Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.3 Sirupanjamoolam Book Back Solution

இயல் 5.3 – சிறுபஞ்சமூலம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 5.3 ‘Sirupanjamoolam’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 5.3 சிறுபஞ்சமூலம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 5.2 Sirupanjamoolam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

சிறுபஞ்சமூலம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Sirupanjamoolam’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Sirupanjamoolam Subject.

Previous Lesson: குடும்ப விளக்கு

அறிவுடையார் தாமே உணர்வர்

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு.

நூல்வெளி

  • தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின.
  • அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
  • சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.
  • அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.
  • இவ்வேர்களினால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குவது போல சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
  • சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
  • இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன , நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
  • சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்
  • இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
  • காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.
  • மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

சொல்லும் பொருளும்

  • மூவாது – முதுமை அடையாமல்
  • நாறுவ – முளைப்ப
  • தாவா – கெடாதிருத்தல்

இலக்கணக்குறிப்பு

  • அறிவார் – வினையாலணையும் பெயர்
  • வல்லார்- வினையாலணையும் பெயர்
  • விதையாமை, உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
  • தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. உரையாமை = உரை + ய் + ஆ + மை

  • உரை – பகுதி
  • ய் – சந்தி (உடம்படுமெய்)
  • ஆ – எதிர்மறை இடைநிலை
  • மை – தொழிற்பெயர் விகுதி

2. காய்க்கும் = காய் + க் + க் + உம்

  • காய் – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – பெயரெச்ச விகுதி

பலவுள் தெரிக

பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

  1. பெயரெச்சம், உவமைத்தொகை
  2. எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
  3. வினையெச்சம், உவமை
  4. எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

விடை : எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

குறு வினா

மூவாது மூத்தவர், நூல் வல்லார் இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது போல் நன்மை, தீமைகளை உணர்ந்த இளையோர் மூத்தவரோடு வைத்து நினைக்கத தக்கவர்.

சிறு வினா

விதைக்காமலே முளைக்கும் விதைகள் இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துக்களை விளக்குக.

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது போல் நன்மை, தீமைகளை உணர்ந்த இளையோர் மூத்தவரோடு வைத்து நினைக்கத தக்கவர்.

பாத்தி அமைத்து விதை விதைக்காமலேமுளைக்கும் விதைகளைப் போல அறிவுநுட்பம் மிகுந்தவர் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “குடும்ப விளக்கு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து ____________ தோன்றின

  1. நீதி நூல்கள்
  2. வழி நூல்கள்
  3. சமய நூலகள்
  4. இலக்கண நூல்கள்

விடை: நீதி நூல்கள்

2. ஐந்து கருத்துகள் இடம் பெறும் பதினெண்கீழ்கணக்கு நூல் 

  1. ஏலாதி
  2. திருக்குறள்
  3. திரிகடுகம்
  4. சிறுபஞ்சமூலம்

விடை : சிறுபஞ்சமூலம்

3. திரிகடுகம் _________ வகையான கருத்துக்களை எடுத்துரைக்கிறது

  1. 4
  2. 5
  3. 3
  4. 6

விடை : 3

4. ஏலாதி _________ வகையான கருத்துக்களை எடுத்துரைக்கிறது

  1. 4
  2. 5
  3. 6
  4. 3

விடை : 6

5. காரியாசான் எழுதிய நூல்

  1. ஏலாதி
  2. திரிகடுகம்
  3. ஆசாராக்கோவை
  4. சிறுபஞ்சமூலம்

விடை : சிறுபஞ்சமூலம்

6. சிறுபஞ்சமூலத்துடன் பொருத்தமில்லா ஒன்று 

  1. கண்டங்கத்திரி
  2. சிறுவழுணை
  3. சிறுமல்லி
  4. சிறுநாவற்பூ

விடை : சிறுநாவற்பூ

7. 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் ___________

  1. பாரதியார்
  2. விக்டர் ஹியூகோ
  3. வள்ளலார்
  4. மாவீரன் அலெக்சாண்டர்

விடை : வள்ளலார்

8. 11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றவர் ___________

  1. பாரதியார்
  2. விக்டர் ஹியூகோ
  3. வள்ளலார்
  4. மாவீரன் அலெக்சாண்டர்

விடை : பாரதியார்

9. 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் 

  1. கலீலியோ
  2. விக்டர் ஹியூகோ
  3. வள்ளலார்
  4. மாவீரன் அலெக்சாண்டர்

விடை : மாவீரன் அலெக்சாண்டர்

10. 15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர்

  1. கலீலியோ
  2. விக்டர் ஹியூகோ
  3. வள்ளலார்
  4. மாவீரன் அலெக்சாண்டர்

விடை : விக்டர் ஹியூகோ

11. 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்த அறிவியலாளர்

  1. கலீலியோ
  2. விக்டர் ஹியூகோ
  3. வள்ளலார்
  4. மாவீரன் அலெக்சாண்டர்

விடை : கலீலியோ

குறு வினா

1. மூவாது மூத்த சான்றோர் சிலரின் பெயரை எழுதுக

கரிகாலன், வள்ளலால், பாரதி, விக்டர் யூகோ, அலெக்ஸாண்டர், கலீலியோ

2. பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளவை எவை?

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவையே பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

3. சிறுபஞ்சமூலம் நூலில் குறிப்பிடும் ஐந்து வேர்கள் யாவை

கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி போன்று ஐந்து வேர்களை சிறுபஞ்சமூலம் நூலில் குறிப்பிடப்படுகிறது.

4. சிறுபஞ்ச மூலம் பற்றி குறிப்பு வரைக

  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  • சிறுபஞ்சமூலம் என்பதற்கு கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.
  • ஐந்து சிறிய வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குவது போல சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.

5. சிறுபஞ்சமூலப் பாடல்கள் அமைந்துள்ள விதத்தினை எழுதுக.

  • சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
  • இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன , நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.

6. காரியாசான் பற்றி குறிப்பு வரைக

  • சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்
  • இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
  • காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.
  • மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment