Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 O En Sama Kalathu Tholargale Book Back Solution

இயல் 4.2 – ஓ, என் சமகாலத் தாேழர்களே!

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 4.2 ‘O En Sama Kalathu Tholargale’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 4.2 ஓ, என் சமகாலத் தாேழர்களே!

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 4.2 O En Sama Kalathu Tholargale Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

ஓ, என் சமகாலத் தாேழர்களே பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘O En Sama Kalathu Tholargale’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the O En Sama Kalathu Tholargale Subject.

Previous Lesson: இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

ஓ, என் சமகாலத் தாேழர்களே பாடல்

கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்
கிழக்கு வானம் தூரமில்லை
முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்
பூமி ஒன்றும் பாரமில்லைபாய்ந்து பரவும் இளைய நதிகளே
பள்ளம் நிரப்ப வாருங்கள்
காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்
கதிர்கள் சுமந்து தாருங்கள்முன்னோர் சொன்ன முதுமொழி எல்லாம்
முதுகில் சுமந்தால் போதாது
சொன்னோர் கருத்தை வாழ்க்கைப் படுத்த
துணிந்தால் துன்பம் வாராது

காட்டும் பொறுமை அடக்கம் என்னும்
கட்டுப் பாட்டைக் கடவாதீர்
கூட்டுப் புழுதான் பட்டுப் பூச்சியாய்க்
கோலம் கொள்ளும் மறவாதீர்

அறிவை மறந்த உணர்ச்சி என்பது
திரியை மறந்த தீயாகும்
எரியும் தீயை இழந்த திரிதான்
உணர்ச்சி தொலைந்த அறிவாகும்

பழையவை எல்லாம் பழமை அல்ல
பண்பும் அன்பும் பழையவைதாம்
இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க
இனமும் மொழியும் புதியவைதாம்

அறிவியல் என்னும் வாகனம் மீதில்
ஆளும் தமிழை நிறுத்துங்கள்
கரிகா லன்தன் பெருமை எல்லாம்
கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்

ஏவும் திசையில் அம்பைப் போல
இருந்த இனத்தை மாற்றுங்கள்
ஏவு கணையிலும் தமிழை எழுதி
எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

– வைரமுத்து

நூல் வெளி

  • கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
  • இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர்.
  • கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
  • இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
  • இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இலக்கியங்களில் அறிவியல்

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி

புறநானூறு
பாடல் 27, அடி 7-8.

அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்
தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்
வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி,“ஓர்
எந்திர வூர்திஇ யற்றுமின்” என்றான்.

– சீவக சிந்தாமணி
நாமகள் இலம்பகம் 50.

இலக்கணக்குறிப்பு

  • பண்பும் அன்பும், இனமும் மொழியும் – எண்ணும்மை
  • சொன்னோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

பொருத்துங்கள் = பொருத்து + உம் + கள்

  • பொருத்து – பகுதி
  • உம் – முன்னிலைப் பன்மை விகுதி
  • கள் – விகுதி மேல் விகுதி

பலவுள் தெரிக

பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க.

அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்
எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்

  1. இணையம்
  2. தமிழ்
  3. கணினி
  4. ஏவுகணை

விடை : தமிழ்

குறு வினா

கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.

கூட்டுப்புழு தான் பட்டுப்பூச்சியாய் மாறும். அவை கொண்ட பொறுமையும் அடக்கமும் தான்.

சிறு வினா

ஓ, என் சமகாலத் தோழர்களே கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?

  • அறிவியல் வாகனத்தில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்
  • கரிகாலன் புகழைக் கணினியுள்ளே பொறுத்துங்கள்.
  • திசையில் ஏவும் அன்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்.
  • ஏவுகணையில் தமிழை எழுதி அனைத்து கோள்களிலும் ஏற்றுங்கள்.

என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் வைக்கிறார்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஓ, என் சமகாலத் தாேழர்களே!” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானூத்தி அறிவியல்
பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. வைரமுத்து கவிதைகள்
  2. சீவகசிந்தாமணி
  3. கலித்தொகை
  4. புறநானூறு

விடை : புறநானூறு

2. ஓர் ஏந்திர ஊர்த்தி ஏற்றுமின் என்ற அறிவியல் சிந்தனையைக் குறிப்பிடும் இலக்கியம்

  1. சிலப்பதிகாரம்
  2. சீவகசிந்தாமணி
  3. மணிமேகலை
  4. குண்டலகேசி

விடை : சீவகசிந்தாமணி

3. கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு

  1. 2003
  2. 2006
  3. 2009
  4. 2004

விடை : 2003

4. கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர்

  1. மேட்டூர்
  2. காட்டூர்
  3. கரட்டூர்
  4. மெட்டூர்

விடை : மெட்டூர்

5. வைரமுத்து இந்தியாவின் சிறந்த பாடலாசியருக்கான தேசிய விருதினை _________ முறை பெற்றுள்ளார்

  1. 4
  2. 5
  3. 6
  4. 7

விடை : 7

6. தூரமில்லை என்னும் சொல்லைப் பிரித்துக் எழுதக் கிடைப்பது

  1. தூரம் + மில்லை
  2. தூரம் + இல்லை
  3. தூர + மில்லை
  4. தூர + இல்லை

விடை : தூரம் + இல்லை

7. பாரமில்லை என்னும் சொல்லைப் பிரித்துக் எழுதக் கிடைப்பது

  1. பாரம் + மில்லை
  2. பார + மில்லை
  3. பார + இல்லை
  4. பாரம் + இல்லை

விடை : பாரம் + இல்லை

குறு வினா

1. கவிஞர் வைரமுத்து தம் கவிதையில் குறிப்பிடும் அஃறிணை உயிர்கள் யாவை?

கிளி, கூட்டுபுழு, பட்டுப்பூச்சி

2. அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்தது எது?

அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்தது தமிழ்ச்சமூகம்.

3. உணர்ச்சி தொலைந்த அறிவு எதைப் போன்றது?

உணர்ச்சி தொலைந்த அறிவு எரியும் தீயை இழந்த திரி போன்றது

4. கவிஞர் வைரமுத்து – குறிப்பு வரைக

  • ஊர் – மெட்டூர் (தேனி)
  • விருது – பத்மபூஷன்
  • சாகித்திய அகாதெமி விருது – கள்ளிக்காட்டு இதிகாசம் (2003)
  • இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் – தேசிய விருது ஏழு முறை, மாநில அரசு விருது ஆறு முறை
  • கவிதைகள் மொழிபெயர்ப்பு – இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம்

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment