Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 Akkarai Book Back Solution

இயல் 9.2 – அக்கறை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 9.2 ‘Akkarai’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 9.2 அக்கறை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 9.2 Akkarai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

அக்கறை பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Akkarai’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Akkarai Subject.

Previous Lesson: யாப்பிலக்கணம்

அக்கறை பாடல்

சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்க்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

– கல்யாண்ஜி

நூல் வெளி

  • கல்யாண்ஜியன் இயற்பெயர் கல்யாணசுந்தரம்.
  • சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.
  • வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.
  • புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியன இவரின் கவிதை படைப்புகள்.
  • இவை தவிர “அகமும் புறமும்” என்ற இவர் எழுதிய கட்டுரை தொகுப்பு வெளிவந்திருக்கிறது.
  • பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது.
  • கலைக்க முடியாத ஒப்பனை. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது போன்றவை இவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஆகும்
  • ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.

இலக்கணக் குறிப்பு

  • உருண்டது. போனது – ஒன்றன் பால் வினைமுற்று
  • சரிந்தது – வினையெச்சம்
  • அனவரும் – முற்றுமை

பகுபத உறுப்பிலக்கணம்

சரிந்து – சரி + த்(ந்) + த் + உ

  • சரி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால் இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்?

  1. ஒரு சிறு இசை
  2. முன்பின்
  3. அந்நியமற்ற நதி
  4. உயரப் பறத்தல்

விடை : ஒரு சிறு இசை

சிறு வினா

1. பழங்களை விடவும் நசுங்கிப் பாேனது இடம் சுட்டிப் பாெருள் விளக்குக தருக.

கல்யான்ஜியின் “அக்கறை” என்னும் கவிதைத் தலைப்பில் இவ்வரிகள் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்

மிதி வண்டியில் இருந்து விழந்த தக்காளிகள் சாலையில் விழந்து நசுங்கின. அங்குப் போவோர் வருவோர் தலைக்கு மேல் வேலை இருப்பதாய் செல்வதைப் பார்க்கையில் பழங்களை விடவும் நசுங்கிப் போனது எது மற்ற மனிதர்கள் மீது அக்கறை இல்லாததால் தான் என்கிறார் கல்யாண்ஜி

2. மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.

மண்ணில் பிறந்தோம்
மண்ணில் தவழ்ந்தோம்
மண்ணில் நடந்தோம்
அதானல் தானோ என்னவோ
விளையாட்டையும் கூட மண்ணில் தொடங்கினோம்
மதங்களை மறந்து
மனிதநேயத்தோடு
இறை இல்லங்களை கட்டினோம்
சாதிப்புயல் அதை சூறையாடிவிட்டது

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “விரிவாகும் ஆளுமை ” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. கல்யாணசுந்தரம் என்னும் இயற்பெயர் கொண்டவர்

  1. கல்யாண்ஜி
  2. இளங்குமரனார்
  3. தமிழழகனார்
  4. இராமலிங்கனார்

விடை : கல்யாண்ஜி

2. கல்யாணசுந்தரம் _______________ பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்து வருகிறார்.

  1. கண்ணதாசன்
  2. கல்யாண சுந்தரம்
  3. வண்ணதாசன்
  4. வசிகர்

விடை : வண்ணதாசன்

3. ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக ___________ பரிசினை பெற்றார்.

  1. கல்யாண்ஜி
  2. இளங்குமரனார்
  3. தமிழழகனார்
  4. இராமலிங்கனார்

விடை : கல்யாண்ஜி

4. கல்யாண்ஜி ___________ -ல் சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.

  1. 2015
  2. 2016
  3. 2017
  4. 2018

விடை : 2016

4. கல்யாண்ஜி பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ________________ என்ற பெயரில் வெளியானது.

  1. ஒரு சிறு இசை
  2. சில இறகுகள் சில பறவைகள்
  3. உயரப் பறத்தல்
  4. அந்நியமற்ற நதி

விடை : சில இறகுகள் சில பறவைகள்

குறு வினா

1. கல்யாண்ஜியின் கவிதை நூல்கள் சிலவற்றை கூறுக

  • புலரி
  • முன்பின்
  • ஆதி
  • அந்நியமற்ற நதி
  • மணல் உள்ள ஆறு

2. கல்யாண்ஜியின் சிறு கதை சிலவற்றை கூறுக

  • கலைக்க முடியாத ஒப்பனை
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  • உயரப் பறத்தல்
  • ஒளியிலே தெரிவது

3. கல்யாண்ஜி குறிப்பு வரைக

  • இயற்பெயர் – கல்யாணசுந்தரம்.
  • சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.
  • வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.
  • கவிதை படைப்புகள் – புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு
  • கட்டுரை தொகுப்பு  – அகமும் புறமும்
  • கடிதங்கள் தொகுப்பு – சில இறகுகள் சில பறவைகள்
  • சிறுகதை தொகுப்புகள் – கலைக்க முடியாத ஒப்பனை, தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது
  • சாகித்திய அகாதெமி – ஒரு சிறு இசை (2016)

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment