Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 Kudumbavilakku Book Back Solution

இயல் 5.2 – குடும்ப விளக்கு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 5.2 ‘Kudumbavilakku’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 5.2 குடும்ப விளக்கு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 5.2 Kudumbavilakku Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

குடும்ப விளக்கு பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kudumbavilakku’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Kudumbavilakku Subject.

Previous Lesson: கல்வியில் சிறந்த பெண்கள்

நூல்வெளி

  • குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;
  • கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது
  • குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன்  பணிகளைச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானது இன்றியமையாதது என கூறும் நூல்
  • பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம்.
  • இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.
  • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.
  • இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் ஒன்று குடும்ப விளக்கு
  • குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;
  • இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

  • களர்நிலம் – உவர்நிலம்
  • நவிலல் – சொல்
  • வையம் – உலகம்
  • மாக்கடல் – பெரிய கடல்
  • இயற்றுக – செய்க
  • மின்னாளை – மின்னலைப் போன்றவளை
  • மின்னாள் – ஒளிரமாட்டாள்
  • தணல் – நெருப்பு
  • தாழி – சமைக்கும் கலன்
  • அணித்து – அருகில்
  • தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத
  • யாண்டும் – எப்பொழுதும்

இலக்கணக்குறிப்பு

  • மாக்கடல் – உரிச்சொல்தொடர்
  • ஆக்கல் – தொழில்பெயர்
  • பொன்னே போல் – உவம உருபு
  • மலர்க்கை, வில்வாள் – உம்மைத்தொகை
  • தவிர்க்கஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. விளைவது = விளை + வ் +அ + து

  • விளை – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை;
  • அ – சாரியை
  • து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

2. சமைக்கின்றார் = சமை + க் + கின்று + ஆர்

  • சமை – பகுதி
  • க் – சந்தி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

பொருத்துக

அ) சிறுபஞ்சமூலம் –  1) காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு –  2) சங்க இலக்கியம்
இ) சீவகசிந்தா மணி –  3) அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை –  4) தற்கால இலக்கியம்.

  1. அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2
  2. அ – 2, ஆ – 3, இ – 1, ஈ – 4
  3. அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
  4. அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 3

விடை : அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 3

குறு வினா

தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

பெண்கல்வி பெறுதலே தலைவியின் பேச்சில் வெளிப்படுகினற் பாடுபொருள் ஆகும்.

சிறு வினா

சமைப்பது தாழ்வா ? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்.

அ) இன்பம் சமைப்பவர் யார்?

உணவைச் சமைப்பவர் இன்பத்தையும் சமைப்பர்

ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?

பாவேந்தரின் கூற்றுப் படி சமைப்பது தாழ்வன்று

நெடு வினா

குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல் விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

  • கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள்.
  • இன்று கல்வி இல்லா பெண்களின் குழந்தைகளில் பலர் தீய பழக்கங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
  • கல்வி அறிவுள்ள நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அவர்கள் மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.
  • இன்று கல்வி கற்ற பெண்களின் குழந்தைகளில் பலர் நல்ல பழக்கங்கள் கற்று உயர்ந்து இருக்கின்றனர்.
  • வானூர்தியைச் ஓட்டல், கடல் மற்றும் உலகினை அளத்தல் ஆகியன ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது என்று அன்று பாரதிதாசன் கூறியுள்ளவை இன்று நனவாகியுள்ளது.
  • சமைப்பது, வீட்டு வேலை செய்வது பெண்களுக்கு மட்டுமே பொருத்தமற்றது, அவை நமக்கும் உரியது என ஆண்கள் ஏற்றுக் கொள்ளும் எண்ணம் வர வேண்டும். அந்த நன்நாள் காண்போம் என்று பாரதிதாசன் கூறியது இன்று நனவாகிவிட்டது. ஆண்கள் வீட்டு வேலை செய்வதும் இன்று நடக்கின்றது.
  • வாழ்க்கை என்பது பொருள் மற்றும் வீரத்தால் அமைவதன்று. அடுப்பில் சமைக்கும் பாத்திரத்தில் சுவையை இட்டு, அருகில் இருந்து உள்ள அன்போடு பரிமாறுதலில் தன் வாழ்வு நலம் பெறும். ஆனால் இன்று இவ்வாறு நடப்பதில்லை.
  • சமைக்கும் பணி பெண்களின் கடமை, அது அவர்க்கே உரியது என்ற தமிழக வழக்கத்தினை இமைப்பொழுதில் (கண்ணிமைக்கும் நேரத்தில்) நீக்க வேண்டும். இன்று ஓரளவு நீங்கிவிட்டது.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “குடும்ப விளக்கு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டும் நூல்

