Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 Nillam Puthithu Book Back Solution

இயல் 2.3 – நிலம் பொது

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 2.3 ‘Nillam Puthithu’ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 2.3 நிலம் பொது

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 2.3 Nillam Puthithu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

நிலம் பொது வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Nillam Puthithu’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Nillam Puthithu subject.

Previous Lesson: கோணக்காத்துப் பாட்டு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் ____________ மதிக்கின்றனர்.

  1. தாயாக
  2. தந்தையாக
  3. தெய்வமாக
  4. தூய்மையாக

விடை : தாயாக

2. இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. இன் + ஓசை
  2. இனி + ஓசை
  3. இனிமை + ஓசை
  4. இன் + னோசை

விடை : இனிமை + ஓசை

3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. பால்ஊறும்
  2. பாலூறும்
  3. பால்லூறும்
  4. பாஊறும்

விடை : பாலூறும்

தொடரில் அமைத்து எழுதுக.

1. வேடிக்கை

விடை: குழந்தை  விளையாடுவதை தந்தை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

2. உடன்பிறந்தார்

விடை: தர்மன் தன் உடன்பிறந்தார் உடன் மிகுந்த அன்பு வைத்திருந்தான்.

குறு வினா

1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?

  • இந்த பூமிக்கு அணுக்கமாக உள்ள வானம், காற்றின் தூய்மை, நீரின் உயர்வு யாருக்கும் சொந்தமானவை அல்ல.
  • அப்படி இருக்கையில், அவற்றை எவ்வாறு விலை கொடுத்து வாங்க முடியும் என்று சியாட்டல் கூறுகின்றார்.

2. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

  • இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் செவ்விந்தியர்களுப் புனிதமாகும்.
  • இந்தப் பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்கு தாயாகும்.
  • அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள்; அந்த மண்ணும் அவர்களுக்கு உரியதாகும்.

3. எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?

  • செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,
  • எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும்,
  • தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும்

தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.

சிறு வினா

1. நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

  • ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை.
  • இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
  • இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.
  • எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர்; குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.
  • இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும் என நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளார்.

2. எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?

  • இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.
  • மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.
  • மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும்
  • இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்.

நெடு வினா

தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

  • இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்கு புனிதமாகும். எமது மக்கள், இந்தப் பூமியை எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இது எமக்கு தாயாகும்.
  • நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியதாகும். இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க சம்மதிப்பது எனபது மிகவும் இயலாத ஒன்றாகும்.
  • நாங்கள் பூமியை தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும்.
  • நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும். அப்போது தான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.
  • இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவு முறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
  • இப்பூமியின் மீது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீது வந்து விழுவனவே யாகும். மேலும், இப்பூமியின் மீது மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.
  • இந்நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த இறைவனை அவமதிக்கும் செயலாகிவிடும்.
  • நீங்கள் மற்றப் பழங்குடியினரைக் காட்டிலும் முன்கூட்டியே இந்நிலத்தை விட்டுச் செல்லக்கூடும்.

சிந்தனை வினா

நில வளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?

  • துணிகள், நெகிழி, மரத்துண்டுகள், கண்ணாடி, பேப்பர் போன்ற வீடு மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் நேரடியாக நிலத்தில் கொட்டப்படுகின்றன. இவற்றில் சில மட்கும் தன்மை உடையவை; பல மக்காத தன்மை உடையவை,
  • மட்காதப் பொருட்கள் குழிதோண்டி நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு நிலச் சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுத்து நிறுத்துதல்.
  • நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகளால் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகள், உலோகக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை எளிதில் மக்காதவை. இவை நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. அதனால் அவைகளை நிலத்தில் கலக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • கழிவு நீரினைச் சுத்திகரிக்கும்போது திடக் கழிவுகள் அதிகளவு ஏற்படுகின்றன. இவை நிலத்தில் புதைக்கப்படுகின்றன. அல்லது எரிக்கப்படுகின்றன. புதைக்கப்படும்போது அவை நில மாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன. அவைகளை முறையாகச் செயல்படுத்தினால் நில வளத்தைக் காப்பாற்றலாம்.

 

பின்வரும் பகுதியில் “நிலம் பொது” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அமெரிக்காவில் ______________ என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிய் பழங்குடியினர்.

  1. பரம்பிக்குளம்
  2. பூஜேசவுண்ட்
  3. ஆனைமலை
  4. சென்னிமலை

விடை : பூஜேசவுண்ட்

2. _______________ பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் சியாட்டல்

  1. மக்காய்
  2. சுகுவாமிய்
  3. மங்கோலிய
  4. செனட்டில்

விடை : சியாட்டல்

3. பூஜேசவுண்ட் மக்களின் சகோதரிகள் ______________

  1. குதிரைகள்
  2. யானைகள்
  3. மலர்கள்
  4. கழுகுகள்

விடை : மலர்கள்

4. பூஜேசவுண்ட் மக்களின் சகோதரர்களில் பொருந்தாதது

  1. குதிரைகள்
  2. மான்கள்
  3. யானைகள்
  4. கழுகுகள்

விடை : யானைகள்

5. நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மாகளின் _____________ ஆகும். 

  1. குரல்
  2. நினைவுகள்
  3. வாழ்க்கை
  4. ஆதாரம்

விடை : குரல்

6. நிலம் பொது எனும் கட்டுரை பக்தவத்சல பாரதி எழுதிய _____________ எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

  1. அகதிகள்
  2. தமிழ் இனம்
  3. தமிழீழம்
  4. தமிழகப் பழங்குடிகள்

விடை : தமிழகப் பழங்குடிகள்

7. தேவை + ஆனவை என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. தேவை ஆனவை
  2. தேவையானவை
  3. தேவை யானவை
  4. தேவையானவை

விடை : தேவையானவை

8. மறப்பது + இல்லை என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. மறப்பது இல்லை
  2. மறப்பதில்லை
  3. மறப்பது யில்லை
  4. மறப்பதிலை

விடை : மறப்பதில்லை

8. ஊசி + இலை என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. ஊசிஇலை
  2. ஊசியில்லை
  3. ஊசியிலை
  4. ஊச்சில்லை

விடை : ஊசியிலை

சேர்த்து எழுதுக

  1. நிலத்தில் + இருந்த = நிலத்திலிருந்த
  2. உங்கள் + உடையது = உங்களுடையது
  3. பாழ் + ஆக்கு = பாழாக்கு
  4. முறையில் + இருந்த = முறையிலிருந்த

பிரித்து எழுதுக

  1. ஒன்றாகா = ஒன்று + ஆகா
  2. புனிதமானது = புனிதம் + ஆனது
  3. தேவையானவை = தேவை + ஆனவை

சிறு வினா

1. சுகுவாமிஷ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்?

அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர்.

2. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் யார்?

சியாட்டல்

3. சியாட்டல் யாருக்கு கடிதம் எழுதினார்?

அமெரிக்கக் குடியரத்தலைவர்

Leave a Comment