Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 Kurunthogai Book Back Solution

இயல் 9.3 – குறுந்தொகை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 9.3 ‘Kurunthogai’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 9.3 குறுந்தொகை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 9.3 Kurunthogai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

குறுந்தொகை பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kurunthogai’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Kurunthogai Subject.

Previous Lesson: அக்கறை

குறுந்தொகை பாடல்

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறே.

நூல் வெளி

  • எட்டுதொகை நூல்களுள் ஒன்று.
  • தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது.
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களை கொண்டது.
  • இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டிப் பேரெல்லையும் கொண்டவை.
  • 1915-ம் ஆண்டு செளரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.
  • நமக்கு பாடமாக வந்துள்ளது 37வது பாடல் ஆகும்
  • இப்பாடலின் ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
  • இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்
  • கலித்தொகையில் பாலைத்திணையைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப் பெற்றார்.

சொல்லும் பொருளும்

  • நசை – விருப்பம்
  • நல்கல் – வழங்குதல்
  • பிடி – பெண்யானை
  • வேழம் – ஆண்யானை
  • யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
  • பொளிக்கும் – உரிக்கும்
  • ஆறு – வழி

இலக்கணக் குறிப்பு

  • களைஇய – சொல்லிசை  அளபெடை
  • பெருங்கை, மென்சினை – பண்புத்தொகைகள்
  • பொளிக்கும் – செய்யும் என்னும் வினைமுற்று
  • பிடிபசி – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • அன்பின – பலவின் பால் அஃறிணை வினைமுற்று
  • நல்கலும் நல்குவர் – எச்ச உம்மை

பகுபத உறுப்பிலக்கணம்

1. உடையார் – உடை + ய் + ஆர்

  • உடை – பகுதி
  • ய் – சந்தி (உடம்படு மெய்)
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

2. பொளிக்கும் = பொளி + க் + க் + உம்

  • பொளி – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

யா மரம் எந்த நிலத்தில் வளரும்?

  1. குறிஞ்சி
  2. மருதல்
  3. பாலை
  4. நெய்தல்

விடை : பாலை

குறு வினா

1. பிடி பசி, களைஇய, பெருங்கை வேழம் – இவ்வடியில் உள்ள இலக்கண குறிப்புகளை கண்டறிக.

  • பிடிபசி – ஆறாம் வேற்றுமை தொகை
  • களைஇய – சொல்லிசையளபெடை
  • பெருங்கை – பண்புத்தொகை

2. குறுந்தொகை என பெயர் வரக் காரணம் யாது.

குறுகிய பாடல்களின் தொகுப்பு குறுந்தொகை. 4 அடி முதல் 8 அடி வரை உள்ள செய்யுட்களைத் தொகுத்துக் குறுந்தொகை என்று பெயர் வைத்தனர்

சிறு வினா

“யா” மரத்தின் பட்டையை உரித்தது எது? எதற்காக? விளக்குக.

பெண் யானையின் பசியை போக்க ஆண் யானை “யா” மரத்தின் பட்டையை உரித்துத் தன் அன்பை வெளிப்படுத்தும்

விளக்கம்

மேற்கண்ட காட்சியைக் கண்ணுற்ற தலைவனுக்கு உன் நினைவு வரும். எனவே அவன் உன்னிடம் விரைந்து வருவான்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “குறுந்தொகை ” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. அகநூல்களில் ஒன்று

  1. புறநானூறு
  2. குறுந்தொகை
  3. பரிபாடல்
  4. பதிற்றுப்பத்து

விடை : குறுந்தொகை

2. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

  1. பெரும்பாணாற்றுப்படை
  2. சிறுபாணாற்றுப்படை
  3. குறுந்தொகை
  4. நெடுவால்வாடை

விடை : குறுந்தொகை

3. குறுந்தொகை ___________ பாடல்களை காெண்டது.

  1. 400
  2. 101
  3. 401
  4. 100

விடை : 401

4. குறுந்தொகை பாடல்களின் அடிவரை

  1. 4-8
  2. 6-12
  3. 5-10
  4. 12-24

விடை : 4-8

5. பாலை பாடிய பெருங்கடுங்கா ________ மரபைச் சார்ந்தவர்

  1. சோழ
  2. சேர
  3. பாண்டிய
  4. பல்லவ

விடை: சேர

6. குறுந்தொகையை முதன் முதலாக பதிப்பித்தவர்

  1. உ.வே.சா
  2. பரிதிமாற்கலைஞர்
  3. மறைமலையடிகள்
  4. செளரிப்பெருமாள் அரங்கனார்

விடை : செளரிப்பெருமாள் அரங்கனார்

7. செளரிப்பெருமாள் அரங்கனார் குறுந்தொகையை பதிப்பித்த ஆண்டு

  1. 1912
  2. 1915
  3. 1917
  4. 1918

விடை : 1915

சிறு வினா

1. இறைச்சி என்பது யாது?

கூறுவோரின் விருப்பத்தை நேர உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்துவது இறைச்சி ஆகும்.

2. இறைச்சி எவ்வாறு அமையும்?

  • இறைச்சி பாடலில் உள்ள கருப்பொருளில் அமையும்.
  • இறைச்சி பெரும்பாலும் விலங்கு, பறவை போன்ற உயிரினங்களில் அமையும்.

3. பாலை பாடிய பெருங்கடுங்கோ பெயர்க்காரணம் தருக

  • கலித்தொகையில் பாலைத்திணையைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப் பெற்றார்.
  • இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்

4. பிடி, வேழம் என்பதனை குறிக்கும் சொற்களை எழுதுக?

  • பிடி – பெண் யானை
  • வேழம் – ஆண் யானை

5. குறுந்தொகை – குறிப்பு வரைக

  • எட்டுதொகை நூல்களுள் ஒன்று.
  • தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது.
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களை கொண்டது.
  • இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டிப் பேரெல்லையும் கொண்டவை.
  • 1915-ம் ஆண்டு செளரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment