  2. அரிய
  3. புதிய
  4. பழைய

விடை : அரிய

6. தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நான்கும் உள்ளதே _____________ ஆகும்.

  1. கோட்டை
  2. அரண்
  3. வலிமை
  4. வன்மை

விடை : அரண்

குறு வினா

1. கற்றவற்றைக் கற்றவர்முன் தெளிவாகச் சொல்ல வல்லவர் எவ்வாறு மதிக்கப்டுபவார்?

தாம் கற்றவற்றைக் கற்றவர்முன் தெளிவாகச் சொல்ல வல்லவர், கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்.

2. எது பயனில்லாதது என வள்ளூவர் குறிப்பிடுகிறார்?

அரண் எவ்வளவு பெருமையுடையதாக இருந்தாலும், செயல் சிறப்பு இல்லாதவரிடத்தில் அது பயனில்லாதது ஆகும்.

3. எவற்றினால் சிறப்பியல்களால் ஒத்திருப்பதில்லை?

பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை, தீமையாகியச் செயல்களால் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.

4. உயர்ந்த பண்புகளை உடையவர் உரிய நெறிமுறையில் செய்து முடிப்பது என்ன?

உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்.

 

Leave a Comment