Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 Kalvi Alage Alagu Book Back Solution

இயல் 4.1 – கல்வி அழகே அழகு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 4.1 ‘Kalvi Alage Alagu’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 4.1 கல்வி அழகே அழகு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 4.1 Kalvi Alage Alagu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

கல்வி அழகே அழகு பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kalvi Alage Alagu’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Kalvi Alage Alagu  subject.

Previous Lesson: எச்சம்

கல்வி அழகே அழகு பாடல்

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார்

– குமரகுருபரர்

பாடலின் பொருள்

ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அது போலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்கு தேவையில்லை.

நூல் வெளி

  • குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார்.
  • கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.
  • மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
  • நீதிநெறி விளக்கத்தில் 102 வெண்பாக்கள் உள்ளது.
  • இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்கு பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

  • கலன் – அணிகலன்
  • முற்றை – ஒளிர

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கற்றவருக்கு அழகு தருவது _________

  1. தங்கம்
  2. வெள்ளி
  3. வைரம்
  4. கல்வி

விடை : கல்வி

2. கலனல்லால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. கலன் + லல்லால்
  2. கலம் + அல்லால்
  3. கலன் + அல்லால்
  4. கலன் + னல்லால்

விடை : கலன் + அல்லால்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. அழகு

விடை: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

2. கற்றவர்

விடை: கல்வி கற்றவர்கள் உலகில் சிறந்தவராய் விளங்குவார்கள்.

3. அணிகலன்

விடை: மனிதனுக்கு கல்விதான் சிறந்த அணிகலன்

குறு வினா

யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

சிறுவினா

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

  • ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.
  • கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.
  • ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

சிந்தனை வினா

கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

  • நம்முள் புதைந்து கிடைக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும்.
  • பகுத்து அறியும் அறிவைத் தரும்.
  • துன்பம் வரும் தடுத்து நிறுத்தும் அறிவைத் தரும்.
  • மெய்பொருள் காணும் அறிவைத் தரும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “கல்வி அழகே அழகு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. குமரகுருபரர் ____________ காலத்தைச் சேர்ந்தவர்

  1. கி.பி. 15
  2. கி.பி. 17
  3. கி.பி. 18
  4. கி.பி. 16

விடை : கி.பி. 17

2. நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள்  ________

  1. 100
  2. 102
  3. 103
  4. 104

விடை : 102

3. எழில் என்று பொருள் தரும் சொல்

  1. அழகு 
  2. வாய்மை
  3. பொய்
  4. நேர்மை

விடை : எழில்

4. அணிகலன் என்று பொருள் தரும் சொல்

  1. அழகு
  2. வனப்பு
  3. கலன்
  4. பாவை

விடை : அணிகலன்

5. குமரகுருபரரின் படைப்புகளில் பொருந்தாது

  1. சுந்தர் கலிவெண்பா
  2. கயிலைக் கலம்பகம்
  3. சகலகலாவல்லி மாலை
  4. பார்வதியம்மை பிள்ளைத்தமிழ்

விடை : பார்வதியம்மை பிள்ளைத்தமிழ்

குறு வினா

1. நீதிநெறி விளக்கம் பெயர் வரக் காரணம் யாது?

மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.

2. குமரகுருபரரின் படைப்புகள் சிலவற்றைக் கூறுக

சுந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

சிறு வினா

குமரகுருபரர் குறிப்பு எழுதுக

  • பிறந்த ஊர்: ஸ்ரீவைகுண்டம்
  • காலம் : 17 நூற்றாண்டு
  • படைப்புகள்: சுந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

Leave a Comment