  1. தமிழியக்கம்
  2. இருண்ட வீடு
  3. குடும்ப விளக்கு
  4. அழகின் சிரிப்பு

விடை : குடும்ப விளக்கு

2. பாரதிதாசனின் ____________ நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.

  1. தமிழியக்கம்
  2. இருண்ட வீடு
  3. பிசிராந்தையர்
  4. அழகின் சிரிப்பு

விடை : பிசிராந்தையர்

3. களர்நிலம் ____________ இல்லாத பெண்ணுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளது.

  1. பணம்
  2. கல்வி
  3. அழகு
  4. பணிவு

விடை : கல்வி

4. திருந்திய கழனியாது ____________ உடைய பெண்ணுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளது.

  1. பணம்
  2. அழகு
  3. பணிவு
  4. கல்வி

விடை : கல்வி

5. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பாடல் வரியின் ஆசிரியர்

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. கவிமணி
  4. திரு.வி.க

விடை : பாரதியார்

6. மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா….
என்ற வரிகளை எழுதியவர்

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. கவிமணி
  4. திரு.வி.க

விடை : கவிமணி

7. பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது  
என்ற முழகத்தினை இட்டவர்

  1. பாவேந்தர்
  2. புரட்சிக்கவி
  3. தமிழ்த்தென்றல்
  4. கவிஞாயிறு

விடை : பாவேந்தர்

8. “வானூர்தி செல்லுதல் வைய
மாக்கடல் முழுத மளத்தல்” என்பதில் “பெரிய” என்னும் பொருள் தரும் சொல்

  1. மா
  2. வை
  3. வா
  4. ழுழு

விடை : மா

9. ஒளிரமாட்டாள் என்னும் பொருள் தரும் சொல் ……………..

  1. மின்ளாள்
  2. மின்னாளை
  3. மின்
  4. இடி

விடை : மின்ளாள்

10. கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் ………….

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. வாணிதாசன்

விடை : பாரதிதாசன்

11. பிசிராந்தையர் __________ நூல்

  1. காப்பியம்
  2. புதினம்
  3. கவிதை
  4. நாடக

விடை : நாடக

குறு வினா

1. குடும்ப விளக்கில் கூறப்படும் நானிலங்கள் யாவை?

நானிலம் என்பது குறிஞ்சி, முல்லை, முருதம், நெய்தல் போன்றவை ஆகும்

2. கல்வியறிவு இல்லாத பெண்களை பற்றி பாவேந்தர் கூறுவதென்ன?

கல்வியறிவு இல்லாத பெண்கள் – பண்படாத நிலம்

3. பாரதிதாசனின் படைப்புகள் யாவை?

பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்

4. பாரதிதாசன் – சிறு குறிப்பு வரைக

  • இயற்பெயர் – கனக.சுப்புரத்தினம்.
  • புனைப்பெயர் – பாரதிதாசன்
  • படைப்புகள் – பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்
  • கவிதை தொகுப்பு – பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
  • விருது – சாகித்திய அகாதெமி விருது (பிசிராந்தையார் நாடக நூல்)

5. குடும்ப விளக்கு நூல் பற்றிய சிறு குறிப்பு வரைக

  • ஆசிரியர் – பாரதிதாசன்
  • குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது.
  • கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக்
    காட்டுகிறது.
  • குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை பெண்ணுக்குக் கல்வி இன்றியமையாதது என கூறும் நூல்
  • இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment