Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 Oodai Book Back Solution

இயல் 2.1 – ஓடை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 2.1 ‘Oodai’ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 2.1 ஓடை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 2.1 Oodai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

ஓடை பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Oodai’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Oodai subject.

Previous Lesson: எழுத்துக்களின் பிறப்பு

ஓடை பாடல்

ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்

(ஓடை ஆட…)

பாட இந்த ஓடை எந்தப்
பள்ளி சென்று பயின்ற தோடி!
ஏடு போதா இதன்கவிக் கார்
ஈடு செய்யப் போரா ரோடி!

(ஓடை ஆட…)

நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி
நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்
கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்
குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி

(ஓடை ஆட…)

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச்
செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்

(ஓடை ஆட…)

– வாணிதாசன்

பாடலின் பொருள்

நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே!கற்களில் உருண்டும் தவழந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்தோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்.

நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது. சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழுவை முழுக்குவது போல் ஒலி எழுப்புகிறது.

நூல்வெளி

  • தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
  • அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர்.
  • இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார்
  • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்
  • கவிஞரேறு, பாவலர்மணி முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.
  • பிரெஞ்சு அரசு இவருக்கு “செவாலியர் விருது” வழங்கியுள்ளது.
  • தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும்.
  • பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள “ஓடை” என்னும் பாடல் “தொடுவானம்” என்னும் நூலில் உள்ளது.

சொல்லும் பொருளும்

  • தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
  • பயிலுதல் – படித்தல்
  • ஈரம் – இரக்கம்
  • நாணம் – வெட்கம்
  • முழவு – இசைக்கருவி
  • செஞ்சொல் – திருந்திய சொல்
  • நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  • புன்செய்  – குறைந்த நீரால் பயிர்கள்  விளையும் நிலம்
  • வள்ளைப்பாட்டு – நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்குச் சென்று கல்வி ____________ சிறப்பு.

  1. பயிலுதல்
  2. பார்த்தல்
  3. கேட்டல்
  4. பாடுதல்

விடை : பயிலுதல்

2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ____________

  1. கடல்
  2. ஓடை
  3. குளம்
  4. கிணறு

விடை : ஓடை

3. நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. நன் + செய்
  2. நன்று + செய்
  3. நன்மை + செய்
  4. நல் + செய்

விடை : நன்மை + செய்

4. நீளுழைப்பு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. நீளு + உழைப்பு
  2. நீண் + உழைப்பு
  3. நீள் + அழைப்பு
  4. நீள் + உழைப்பு

விடை : நீள் + உழைப்பு

5. சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….

  1. சீருக்குஏற்ப
  2. சீருக்கேற்ப
  3. சீர்க்கேற்ப
  4. சீருகேற்ப

விடை : சீருக்கேற்ப

6. ஓடை + ஆட என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………

  1. ஓடைஆட
  2. ஓடையாட
  3. ஓடையோட
  4. ஓடைவாட

விடை : ஓடையாட

குறு வினா

1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

ஓடை கற்களில் உருண்டும், தவழந்தும், நெளிந்தும், சலசல என்று ஒலியெழுப்பியும் அலைகளால் கரையை மோதியும், இடையறாது ஓடுகிறது.

2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் கூறுகிறார்?

ஓடை எழுப்பும் ஒலி, பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முகுக்குவதற்கு உவமையாக வாணிதாசன் கூறுகிறார்

சிறு வினா

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை

  • நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களை செழிக்க செய்கிறது.
  • விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
  • கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
  • குளிர்ச்சியை தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
  • நெஞ்சில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையாழ ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

சிந்தனை வினா

வள்ளைப்பாட்டு என்பது நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?

  • குழந்தையை உறங்க வைக்க பாடப்படுவது – தாலாட்டுப் பாடல்
  •  சிறுவர்கள் விளையாடும் போது பாடுவது – விளையாட்டுப் பாடல்
  • திருமணத்தின் போது பாடுவது – திருமணப் பாடல்
  • களையெடுக்கும் போது பாடுவது – களையெடுப்புப் பாடல்
  • கதிர் அறுக்கும் போது பாடுவது – கதிரறுப்புப் பாடல்
  • பூந்தொடுப்போர், பூப்பறிப்போர் பாடுவது – திருப்பூவல்லி
  • தோழியர் இருவர் விளையாட்டாகப் பாடுவது – திருச்சாழல்
  • இறந்தவர்களுக்காகப் பாடுவது – ஒப்பாரிப் பாடல்
  • பயணம் செய்யும் போது பாடுவது – தெம்மாங்குப் பாடல்
  • எண்ணிக்கையுடன் பாடுவது – ஏற்றப்பாட்டு
  • இரவில் வரும் நிலவை ஆண்பாலாகப் பாவித்துப் பெண்கள் பாடும் பாட்டு – இராவண்டை
  • ஆண்கள் மட்டும் அடிக்கும் கும்மி பாட்டு – ஒயிற்கும்மிப் பாடல்
  • பெண்கள் இணைந்து கும்மி அடித்துப் பாடுவது – கும்மிப்பாடல்
  • மீனவர்கள் பாடுவது – அம்பா பாடல் கோயில் விழாக்களில் பாடுவது – வில்லுப்பாடல்
  • குறவர் பாடுவது – குறத்திப்பாடல்

பின்வரும் பகுதியில் “எழுத்துகளின் பிறப்பு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வள்ளை என்பது ____________  பாடப்படும் பாட்டு

  1. குழந்தை பிறக்கும்
  2. இறப்பின்
  3. நெல் குத்தும்
  4. வேலை செய்யும்

விடை : நெல் குத்தும்

2. நன்செய் என்பது ____________ 

  1. குறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  2. நீர்வளம் இல்லாமல் பயிர்கள் விளையும் நிலம்
  3. தரிசு நிலம்
  4. நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

விடை : நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

3. குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம் 

  1. செம்மண் நிலம்
  2. பாலை நிலம்
  3. புன்செய்
  4. நன்செய்

விடை : நன்செய்

4.வாணிதாசனின் சிறப்புப் பெயர்

  1. பாவலர்மணி
  2. காந்தியக்கவிஞர்
  3. உவமைக்கவிஞர்
  4. புரட்சிகவிஞர்

விடை : பாவலர்மணி

5. ______________ என்பது வாணிதாசனின் இயற்பெயர் 

  1. ராதாகிருஷ்ணன்
  2. ராமகிருஷ்ணன்
  3. அரங்கசாமி
  4. சுப்புரத்தினம்

விடை : அரங்கசாமி

6. வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு

  1. இந்தியா
  2. சீனா
  3. பிரெஞ்சு
  4. இங்கிலாந்து

விடை : பிரெஞ்சு

7. வள்ளைப்பாட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வள்ளைப் + பாட்டு
  2. வள்ளை + பாட்டு
  3. வெள்ளைப் + பாட்டு
  4. வெள்ளை + பாட்டு

விடை : வள்ளை + பாட்டு

8. செஞ்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. செஞ் + சொல்
  2. செம்மை + சொல்
  3. செஞ்ச் + சொல்
  4. செம் + சொல்

விடை : செம்மை + சொல்

9. நீரோடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நீர் + ஒடை
  2. நீர் + ரோடை
  3. நீர் + ஓடை 
  4. நீரோ + ஓடை

விடை : செம்மை + சொல்

குறு வினா

1. வாணிதாசன் அறிந்திருந்த மொழிகளை கூறுக

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு

2. வாணிதாசனின் படைப்புகளில் சிலவற்றை கூறுக

தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்

3. வாணிதாசன் – குறிப்பு வரைக

  • சிறப்பு பெயர் : தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்.  கவிஞரேறு, பாவலர்மணி
  • இயற்பெயர் : அரங்கசாமி (எ) எத்திராசலு
  • பாரதிதாசனின் மாணவர்
  • அறிந்துள்ள மொழிகள் : தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு
  • விருது : செவாலியர் விருது (பிரெஞ்சு அரசு)
  • படைப்புகள் : தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்

Leave a Comment