Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 Tamil Varivadiva Valarchi Book Back Solution

இயல் மூன்று – தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 1.3 ‘Tamil Varivadiva Valarchi ‘ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 1.3 Tamil Varivadiva Valarchi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

தமிழ் வரிவடிவ வளர்ச்சி வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Tamil Varivadiva Valarchi’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Tamil Varivadiva Valarchi subject.

Previous Lesson: தமிழ்மொழி மரபு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ……………………… காரணமாக அமைந்தது?

  1. ஓவியக்கலை
  2. இசைக்கலை
  3. அச்சுக்கலை
  4. நுண்கலை

விடை : அச்சுக்கலை

2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து …………………… என அழைக்கப்படுகிறது?

  1. கோட்டெழுத்து
  2. வட்டெழுத்து
  3. சித்திர எழுத்து
  4. ஓவிய எழுத்து

விடை : வட்டெழுத்து

3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் …………………

  1. பாரதிதாசன்
  2. தந்தை பெரியார்
  3. வ.உ. சிதம்பரனார்
  4. பெருஞ்சித்திரனார்

விடை : தந்தை பெரியார்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் _______________ என அழைக்கப்பட்டன.

விடை : கண்ணெழுத்துக்கள்

2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் _______________

விடை : வீரமாமுனிவர்

குறு வினா

1. ஓவிய எழுத்து என்றால் என்ன?

தொடக்க காலத்தில் எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தால் அதனை ஓவிய எழுத்து என்பர்.

2. ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?

ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.

3. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்.

நேர்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்து விடும்.

ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலவில்லை

4. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக

ஒகர வரிசை எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார்.

“எ” என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு “ஏ” என்னும் எழுத்தை நெடிலாகவும் “ஒ” என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு “ஓ” என்னும் எழுத்தாக உருவாக்கினார்

சிறு வினா

1. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.

  • ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
  • ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
  • புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
  • இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

2. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.

  • நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (ர) பயன்படுகின்றது.
  • ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு (ை) பயன்படுகின்றது.
  • ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.
  • குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது.

நெடு வினா

எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

  • மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.
  • அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
  • தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
  • அடுதத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது.
  • அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து

சிந்தனை வினா

1. தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

  • தமிழராய் பிறந்தோர் அனைவரும் தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.
  • தமிழ்மொழியில் தோன்றிய இலக்கண, இலக்கிங்கள் மற்றும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் போன்ற அனைத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.
  • பழைமையைப் பேணுவதுடன், புதுமை காணும் நோக்கத்துடன் வெளிவரும் படைப்பிலக்கியங்களையும் அவற்றைப் படைப்போரையும் பேணும் நிலை வர வேண்டும்.
  • பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழிலேயே வெளியிட வேண்டும். கலைச்சொற்கள் புதிதாகப் படைக்கப்பட வேண்டும்

2. தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.

அருள் “அம்மா இங்கே வா” என்பதை amma ingkee vaa  என்று ஆங்கில எழுத்துக்களில் தமிழை எழுதுவது மிகும் தவறு.
செல்வி நான் எப்போதும் கைபேசியில் யாருக்காவது வாழ்த்து சொல்வதை Valthukal  என்று தான் சொல்வேன்.
மாலா மலாய் மொழியில் எல்லாம் ஆங்கில எழுத்துருவில் தான் அனைவரும் எழுதுகிறார்கள். என் அத்தை கூட இதனை அடிக்கடி கூறுவார்கள்.
ஆனந்தி இணையத்தில், முகநூலில், கட்செவி அஞ்சலில் எழுதும்போது சிறிதாக எழுதுவதற்கு ஆங்கி எழுத்துருவைப் பயன்படுத்தில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
ஆலன் எப்படி தவறில்லை? என்று கூறலாம், உலகில் உள்ள அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் தமிழில் பெயரிட்டுள்ளனர். இன்று இணையத்தில் அதிகம் தேடப்படும். பயன்படுத்தப்படும் எட்டு மொழிகளில் ஒன்றாகத் தமிழ் திகழ்ந்து வருகிறது. தமிழின் பெருமை கடல் கடந்தும் கோலோச்சி வருகிறது. தமிழை நாம் எழுதும்போது தமிழ் எழுத்துருவில் தான் எழுத வேண்டும். “வாழ்த்துக்கள்” என்றும் “அம்மா இங்கே வா வா” என்றும் தமிழில் எழுதுவற்கு பாமினி, இளங்கோ, ஸ்ரீலிபி, அமுதம், வானவில், அழகி போன்ற இணைய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம்.

வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தமிழ் வரிவடிவ வளர்ச்சி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும், கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க ________________ பயன்படுத்தினான்.

  1. ஒலியை
  2. ஒளியை
  3. பொருளை
  4. சைகைகளை

விடை : சைகைகளை

2. எழுத்து வடிவத்தை ____________ என்பர்

  1. ஓவிய எழுத்து
  2. ஒளி எழுத்து
  3. வட்டெழுத்து
  4. கண்ணெழுத்து

விடை : ஓவிய எழுத்து

3. கல்வெட்டுகளில் காணப்படும் வட மொழி எழுத்து

  1. ஸ்ரீ

விடை : ஸ

4. தமிழ் எழுத்துக்களின் __________ வரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும்  காண முடிகிறது.

