Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 Patta Maram Book Back Solution

இயல் 2.2 – பட்ட மரம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 2.2 ‘Patta Maram’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 2.2 பட்ட மரம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 2.2 Patta Maram Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

பட்ட மரம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Patta Maram’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Patta Maram Subject.

Previous Lesson: நீரின்றி அமையாது உலகு

பட்ட மரம் பாடல்

மொட்டைக் கிளையொடு
நின்று தினம்பெரு
மூச்சு விடும்மரமே !வெட்டப் படும்ஒரு
நாள்வரு மென்று
விசனம் அடைந்தனையோ ?குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்தஇலை !வெந்து கருகிட
இந்த நிறம்வர
வெம்பிக் குமைந்தனையோ ?

கட்டை யெனும்பெயர்
உற்றுக் கொடுந்துயர்
பட்டுக் கருகினையே !

பட்டை யெனும்உடை
இற்றுக் கிழிந்தெழில்
முற்றும் இழந்தனையே!

காலம் எனும்புயல்
சீறி எதிர்க்கக்
கலங்கும் ஒருமனிதன்

ஓலமி டக்கரம்
நீட்டிய போல்இடர்
எய்தி உழன்றனையே!

பாடும் பறவைகள்
கூடி உனக்கொரு
பாடல் புனைந்ததுவும்

மூடு பனித்திரை
யூடு புவிக்கொரு
மோகங் கொடுத்ததுவும்

ஆடுங் கிளைமிசை
ஏறிச் சிறுவர்
குதிரை விடுத்ததுவும்

ஏடு தருங்கதை
யாக முடிந்தன!
இன்று வெறுங்கனவே!

நூல் வெளி

  • கவிஞர் தமிழ் ஒளி இயற்பெயர் விஜயரங்கம்
  • கவிஞர் தமிழ் ஒளி (1924–1965) புதுவையில் பிறந்தவர்.
  • பாரதியாரின் வழித்தோன்றலகாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளஙகியவர்.
  • மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.
  • நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தின வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.

சொல்லும் பொருளும்

  • குந்த – உட்கார
  • கந்தம் – மணம்
  • மிசை – மேல்
  • விசனம் – கவலை
  • எழில் – அழகு
  • துயர் – துன்பம்

இலக்கணக்குறிப்பு

  • வெந்து, வெம்பி, எய்தி – வினையெச்சம்
  • மூடுபனி, ஆடுகிளை – வினைத்தொகை
  • வெறுங்கனவு – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. விரித்த = விரி + த் + த் +அ

  • விரி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

2. குமைந்தனை = குமை + த்(ந்) + த் +அன் +ஐ

  • குமை – பகுதி
  • த் – சந்தி
  • த்-ந் ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

1. மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன ?

  1. கீழே
  2. மேலே
  3. இசை
  4. வசை

விடை : கீழே

சிறுவினா

பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?

  • அமர நிழல் கொடுத்தேன்.
  • நறுமண மலர் கொடுத்தேன்
  • பறவைகள் என் மீது அமர்ந்து பாடல் புனையும்.
  • என் கிளை மீது ஏறி சிறுவர்கள் குதிரை விளையாடுவார்கள்.
  • இவையெல்லாம் போய் இன்று பட்டமரமாய் போய்விட்டேன் என்று பட்டமரம் வருந்தியது.

 

பின்வரும் பகுதியில் “பட்ட மரம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. கவிஞர் தமிழ் ஒளி ___________ பிறந்தவர்

  1. புதுவையில்
  2. ஆந்திராவில்
  3. தமிழகத்தில்
  4. கர்நாடகத்தில்

விடை : புதுவையில்

2. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர்

  1. தமிழ் ஒளி
  2. தமிழன்பன்
  3. சேக்கிழார்
  4. திருவள்ளுவர்

விடை : தமிழ் ஒளி

3. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளுள்  பொருந்தாதது

  1. நிலைபெற்ற சிலை
  2. வீராயி
  3. கவிஞனின் காதல்
  4. கண்ணனின் கிளிகள்

விடை : கண்ணனின் கிளிகள்

4. பட்டமரம் என்னும் கவிதை ___________-ல் இடம் பெற்றுள்ளது

  1. நிலைபெற்ற சிலை
  2. வீராயி
  3. தமிழ் ஒளியின் கவிதைகள்
  4. மாதவி

விடை : தமிழ் ஒளியின் கவிதைகள்

5. மூடுபனி இலக்கணக்குறிப்பு தருக

  1. வினையெச்சம்
  2. வினைத்தொகை
  3. பெயரெச்சத் தொடர்
  4. பண்புத்தொகை

விடை : வினைத்தொகை

6. ஆடுங்கிளை இலக்கணக்குறிப்பு தருகு

  1. வினையெச்சத் தொடர்
  2. பெயரெச்சத் தொடர் 
  3. வினைத்தொகை
  4. பண்புத்தொகை

விடை : பெயரெச்சத் தொடர்

7. குந்த என்னும் சொல் தரும் பொருள்

  1. மேல்
  2. கவலை
  3. உட்கார
  4. மணம்

விடை : உட்கார

8. கந்தம் என்னும் சொல் தரும் பொருள்

  1. மேல்
  2. கவலை
  3. உட்கார
  4. மணம்

விடை : மணம்

6. விசனம் என்னும் சொல்லின் பொருள்

  1. மேல்
  2. கவலை
  3. கீழ்
  4. மணம்

விடை : கவலை

குறுவினா

கவிஞர் தமிழ் ஒளி – குறிப்பு வரைக

  • கவிஞர் தமிழ் ஒளி இயற்பெயர் விஜயரங்கம்
  • வாழ்ந்த காலம் : 1924–1965
  • இவர் புதுவையில் பிறந்தவர்.
  • பாரதியாரின் வழித்தோன்றலகாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளஙகியவர்.
  • மக்களுகககாகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.
  • நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தின வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment