Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 Tao The Ching Book Back Solution

இயல் 8.3 – தாவோ தே ஜிங்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 8.3 ‘Tao The Ching’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 8.3 தாவோ தே ஜிங்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 8.3 Tao The Ching Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

தாவோ தே ஜிங் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Tao The Ching’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Tao The Ching Subject.

Previous Lesson: ஒளியின் அழைப்பு

தாவோ தே ஜிங் பாடல்

ஆரக்கால் முப்பதும்
சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன;
ஆனால், சக்கரத்தின் பயன்
அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது.
பாண்டம் பாண்டமாகக்
களிமண் வனையப்படுகிறது;
ஆனால், பாண்டத்தின் பயன்
அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது.
வீட்டுச் சுவர்களில்
வாயிலுக்காகவும் சன்னலுக்காவும்
வெற்றுவெளியை விடுகிறோம்;
ஆனால், வாயிலும் சன்னலும்
வெற்றுவெளி என்பதால் பயன்படுகின்றன.
எனவே, ஒரு பக்கம்
இருத்தலின் பலன் கிடைக்கிறது;
இன்னொரு பக்கம்
இருத்தலின்மையைப் பயன்படுத்திக்கொள்கிறோம்.

நூல் வெளி

  • லாவோர்ட்சு சீனாவில் பொ.ஆ.மு 2-ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்
  • கன்பூசியஸ் இவரது சம காலத்தவர். அக்காலம், சீன சிந்தனையின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
  • லாவேட்சு “தாவோவியம்” என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர்.
  • ஒழுக்கத்தை மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார்.
  • லாவோட்சுவாே இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன் வைத்தார்.
  • தாவோவியம் அதையே வலியுறுத்துகிறது.
  • பாடப்பகுதியிலுள்ள கவிதையை மொழிபெயர்த்தவர் சி.மணி

இலக்கணக் குறிப்பு

  • பாண்டம் பாண்டமாக – அடுக்குத் தொடர்
  • வாயிலும் சன்னலும் – எண்ணும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

இணைகின்றன – இணை + கின்று + அன் + அ

  • இணை – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • அ – சாரியை
  • அ – பலவின்பால் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

விடைக்கேற்ற வினாவைத் தேர்க

விடை – பானையின் வெற்றிடமே நமக்கு பயன்படுகிறது

  1. பானையின் எப்பகுதி  நமக்குப் பயன்படுகிறது?
  2. பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
  3. பானை எதனால் பயன்படுகிறது
  4. பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது

விடை : பானையின் எப்பகுதி  நமக்குப் பயன்படுகிறது?

குறு வினா

தாவோ நே ஜிங் இன்னொரு பக்கம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?

தாவோ நே ஜிங் “இன்னொரு பக்கம்” என்று இருத்தலின்மையைப் பயன்படுத்திக் கொள்வதை (வெற்றிடமே பயன்படுகிறது) குறிப்பிடுகிறார்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தாவோ தே ஜிங்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. லாவோட்சு, சீனாவில் ____________ முன் வாழ்ந்தவர். 

  1. பொ.ஆ.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு
  2. பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டிற்கு
  3. பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டிற்கு
  4. பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டிற்கு

விடை: பொ.ஆ.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு

2. லாவோட்சுவின் சமகாலத்தவர்

  1. மார்க்கோபோலா
  2. கன்பூசியஸ்
  3. ராமானுஜன்
  4. சேக்ஸ்பியர்

விடை: கன்பூசியஸ்

3. லாவோர்ட்சு இயற்றிய நூல்

  1. வெற்றிடம்
  2. தாவோவியம்
  3. தாவோ தே ஜிங்
  4. இருத்தலின்னமை

விடை : தாவோ தே ஜிங்

4. லாவோர்ட்சு __________ மொழிக்கவிஞர்

  1. தமிழ்
  2. ஜப்பான்
  3. அரபி
  4. சீன

விடை : சீன

5. தாவோ தே ஜிங் கவிதையை மொழிபெயர்த்தவர்

  1. சி.மணி
  2. பிச்சமூர்த்தி
  3. மறைமலையடிகள்
  4. ஜகந்நாதன்

விடை : சி.மணி

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ______________ வெற்றிடத்தை நடுவே வைத்து சுழல்கிறது

விடை : சக்கரம்

2. அழகிய பானையில் ______________ பயன்படுகிறது.

விடை : வெற்றிடமே

3. ______________, ______________ வெற்றிடமே நமக்கு பயன்படுகிறது.

விடை : சன்னலிலும், கதவிலும்

4. ______________  இடையே உள்ள வெற்றிடமே அறையாக பயன்படுகிறது.

விடை : சுவர்களுக்கு

குறு வினா

1. லாவோர்ட்சு – குறிப்பு வரைக

  • லாவோர்ட்சு சீனாவில் பொ.ஆ.மு 2-ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்
  • கன்பூசியஸ் இவரது சம காலத்தவர்
  • தாவோவியம் என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர்.
  • தாவோவியம் வலியுறுத்தும்  இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன் வைத்தார்.

2. வெற்றிடம் பயன்டும் பொருட்கள் என தாவோ ஜிங் கூறும் பொருட்கள் யாவை?

சக்கரம், சன்னல், பானை, சுவர்

3. தாவோவியம் எதைக் கூறுகின்றார்?

வாழ்க்கையை வாழ்வதன் மூலம் தான் யார் என்பதை அறிந்து கொள்ளுதல், வாழ்க்கையின் போக்கோடு செல்லுதல் ஆகிய அடிப்படைகளைத் தாவோவியம் கூறுகின்றது.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment