Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.4 Thalaikul Oru Ulagam Book Back Solution

இயல் 3.4 – தலைக்குள் ஓர் உலகம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 3.4 ‘Thalaikul Oru Ulagam’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 3.4 தலைக்குள் ஓர் உலகம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 3.4 Thalaikul Oru Ulagam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

தலைக்குள் ஓர் உலகம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thalaikul Oru Ulagam’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Thalaikul Oru Ulagam subject.

Previous Lesson: தமிழ் மருத்துவம்

நூல்வெளி

  • சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும்.
  • இவர் சிறுகதைகள், புதினங்கள் நாடகங்கள், அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக்கதை வசனம் எனப் பல துறைகளில் பணியாற்றிவர்.
  • மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.
  • என் இனிய எந்திரா, மீண்டம் ஜீனோ, ஸ்ரீரங்ககத்துத் தேவைகள், தூண்டில் கதைகள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • இவரது தலைமைச்செயலகம் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்துக் தரப்பட்டுள்ளன.

மதிப்பீடு

மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.

முன்னுரை

உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை, புதிரானவை அவற்றை பற்றிக் காண்போம்.

இடப்பாகச் செயல்

மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலனவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்கான காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியனா பாதிப்பினால்தான் என்று கூறுவார்கள். இடது பாதிதான் பேச எழுத கணக்கிட தர்க்க ரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெலலாம் இடது பகுதி பாரத்துக் கொள்கிறது. நம் மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே.

வலப்பாகச் செயல்

இடது பாதி அண்ணன் என்றால் வலது பாதி தம்பி போன்றது. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது நடிப்பது போன்ற கலை தொடர்பானவை. எல்லாம் வலது பாதியில் தான். வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம். வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்களாக, பாடகர்களாக, நடனக் கலைஞர்களாக, இசைக்கருவிகளை கையாளுபவர்களாக, கலைத்திறன்கள் பெற்றவர்களாகத் திகழ்வர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்களாக, கணக்கு ஆசிரியர்களாக, இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்களாக திகழ்வர்.

முடிவுரை

இடதும், வலதும் கலந்து இருப்பவர்களும் உண்டு. நன்முறையில் கல்வி கற்றால் உடலியக்கம் மற்றும் மன இயக்கத்திற்குக் காரணமான மூளை, நம் செயல்பாடுகளைத் தூண்டி நம்மை உயர்வடையச் செய்யும். 

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தலைக்குள் ஓர் உலகம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மூளை ______________ இருந்து முளைக்கிறது

  1. முதுகுத் தண்டில்
  2. கல்லீரலில்
  3. நுரையீரலீல்
  4. மண்டையோட்டில்

விடை: முதுகுத் தண்டில்

2.  ______________ மூளை நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது

  1. சிறுமூளை
  2. பெருமூளை
  3. நடுமூளை
  4. முன்மூளை

விடை: சிறுமூளை

3. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு ___________ குருதி தேவைப்படுகிறது. 

  1. 600 மி.லி.
  2. 400 மி.லி.
  3. 800 மி.லி.
  4. 900 மி.லி.

விடை: 800 மி.லி.

4. சுமார் _________ நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம்

  1. 65
  2. 40
  3. 25
  4. 90

விடை: 90

4. சுமார் _________ நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம்

  1. 65
  2. 40
  3. 25
  4. 90

விடை: 90

5. சுஜாதாவின் இயற்பெயர் _____________ என்பதாகும்.

  1. ரங்கநாதன்
  2. ரங்கராஜன்
  3. நாகராஜன்
  4. நாககுமரன்

விடை: ரங்கராஜன்

6. மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் ___________ முக்கிய பங்கு ஆற்றியவர்.

  1. முத்துவேலன்
  2. சுஜாதா
  3. நாகராஜன்
  4. நாககுமரன்

விடை: சுஜாதா

6. சுஜாதாவின் படைப்புகளில் பொருந்தாதது

  1. என் இனிய எந்திரா
  2. தலைமைச்செயலகம்
  3. ஸ்ரீரங்ககத்துத் தேவைகள்
  4. தூண்டில் மீன்கள்

விடை: தூண்டில் மீன்கள்

 

குறுவினா

1. முதுகெலும்பு செய்யும் வேலைகள் கூறுக

ஏப்பம் விடுவது, இருமல், தும்மல், கொட்டாவி, வாந்தி

2. மூளையின் இடது பாகத்தின் பணிகளை கூறுக

  • பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது
  • அறிவாற்றல், பிரச்சனைகளை அலுசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையும் இடது பகுதி பார்த்துக் கொள்கிறது.
  • நம் மொழி அறிவு கூட இடது பகுதி ஆகும்.

3. மறதி என்றால் என்ன?

மறதி என்பது சில நினைவுகள், மற்ற நினைவுகளுடன் குறுக்கிட்டு அவற்றை அழிப்பதாகும்.

4. மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை நாட்கள் தூங்குகிறான்?

சராசரி மனிதன் தனது வாழ்நாளில் இருபது வருடம் தூங்குகிறான்.

5. சராசரி மனிதன் எத்தனை கனவுகள் காண்கிறான்?

மூன்று லட்சம்

Leave a Comment