Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 Vetrumai Book Back Solution

இயல் 4.5 – வேற்றுமை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 4.5 ‘Vetrumai’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 4.5 வேற்றுமை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 4.5 Vetrumai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

வேற்றுமை வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Vetrumai’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Vetrumai subject.

Previous Lesson: ஆன்ற குடிபிறத்தல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _____________ ஆகும்.

  1. எழுவாய்
  2. செயப்படுபொருள்
  3. பயனிலை
  4. வேற்றுமை

விடை : வேற்றுமை

2. எட்டாம் வேற்றுமை _____________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

  1. எழுவாய்
  2. செயப்படுபொருள்
  3. விளி
  4. பயனிலை

விடை : விளி

3. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும்.

  1. மூன்றாம்
  2. நான்காம்
  3. ஐந்தாம்
  4. ஆறாம்

விடை : மூன்றாம்

4. அறத்தான் வருவதே இன்பம் இத்தொடரில் _____________ வேற்றுமை பயின்று வந்துள்ளது.

  1. இரண்டாம்
  2. மூன்றாம்
  3. ஆறாம்
  4. ஏழாம்

விடை : மூன்றாம்

5. மலர் பானையை வனைந்தாள் இத்தொடர் _____________ பொருளைக் குறிக்கிறது.

  1. ஆக்கல்
  2. அழித்தல்
  3. கொடை
  4. அடைதல்

விடை : ஆக்கல்

பொருத்துக

  1. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்
  2. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர்
  3. ஐந்தாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்
  4. ஆறாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

சிறு வினா

1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.

எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமை என்றும் கூறுவர்.

(எ.கா.) பாவை வந்தாள்.

2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?

கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை

3. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?

வினை கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும். ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.

மொழியை ஆள்வோம்!

கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

  • மா
  • சிட்டு
  • காய்
  • தேன்
  • கனி
  • கூடு
  • மலர்
  • குருவி
  • முட்டை
  • செம்மை
  • இலை
  • மரம்

1. மா

விடை: மாவிலை, மாமரம், மாங்காய்

2. தேன்

விடை: மலர்த்தேன், தேன்சிட்டு, தேன் கூடு

3. மலர் 

விடை: தேன்மலர்

4. செம்மை

விடை: சேயிலை, செங்குருவி, செந்தேன்

5. சிட்டு

விடை: சிட்டுக்குருவி, தேன்சிட்டு

6. கனி

விடை: மாங்கனி, கனிமரம், தேன்கனி

7. குருவி

விடை: சிட்டுக்குருவி, குருவிக்கூடு

8. இலை

விடை: மாவிலை

9. காய் 

விடை: மாங்காய், காய்கனி

10. கூடு 

விடை: குருவிக்கூடு, தேன்கூடு

11. முட்டை

விடை: குருவிமுட்டை

12. மரம்

விடை: மாமரம், செம்மரம்

அறிந்து பயன்படுத்துவோம்.

நிறுத்தக்குறிகள்

காற்புள்ளி ( , )

1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.

(எ.கா)

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.

2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.

(எ.கா.)

அன்புள்ள நண்பா,

3. வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.

(எ.கா.)

பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.

4. மேற்கோள் குறிகளுக்கு (“) முன் காற்புள்ளி வரும்.

(எ.கா.)

குழந்தை நிலவைப் பார்த்து,” நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.

5. முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.

(எ.கா.)

ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.

அரைப்புள்ளி ( ; )

1. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.

(எ.கா.)

கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான்; கனக விசயருடன் போரிட்டான்.

2. உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.

(எ.கா.)

நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.

முக்காற்புள்ளி ( : )

சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புள்ளி வரும்.

(எ.கா.)

முத்தமிழ் : இயல், இசை, நாடகம்.

முற்றுப்புள்ளி ( . )

1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.

(எ.கா.)

கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.

2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.

(எ.கா.)

திரு. வி. க. மா. க. அ. ஊ. ஒ. ந. நி. பள்ளி

3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.

(எ.கா.)

நெ. து. சுந்தரவடிவேலு

வினாக்குறி ( ? )

வினாப்பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இட வேண்டும்.

(எ.கா.)

சேக்கிழார் எழுதிய நூல் எது?

வியப்புக்குறி ( ! )

மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.

(எ.கா.)

தமிழின் இனிமைதான் என்னே! – வியப்பு

பாம்பு! பாம்பு! – அச்சம்

அந்தோ! இயற்கை அழிகிறதே! – அவலம்

ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )

தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.

(எ.கா.)

‘நல்ல’ என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.

கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது ‘தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார

இரட்டை மேற்கோள்குறி ( “ “ )

நேர்கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.)

திரு. வி. க. மாணவர்களிடம்,” தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்று கூறினார

பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்

விடை: பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது

விடை: திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது

விடை: தமிழ்மொழி செம்மையானது, வலிமையானது, இளமையானது.

4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்

விடை: கபிலன், “தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.

5. திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது

விடை: திரு.வி.க. எழுதிய ‘பெண்ணின் பெருமை’ என்னும் நூல் புகழ்பெற்றது.

பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக் குறிகளை இடுக.

நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்

விடை :-

‘நூல் பல கல்’ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். ‘எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்’ என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Guide Vetrumai - Vinakaluku Vidai Alika copy

1. எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது?

உலக புத்தக நாள்

2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?

இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம்

3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?

11 நாட்கள் (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை)

4. புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?

நுழைவு கட்டணம் இல்லை

5. புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?

10% கழிவு

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை முறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.

1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர்.

ங் கு டி

2. கேடில் விழுச்செல்வம் ____________

ல் வி

3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று.

நீ தி நெ றி வி க் ம்

4. ‘கலன்’ என்னும் சொல்லின் பொருள்.

ணி ன்

5. ஏட்டுக்கல்வியுடன் ____________ கல்வியும் பயில வேண்டும்.

ற் கை

6. திரு.வி.க. எழுதிய நூல்களுள் ஒன்று.

ரி மை வே ட் கை

7. மா + பழம் என்பது ____________ விகாரம்.

தோ ன் ல்

 

கட்டத்தில் சிக்கிய எழுத்துகள்

ல் றி ற் வே

 

பழமொழி : அறிவே ஆற்றல்

நிற்க அதற்குத் தக….

கலைச்சொல் அறிவோம்

  • நிறுத்தக்குறி – Punctuation
  • மொழிபெயர்ப்பு – Translation
  • விழிப்புணர்வு – Awareness
  • திறமை – Talent
  • அணிகலன் – Ornament
  • சீர்திருத்தம் – Reform

 

பின்வரும் பகுதியில் “வேற்றுமை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வேற்றுமை _______________ வகைப்படும்

  1. 7
  2. 8
  3. 6
  4. 5

விடை : 8

2. இரண்டாம் வேற்றுமை உருபு __________ ஆகும்

  1. அல்
  2. ஆல்
  3. கு

விடை : ஐ

3. உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் வேற்றுமை __________

  1. மூன்றாம் வேற்றுமை
  2. ஐந்தாம் வேற்றுமை
  3. நான்காம் வேற்றுமை
  4. ஏழாம் வேற்றுமை

விடை : மூன்றாம் வேற்றுமை

4. முல்லைக்குத் தேர் கொடுத்தான் இதில் இடம் பெற்றுள்ள நான்காம் வேற்றுமை பொருள்

  1. தகுதி
  2. பகை
  3. கொடை
  4. நட்பு

விடை : கொடை

5. புகை மனிதனுக்குப் பகை இதில் இடம் பெற்றுள்ள நான்காம் வேற்றுமை பொருள்

  1. தகுதி
  2. பகை
  3. கொடை
  4. நட்பு

விடை : பகை

6. உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை __________

  1. ஆறாம் வேற்றுமை
  2. ஐந்தாம் வேற்றுமை
  3. நான்காம் வேற்றுமை
  4. ஏழாம் வேற்றுமை

விடை : ஆறாம் வேற்றுமை

சிறு வினா

1. வேற்றுமை என்பது யாது?

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறைமையை வேற்றுமை என்பர்.

2. வேற்றுமை உருபு என்பது யாது?

பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகைள வேற்றுமை உருபு என்பர்.

3. வேற்றுமைத் தொடர்கள் என்பது யாது?

வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத் தொடர்கள் என்பர்.

4. வேற்றுமைத்தொகை என்பது யாது?

வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.

5. ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் வரும் வேற்றுமை உருபு எது?

இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு.

நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும் இடப் பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை என்றும் கொள்ள வேண்டும்.

6. வேற்றுமையின் வகைகளும் அதன் உறுப்பகளையும் எழுதுக

வேற்றுமை வகை வேற்றுமை உருபுகள்
முதல் வேற்றுமை உருபு கிடையாது
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை ஆல், ஆன், ஒடு, ஓடு
நான்காம் வேற்றுமை கு
ஐந்தாம் வேற்றுமை இல், இன்
ஆறாம் வேற்றுமை அது, ஆது, அ
ஏழாம் வேற்றுமை கண்
எட்டாம் வேற்றுமை உருபு கிடையாது

Leave a Comment