Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 Tamilmozhi Marabu Book Back Solution

இயல் மூன்று – தமிழ்மொழி மரபு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 ‘Tamilmozhi Marabu’ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 1.2 தமிழ்மொழி மரபு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 1.2 Tamilmozhi Marabu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

தமிழ்மொழி மரபு பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Tamilmozhi Marabu’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Tamilmozhi Marabu subject.

Previous Lesson: தமிழ்மொழி வாழ்த்து

தமிழ்மொழி மரபு பாடல்

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்

– தொல். 1579

மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை
மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன

– தொல். 1580

மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்

– தொல். 1581

– தொல்காப்பியர்

பாடலின் பொருள்

இவவுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும் . உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுததிக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.

திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும்பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

நூல் வெளி

  • தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
  • தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
  • இந்நூல் எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
  • பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92, 93) இஙகுத் தரப்பட்டுள்ளன.

தெரிந்து தெளிவோம்

இளமைப்  பெயர்கள்

  • புலி – பறழ்
  • சிங்கம் – குருளை
  • யானை – கன்று
  • பசு – கன்று
  • கரடி – குட்டி

ஒலி மரபு

  • புலி – உறுமும்
  • சிங்கம் – முழங்கும்
  • யானை – பிளிறும்
  • பசு – கதறும்
  • கரடி – கத்தும்

சொல்லும் பொருளும்

  • விசும்பு – வானம்
  • மரபு – வழக்கம்
  • மயக்கம் – கலவை
  • திரிதல் – மாறுபடுதல்
  • இருதிணை – உயர்திணை, அஃறிணை
  • செய்யுள் – பாட்டு
  • வழாஅமை – தவறாமை
  • தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
  • ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பறவைகள் ____________ பறந்து செல்கின்றன.

  1. நிலத்தில்
  2. விசும்பில்
  3. மரத்தில்
  4. நீரில்

விடை : விசும்பில்

2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் ____________

  1. மரபு
  2. பொழுது
  3. வரவு
  4. தகவு

விடை : மரபு

3. இருதிணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. இரண்டு + திணை
  2. இரு + திணை
  3. இருவர் + திணை
  4. இருந்து + திணை

விடை : இரண்டு + திணை

4. ஐம்பால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. ஐம் + பால்
  2. ஐந்து + பால்
  3. ஐம்பது + பால்
  4. ஐ + பால்

விடை : ஐந்து + பால்

குறு வினா

1. உலகம் எவற்றால் ஆனது?

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐந்தால் உலகம் ஆனது

2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

செய்யுளில் மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்

சிந்தனை வினா

நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

மனிதன் தன் வாழ்நாளில் நல்லமுறையில் வாழ்ந்து, தான் வாழ்ந்தற்கான அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறான். அவ்வகையில் பழந்தமிழர் தம் வாழ்வில் கடைபிடித்து தமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டை மரபுகளாக பின்பற்றுவது நமது கடமையாகும். அதனால் தான் நம் முன்னோர்கள் மரபுகளை பின்பற்றி வந்தனர். மரபு மாறினால் பொருள் மாறிவிடும் பண்பாடும் அர்த்தமற்று போய்விடும். எனவே, நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் இதுவாகத் தான் இருக்கும் என் கருதுகிறேன்.

பின்வரும் பகுதியில் “தமிழ்மொழி மரபு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ____________ எனப்படும்.

  1. செல்வம்
  2. ஒழுக்கம்
  3. அறிவு
  4. சிறப்பு

விடை : ஒழுக்கம்

2. மொழிக்குரிய ஒழுங்குமுறை ____________ எனப்படும்.

  1. செல்வம்
  2. அறிவு
  3. சிறப்பு
  4. மரபு

விடை : மரபு

3. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ____________ ஆகும்.

  1. திருக்குறள்
  2. தொல்காப்பியம்
  3. நன்னூல்
  4. சிலப்பதிகாரம்

விடை : தொல்காப்பியம்

4. தொல்காப்பியம் ____________ அதிகாரங்களை கொண்டுள்ளது.

  1. 4
  2. 2
  3. 5
  4. 3

விடை : 3

5. செய்யுளுக்கு மரபுக்கும் உள்ள தொடர்பை பற்றி ____________ கூறுகிறது.

  1. தொல்காப்பியம்
  2. குறுந்தொகை
  3. சங்கநூல்
  4. நற்றிணை

விடை : தொல்காப்பியம்

6. ஐம்பால் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. ஐந்து + பால்
  2. ஐ + பால்
  3. ஐம் + பால்
  4. ஐந்துப் + பால்

விடை : தொல்காப்பியம்

7. இவ்வுலகம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. இவ் + உலகம்
  2. இவ் + வுலகம்
  3. இ + உலகம்
  4. இ + வுலகம்

விடை : இ + உலகம்

விடை : தொல்காப்பியம்

8. மயக்கம் என்பதன் பொருள்

  1. வானம்
  2. கலவை
  3. பூமி
  4. தெளிவு

விடை : கலவை

9. திரிதல் என்பதன் பொருள்

  1. ஒன்றுபடுதல்
  2. மாறுபடுதல்
  3. பாட்டு
  4. தெளிவு

விடை : மாறுபடுதல்

10. பொருந்தாவற்றை தேர்க

  1. புலி – பறழ்
  2. சிங்கம் – குட்டி
  3. யானை – கன்று
  4. ஆடு – குட்டி

விடை : சிங்கம் – குட்டி

11. பொருந்தாவற்றை தேர்க

  1. புலி – உறுமும்
  2. சிங்கம் – முழங்கும்
  3. யானை – கதறும்
  4. ஆடு – கத்தும்

விடை : யானை – கதறும்

குறு வினா

1. தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள அதிகாரங்களை எழுதுக

எழுத்து, சாெல், பொருள்

2. ஐம்பூதங்கள் யாவை?

நிலம், நீர், காற்று, தீ, வானம்

3. உயிரளபெடை என்பது என்ன?

செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். இது உயிரளபெடை எனப்படும்

4. தொல்காப்பியம் – குறிப்பு வரைக

  • ஆசிரியர் – தொல்காப்பியர்.
  • மிகப் பழமையான இலக்கண நூல்
  • எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.

Leave a Comment