  1. புதிய
  2. நிலைத்த
  3. பழைய
  4. தொலைந்த

விடை : பழைய

5. கல்வெட்டுகள் கி.மு. _________ம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

  1. 4
  2. 3
  3. 5
  4. 6

விடை : 3

6. செப்பேடுகள் கி.மு. _________ம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

  1. 5
  2. 4
  3. 2
  4. 7

விடை : 7

7. சிலப்பதிகாரம் _________ பற்றிக் குறிப்பிடும் நூல்

  1. ஓவிய எழுத்துக்கள்
  2. கண்ணெழுத்துக்கள்
  3. பேச்சு வழக்குகள்
  4. வரிவடிவ எழுத்துக்கள்

விடை : கண்ணெழுத்துக்கள்

8. _________ நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தத்தை  செய்தார் வீரமாமுனிவர்

  1. 10
  2. 20
  3. 15
  4. 5

விடை : 20

9. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கிலிருந்தன என்தற்கு சான்று _________

  1. அரச்சலூர் கல்வெட்டு
  2. ஆதிச்சநல்லூர் கல்வெட்டு
  3. கீழடி கல்வெட்டு
  4. மண்ணடி கல்வெட்டு

விடை : அரச்சலூர் கல்வெட்டு

10. தமிழ் மொழியை எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் _________ காலம் முதல் இருந்து வந்துள்ளது.

  1. தொல்காப்பியர்
  2. அகத்தியர்
  3. திருவள்ளூவர்
  4. வள்ளலார்

விடை : தொல்காப்பியர்

11. சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றறாண்டு முதல் ______________ நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே  இடம் பெற்றுள்ளன.

  1. 12-ம்
  2. 11-ம்
  3. 13-ம்
  4. 14-ம்

விடை : 11-ம்

12. கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி பாடல் வரிகள் இடம் பெற்றுள நூல்

  1. திருக்குறள்
  2. மணிமேகலை
  3. சிலப்பதிகாரம்
  4. புறநானூறு

விடை : சிலப்பதிகாரம்

13. காலந்தோறும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. காலந் + தோறும்
  2. காலம் + ஊறும்
  3. காலம் + தோறும்
  4. காலந் + ஊறும்

விடை : காலம் + தோறும்

13. வழக்கிலிருந்த என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வழக்கில் + லிருந்த
  2. வழக்கில்லி + ருந்த
  3. வழக்கில் + இருந்த
  4. வழக்கிலி + ருந்த

விடை : வழக்கில் + இருந்த

14. சிலப்பதிகாரம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. சிலப்பு + அதிகாரம்
  2. சில + அதிகாரம்
  3. சிலம்பு + அதிகாரம்
  4. சிலம்ப் + அதிகாரம்

விடை : சிலம்பு + அதிகாரம்

15. கண் + எழுத்துக்கள் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. கண் எழுத்துக்கள்
  2. கன்னெழுத்துக்கள்
  3. கண்ணெழுத்துக்கள்
  4. கண் எழுத்துக்கல்

விடை : கண்ணெழுத்துக்கள்

16. சான்று + ஆகும் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. சான்றாகும்
  2. சான்று ஆகும்
  3. சான்று றாகும்
  4. சான்று ஆகும்

விடை : சான்றாகும்

பிரித்து எழுதுக

  • இப்போதுள்ள =  இப்போது + உள்ள
  • பெற்றுள்ளன = பெற்று + உள்ளன
  • தமிழெழுத்து = தமிழ் + எழுத்து
  • வட்டெழுத்து = வட்டம் + எழுத்து
  • காலத்திற்கேற்ப = காலத்திற்கு + ஏற்ப
  • அடைந்திருக்கின்றன = அடைந்து + இருக்கின்றன
  • செப்பேடு = செப்பு + ஏடு
  • இடருற்றனர் = இடர் + உற்றனர்

குறு வினா

1. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க பயன்படுத்தியது எது?

மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியை பயன்படுத்தினான். மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துக்களை உருவாக்கினான்.

2. தமிழ் எழுத்துக்கள் எப்போது நிலையான வடிவத்தை பெற்றன?

அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தை பெற்றன

3. வீரமாமுனிவரால்  தமிழில் மேற்கொண்டஎழுத்துச்சீரத்திருத்தங்களை கூறுக

எ் ஒ் கெ் கெ கெ்ா கொ
கெ கே கொ கோ

4. கல்வெட்டுகளில் எழுதப்பட்ட எழுத்துகளின் அமைப்புகளை விவரிக்க

  • ‘ஸ’ எனும் வடமாெழி எழுத்து காணப்படுகிறது.
  • மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
  • எகர, ஒகரக குறில் நெடில் வேறுபாடில்லை.

Leave a Comment