Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 Uyir Vagai Book Back Solution

இயல் 4.3 – உயிர்வகை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 4.3 ‘Uyir Vagai’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 4.3 உயிர்வகை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 4.3 Uyir Vagai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

உயிர்வகை பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Uyir Vagai’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Uyir Vagai Subject.

Previous Lesson: ஓ, என் சமகாலத் தாேழர்களே

உயிர்வகை பாடல்

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

(நூ.எ.1516)

நூல் வெளி

  • தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்
  • இதன் இயற்றியவர் தொல்காப்பியர்
  • தொல்காப்பியம் பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது.
  • இது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது
  • 27 இயல்களை உடையது
  • எழுத்து, சொல் அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகிறது.
  • பொருள் அதிகாரம் தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்குகிறது,
  • பல அறிவியல் கருத்துகளை கொண்டது.
  • குறிப்பாக பிறப்பியல் எழுத்துக்கள், பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அறிவியல் அறிஞர்களும் வியந்து போற்றுகின்றன.
  • தமிழர்களின் அறிவாற்றலுக்கு சிறந்த சான்று

இலக்கணக்குறிப்பு

  • உணந்தோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

நெறிப்படுத்தினர் = நெறிப்படுத்து + இன் + அர்

  • நெறிப்படுத்து – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • அர் – பலர் பால் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கும்?

  1. நுகர்தல்
  2. தொடுவுணர்வு
  3. கேட்டல்
  4. காணல்

விடை : தொடுவுணர்வு

குறு வினா

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

  • மூவறிவு – கரையான், எறும்பு
  • நான்கறிவு – நண்டு, தும்பி
  • ஐந்தறிவு – பறவை, விலங்கு

சிறு வினா

அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?

1. புல், மரம் ஓரறிவு உயிர்கள் (தொடு உணர்வு)
2. சிப்பி, நத்தை ஈரறிவு உயிர்கள் (தொடு உணர்வு + நுகர்தல்)
3. கரையான், எறும்பு மூவறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல்)
4. நண்டு, தும்பி நான்கறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல் + காணல்)
பறவை, விலங்கு ஐந்தறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல் + காணல் + கேட்டல்)
மனிதன் ஆறறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல் + காணல் + கேட்டல் + பகுத்தறிவு)

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “உயிர்வகை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. தொல்காப்பியம் தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் ______________

  1. நாடக நூல்
  2. இசை நூல்
  3. இலக்கண நூல்
  4. உரைநடை நூல்

விடை : இலக்கண நூல்

2. புல், மரம் ஆகியன

  1. ஓரறிவு உயிர்கள்
  2. ஈரறிவு உயிர்கள்
  3. மூன்றறிவு உயிர்கள்
  4. ஐந்தறிவு உயிர்கள்

விடை : ஓரறிவு உயிர்கள்

2. சிப்பி, நத்தை ஆகியன

  1. ஓரறிவு உயிர்கள்
  2. ஈரறிவு உயிர்கள்
  3. மூன்றறிவு உயிர்கள்
  4. ஐந்தறிவு உயிர்கள்

விடை : ஈரறிவு உயிர்கள்

3. சிப்பி, நத்தை ஆகியன

  1. ஓரறிவு உயிர்கள்
  2. ஈரறிவு உயிர்கள்
  3. மூன்றறிவு உயிர்கள்
  4. ஐந்தறிவு உயிர்கள்

விடை : மூன்றறிவு உயிர்கள்

4. கீழ்கண்டவற்றில் நான்கறிவு உயிர்கள் எவை

  1. புல், மரம்
  2. சிப்பி, நத்தை
  3. கரையான், எறும்பு
  4. நண்டு, தும்பி

விடை : நண்டு, தும்பி

5. கீழ்கண்டவற்றில் ஐந்தறிவு உயிர்கள் எவை

  1. புல், மரம்
  2. சிப்பி, நத்தை
  3. பறவை, விலங்கு
  4. கரையான், எறும்பு

விடை : பறவை, விலங்கு

6. மூன்றறி வதுவே அவற்றாேடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றாேடு கணணே இவ்வடிகளில் அவற்றோடு என்பது எதைக் குறிக்கும்?

  1. நுகர்தல்
  2. தொடுவுணர்வு
  3. கேட்டல்
  4. கானல்

விடை : நுகர்தல்

7. தொல்காப்பியத்தின் அதிகாரங்களில் பொருந்தாது

  1. எழுத்து
  2. சொல்
  3. பொருள்
  4. அணி

விடை : அணி

7. தொல்காப்பியம் கொண்டுள்ள இயல்களின் எண்ணிக்கை

  1. 9
  2. 27
  3. 18
  4. 36

விடை : 27

7. மொழி இலக்கணங்களை விளக்கும் அதிகாரங்கள் 

  1. எழுத்து, அணி
  2. எழுத்து, சொல்
  3. சொல், அணி
  4. சொல், பொருள்

விடை : எழுத்து, சொல்

சிறு வினா

தொல்காப்பியம் சிறு குறிப்பு வரைக

  • தமிழ்மொழியின் முதல் இலக்கண நூல்
  • ஆசிரியர் – தொல்காப்பியர்
  • அதிகாரங்கள் – 3 (எழுத்து, சொல், பொருள்)
  • இயல் – 27
  • எழுத்து, சொல் அதிகாரங்கள் –  மொழி இலக்கணங்களை விளக்குகிறது.
  • பொருள் அதிகாரம் – தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்குகிறது,
  • பல அறிவியல் கருத்துகளை கொண்டது.
  • பிறப்பியல் எழுத்துக்கள், பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருக்கிறது
  • தமிழர்களின் அறிவாற்றலுக்கு சிறந்த சான்று

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment