Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.2 Padarinthu Oluguthal Book Back Solution

இயல் 5.2 – பாடறிந்து ஒழுகுதல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 5.2 ‘Padarinthu Oluguthal’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 5.2 பாடறிந்து ஒழுகுதல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 5.2 Padarinthu Oluguthal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

பாடறிந்து ஒழுகுதல் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Padarinthu Oluguthal’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Padarinthu Oluguthal subject.

Previous Lesson: பல்துறைக் கல்வி

பாடறிந்து ஒழுகுதல் பாடல்

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்ததாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

– நல்லந்துவனார்

பாடலின் பொருள் 

இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல். நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.

நூல் வெளி

  • கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்.
  • குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
  • கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  • நெய்தற்கலிப் பாடல்கள் இயற்றியவரும் இவரே.

சொல்லும் பொருளும் 

அலந்தவர் – வறியவர்
செறாஅமை – வெறுக்காமை
கிளை – உறவினர்
பேதையார் – அறிவற்றவர்
நோன்றல் – பொறுத்தல்
மறாஅமை – மறவாமை
போற்றார் – பகைவர்
பொறை – பொறுமை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பசியால் வாடும் ____________ உணவளித்தல் நமது கடமை.

  1. பிரிந்தவர்க்கு
  2. அலந்தவர்க்கு
  3. சிறந்தவர்க்கு
  4. உயர்ந்தவர்க்கு

விடை : அலந்தவர்க்கு

2. நம்மை ____________ப் மபொறுத்துக் கொள்ள வேண்டும்.

  1. இகழ்வாரை
  2. அகழ்வாரை
  3. புகழ்வாரை
  4. மகிழ்வாரை

விடை : இகழ்வாரை

3. மறைபொருளைக் காத்தல் ____________ எனப்படும்.

  1. சிறை
  2. அறை
  3. கறை
  4. நிறை

விடை : நிறை

4. பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. பாட் + அறிந்து
  2. பா + அறிந்து
  3. பாடு + அறிந்து
  4. பாட்டு + அறிந்து

விடை : பாடு + அறிந்து

5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

  1. முறையப்படுவது
  2. முறையெனப்படுவது
  3. முறைஎனப்படுவது
  4. முறைப்படுவது

விடை : முறையெனப்படுவது

குறு வினா

1. பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

  • பண்பு என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
  • அன்பு என்பது உறவினர்களோடு வெறப்பின்றி வாழ்தல்.

2. முறை, பொறை என்பவற்றுக்குக கலித்தொகை கூறும் விளக்கம் யாது?

  • முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்
  • பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.

சிறு வினா

நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.

  • இல்வாழ்க்கை என்பது ஏழைகளுக்கு உதவி செய்தல்.
  • பாதுகாத்தல் என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
  • அன்பு என்பது உறவினர்களோடு வெறப்பின்றி வாழ்தல்.
  • அறிவு என்பது அறிவற்றவர்கள் கூறும் சொற்களை பொறுத்தல்.
  • செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
  • நிறை என்பது மறைபொருளை அழியாமல் காத்தல்.
  • முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
  • பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.

இத்தகைய பண்புகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.

சிந்தனை வினா

நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.

உண்மை, உழைப்பு,நேர்மை, அன்பு, அறம்,சினம் கொள்ளாமை, புறம் கூறாமை, தன்னம்பிக்கை, ஊக்கப்படுத்துதல், பொறாமை கொள்ளாமை, ஏழைகளுக்கு உதவுதல், பெரியோரை மதித்தல், மனிதநேயத்துடன் இருத்தல், பிறர் செய்யும் பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் ஆகியன வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நாங்கள் கருகின்றோம்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பாடறிந்து ஒழுகுதல் ” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கலித்தொகை _____________ நூல்களுள் ஒன்று.

  1. பதினெண்மேல்கணக்கு
  2. பதினெண்கீழ்கணக்கு
  3. எட்டுத்தொகை
  4. பத்துப்பாட்டு

விடை : எட்டுத்தொகை

2. கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை

  1. 401
  2. 400
  3. 151
  4. 150

விடை : 150

3. கலித்தொகையை தொகுத்தவர்

  1. நல்லந்துவனார்
  2. ஓரம்போகியார்
  3. பெருங்கடுங்கோ
  4. அம்மூவணார்

விடை : நல்லந்துவனார்

4. கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர்

  1. ஓரம்போகியார்
  2. பெருங்கடுங்கோ
  3. நல்லந்துவனார்
  4. அம்மூவணார்

விடை : நல்லந்துவனார்

5. அலந்தவர் என்பதற்கு ……………… என்று பொருள்

  1. பகைவர்
  2. உறவினர்
  3. வறியவர்
  4. அறிவற்றவர்

விடை : வறியவர்

6. நோன்றல் என்பதற்கு ……………… என்று பொருள்

  1. பகைவர்
  2. வறியவர்
  3. பொறுத்தல்
  4. மறுத்தல்

விடை : பொறுத்தல்

7. போற்றார் என்பதற்கு ……………… என்று பொருள்

  1. பகைவர்
  2. வறியவர்
  3. உறவினர்
  4. அறிவற்றவர்

விடை : பகைவர்

8. பொறை என்பதற்கு ……………… என்று பொருள்

  1. பகைவர்
  2. வறுமை
  3. பொறுமை
  4. அறிவற்றவர்

விடை : பொறுமை

சிறு வினா

1. நல்லந்துவனார் – குறிப்பு வரைக

  • கலித்தொகையைச் தொகுத்த நல்லந்துவனார் சங்க காலப் புலவர்களுள் ஒருவர்
  • கலித்தொகையின் நெய்தல்கலிப் பாடல்களை இயற்றியவர்

2. கலித்தொகையின் பிரிவுகளை எழுதுக

குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி

3. கலித்தொகை குறிப்பு வரைக

  • கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
  • கலிப்பா என்னும் பாவகையால் ஆனது
  • 150 பாடல்களை கொண்டது
  • குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
  • கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார்

Leave a Comment