Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.2 Neethivenba Book Back Solution

இயல் 5.2 – நீதிவெண்பா

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 5.2 ‘Neethivenba’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 5.2 நீதிவெண்பா

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 5.2 Neethivenba Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

நீதிவெண்பா பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Neethivenba’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: மொழிபெயர்ப்புக் கல்வி

நீதிவெண்பா பாடல்

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

– கா.ப.செய்குதம்பிப் பாவலர்

நூல் வெளி

  • சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர்
  • இவர் வாழ்ந்த காலம் 1874 – 1950 ஆகும்
  • கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்
  • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
  • சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
  • செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றார்.
  • அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

சதாவதானம்

சதம் என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.

பலவுள் தெரிக

1. அருந்துணை என்பதைப் பிரித்தால் _____________

  1. அருமை + துணை
  2. அரு + துணை
  3. அருமை + இணை
  4. அரு + இணை

விடை : அருமை + துணை

2.  அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
    மருளை அகற்றி மதிக்கும் தெருளை என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

  1. தமிழ்
  2. அறிவியல்
  3. கல்வி
  4. இலக்கியம்

விடை : கல்வி

குறு வினா

செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழுக்கத் தொடர்களாக்குக

கற்போம்! கற்போம்!
அருளைப் பெருக்க கற்போம்!

கற்போம்! கற்போம்!
அறிவினைப் பெற கற்போம்!

கற்போம்! கற்போம்!
மயக்க விலக்க கற்போம்!

கற்போம்! கற்போம்!
உயிருக்குத் துணையாக கல்வியைக் கற்போம்!

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மொழிபெயர்ப்புக் கல்வி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

இலக்கணக் குறிப்பு

  • போற்று, பெருக்கி, திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
  • அருந்துணை – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. பெருக்கி = பெருக்கு + இ

  • பெருக்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2. திருத்தி = திருத்து + இ

  • திருத்து – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக.

1. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி என்ற பாடல் வரிகளை எழுதியவர்

  1. செய்குதம்பி பாவலர்
  2. பாரதியார்
  3. வீரமாமுனிவர்
  4. கவிமணி

விடை : செய்குதம்பி பாவலர்

2. சதவானி என்று பாராட்டப்பட்டவர்

  1. பரிதிமாற்கலைஞர்
  2. செய்குதம்பி பாவலர்
  3. வீரமாமுனிவர்
  4. கவிமணி

விடை : செய்குதம்பி பாவலர்

3. செய்குதம்பிப் பாவலர் ___________ கலையில் சிறந்து விளங்கியவர்.

  1. ஆடல்
  2. பாடல்
  3. ஓவியம்
  4. சதாவனம்

விடை : சதாவனம்

4. ____________ வயதிலே செய்குதம்பிப் பாவலர் செய்யுள் இயற்றும் திறன் பெற்றுள்ளார்

  1. 11
  2. 13
  3. 15
  4. 17

விடை : 15

5. செய்குதம்பிபாவலர் ______________ உரை எழுதியுள்ளார்

  1. சிலப்பதிகாரம்
  2. திருக்குறள்
  3. சீறாப்புராணம்
  4. சீவகசிந்தாமணி

விடை : சீறாப்புராணம்

6. நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது என்பது ____________ எனப்படும்.

  1. சதாவதானி
  2. சதகவாணி
  3. சத்திரவாணி
  4. சண்முகவாணி

விடை : சதாவதானி

7. இடலாக்குடியில் _____________ என்பவரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம், பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.

  1. பரிதிமாற்கலைஞர்
  2. செய்குதம்பி பாவலர்
  3. வீரமாமுனிவர்
  4. கவிமணி

விடை : செய்குதம்பி பாவலர்

8. சதம் என்பதன பொருள் தருக

  1. ஒன்று
  2. பத்து
  3. நூறு
  4. ஆயிரம்

விடை : நூறு

சிறு வினா

1. சதாவதானம் என்றால் என்ன?

சதம் என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையும், நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தேல சதாவதானம் ஆகும்.

2. செய்குதம்பிப் பாவலர் ஏன் சதாவதானியென போற்றப்படக் காரணம் யாது?

செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டியதால் “சதாவதானி” என்று பாராட்டப்பெற்றார்.

3. செய்குதம்பிப் பாவலர் குறிப்பு வரைக

  • காலம் : 1874 – 1950
  • பிறந்த இடம் : இடலாக்குடி (கன்னியாகுமரி)
  • சிறப்பு : 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன்
  • உரையெழுதிய நூல் : சீறாப்புறாணம்
  • சிறந்து விளங்கி கலை : சதாவதானம்
  • சிறப்பு : நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டும் தன்மை (சதாவதானி)

 

Leave a Comment