Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 Thirukural Book Back Solution

இயல் 2.6 – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 2.6 ‘Thirukural’ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 2.6 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 2.6 Thirukural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirukural’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Thirukural subject.

Previous Lesson: வினைமுற்று

நூல்வெளி

  • பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய சிறப்பு பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
  • திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல்
  • அறம், பொருள், இன்பம் என முப்பால் பகுப்புகள் கொண்டது
  • அறத்துபால் பாயிரவியல், இல்லறவியல் துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களை கொண்டது.
  • பொருட்பால் அரசியல், அமைச்சியல் ஒழிபியல் என மூன்று இயல்களை கொண்டது.
  • இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என இரு இயல்களை கொண்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____________

  1. அடக்கமுடைமை
  2. நாணுடைமை
  3. நடுவு நிலைமை
  4. பொருளுடைமை

விடை : நடுவு நிலைமை

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____________

  1. வலிமையற்றவர்
  2. கல்லாதவர்
  3. ஒழுக்கமற்றவர்
  4. அன்பில்லாதவர்

விடை : கல்லாதவர்

3. வல்லுருவம் என்னும் சொல்லை  பிரித்து எழுதக் கிடப்பது _____________

  1. வல் + உருவம்
  2. வன்மை  + உருவம்
  3. வல்ல + உருவம்
  4. வல்லு + உருவம்

விடை : வன்மை  + உருவம்

4. நெடுமை + தேர் என்பதை்சேர்த்து எழுத கிடக்கும் சொல் _____________

  1. நெடுதேர்
  2. நெடுத்தேர்
  3. நெடுந்தேர்
  4. நெடுமைதேர்

விடை : நெடுந்தேர்

5. வருமுன்னர் எனத்  தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ………………

  1. எடுத்துக்காட்டு உவமை அணி
  2. தற்குறிப்பேற்று  அணி
  3. உவமை  அணி
  4. உருவக அணி

விடை : உவமை  அணி

குறு வினா

1. சான்றோர்க்கு அழகாவது எது?

துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

2. பழியின்றி வாழும் வழியாக, திருக்குறள் கூறுவது யாது?

தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன் பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

3. புலித் தோல் போர்த்திய பசு என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

மனத்தை அடக்கும் வல்லமை இல்லதாவர் மேற்கொண்ட தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரெ ன்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

கோடிட்ட  இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் _____________
   புலியின்தோல் _____________ மேய்ந் தற்று.

விடை: பெற்றம், போர்த்த

2. விலங்கொடு _____________ அனையர் _____________
   கற்றாரோடு ஏனை யவர்

விடை: மக்கள், இலங்குநூல்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு

விடை:
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Guide Thirukural - Poruthaman Thirukuralai Eluthuga b

விடை:

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

Samacheer Kalvi 8th Tamil Guide Thirukural - Poruthaman Thirukuralai Eluthuga a

விடை:

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. _____________ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

  1. பாரதியார்
  2. திருவள்ளுவர்
  3. பாரதிதாசன்
  4. ஓளவையார்

விடை : திருவள்ளுவர்

2. 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் _____________

  1. புறநானூறு
  2. தொல்காப்பியம்
  3. சீவகசிந்தாமணி
  4. திருக்குறள்

விடை : திருக்குறள்

3. அறத்துப்பால் இயல்களில் பொருந்தாதது

  1. பாயிரவியல்
  2. இல்லறவியல்
  3. ஆழியல்
  4. துறவறவியல்

விடை : ஆழியல்

5. பொருட்பாலின் இயல்களில் பொருந்தாதது

  1. அரசியல்
  2. அமைச்சியல்
  3. ஒழிபியல்
  4. ஊழியல்

விடை : ஊழியல்

5. இன்பத்துபாலில் உள்ள இயல்கள்

  1. அரசியல், களவியல்
  2. அமைச்சியல், கற்பியல்
  3. அரசியல், அமைச்சியல்
  4. களவியல், கற்பியல்

விடை : களவியல், கற்பியல்

6. _____________உடன் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

  1. ஒருசார்பு
  2. தீய குணம்
  3. நடுவுநிலைமை
  4. நல்ல குணம்

விடை : சான்றோர்க்கு

6.  கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
     நாவாயும் ஓடா நிலத்து பாடலில் பயின்று வந்துள்ள அணி

  1. இல்பொருள் உவமை அணி
  2. ஏகதேச உருவக அணி
  3. பிறிது மொழிதல் அணி
  4. உவமை அணி

விடை : பிறிது மொழிதல் அணி

7. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
 பாடலில் பயின்று வந்துள்ள அணி

  1. இல்பொருள் உவமை அணி
  2. ஏகதேச உருவக அணி
  3. பிறிது மொழிதல் அணி
  4. உவமை அணி

விடை : இல்பொருள் உவமை அணி

8. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
 பாடலில் பயின்று வந்துள்ள அணி

  1. ஏகதேச உருவக அணி
  2. பிறிது மொழிதல் அணி
  3. உவமை அணி
  4. இல்பொருள் உவமை அணி

விடை : உவமை அணி

9. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
 பாடலில் பயின்று வந்துள்ள அணி

  1. ஏகதேச உருவக அணி
  2. பிறிது மொழிதல் அணி
  3. உவமை அணி
  4. இல்பொருள் உவமை அணி

விடை : உவமை அணி

சிறு வினா

1. திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் யாவை?

பெருநாவலர், முதற்பாவலர், நாயனார்

2. திருக்குறளின்  கொண்டுள்ள பகுப்புகள் யாவை?

அறம், பொருள், இன்பம் என மூன்று பகுப்புகளை உடையது

Leave a Comment