Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.1 Thiruketharam Book Back Solution

இயல் 5.1 – திருக்கேதாரம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 5.1 ‘Thiruketharam’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 5.1 திருக்கேதாரம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 5.1 Thiruketharam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

திருக்கேதாரம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thiruketharam’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Thiruketharam subject.

Previous Lesson: வேற்றுமை

திருக்கேதாரம் பாடல் பொருள்

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே.

– சுந்தரர்

பாடலின் பொருள்

பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும். நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.

நூல் வெளி

  • சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
  • “நம்பியாரூரர், தம்பிரான் தோழர்” என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
  • இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தளித்தார்.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
  • இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
  • இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
  • தே + ஆரம் – இறைவனுக்குச் சூடப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
  • பதிகம் என்பது பத்துப் பாடல்களை கொண்டது.

சொல்லும் பொருளும் 

  • பண் – இசை
  • கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
  • மதவேழங்கள் – மதயானைகள்
  • முரலும் – முழங்கும்
  • பழவெய் – முதிர்ந்த மூங்கில்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கொட்டிலிருந்து வந்த ______________ கரும்பைத் தின்றன.

  1. முகில்கள்
  2. முழவுகள்
  3. வேழங்கள்
  4. வேய்கள்

விடை : வேழங்கள்

2. கனகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. கனகச் + சுனை
  2. கனக + சுனை
  3. கனகம் + சுனை
  4. கனம் + சுனை

விடை : கனகம் + சுனை

3. முழவு + அதிர என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________

  1. முழவுதிர
  2. முழவுதிரை
  3. முழவதிரி
  4. முழவுஅதிர

விடை : முழவதிர

குறு வினா

தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

புல்லாங்குழல் மற்றும் முழுவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுகின்றார்

சிறு வினா

திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

  • பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
  • கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.
  • நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.
  • இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்.

சிந்தனை வினா

விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.

திருவிழாக் கூட்டத்தில் இரைச்சலைக் குறைக்கவும், திருவிழா நிகழ்வு நடக்கப்போகிறது என்பதை அறிவிக்கவும், இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அந்த உயிர்களைப் படைத்த இறைவன் இசையை விரும்புவான். அதனால் விழாக்களின் போது இசைக்கருவிகள் இசைக்கும் வழகம் ஏற்பட்டிருக்கலாம். இசைக்கருவிகளை இசைக்கும்போது உணர்ச்சிப் பெருக்கும், பக்திப் பெருக்கம் ஏற்படுவதாலும் விழாக்களின் போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் தோன்றியிருக்கும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்கேதாரம் ” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டவர் ______________

  1. சுந்தரர்
  2. திருநாவுக்கரசர்
  3. மாணிக்கவாசகர்
  4. திருஞானசம்பந்தரர்

விடை : சுந்தரர்

2. தேவாரத்தைத் தொகுத்தவர் ______________

  1. திருநாவுக்கரசர்
  2. மாணிக்கவாசகர்
  3. திருஞானசம்பந்தரர்
  4. நம்பியாண்டார் நம்பி

விடை : நம்பியாண்டார் நம்பி

3. பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர்

  1. திருநாவுக்கரசர்
  2. மாணிக்கவாசகர்
  3. சுந்தரர்
  4. திருஞானசம்பந்தரர்

விடை : சுந்தரர்

4. பதிகம் என்பது ___________ பாடல்களை கொண்டது

  1. ஏழு
  2. எட்டு
  3. ஒன்பது
  4. பத்து

விடை : பத்து

5. பண் என்ற சொல்லின் பொருள்

  1. பற்று
  2. பாசம்
  3. இசை
  4. நாடகம்

விடை : இசை

6. முரலும் என்ற சொல்லின் பொருள்

  1. நடுங்கும்
  2. பிளிறும்
  3. முழங்கும்
  4. கூவும்

விடை : முழங்கும்

7. வெய் என்ற சொல்லின் பொருள்

  1. நெல்
  2. கரும்பு
  3. மூங்கில்
  4. கோதுமை

விடை : மூங்கில்

8. மதவேளங்கள் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. மத + வேளங்கள்
  2. மதம் + வளங்கள்
  3. மதம் + வேளங்கள்
  4. மத + வளங்கள்

விடை : மதம் + வேளங்கள்

குறு வினா

1. தேவாரத்தை பாடியவர்கள் யார்?

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

2. சுந்தரர் குறிப்பு வரைக

  • சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
  • நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.

Leave a Comment