Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 Paripadal Book Back Solution

இயல் 4.3 – பரிபாடல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 4.3 ‘Paripadal’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 4.3 பரிபாடல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 4.3 Paripadal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

பரிபாடல் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Perumal Thirumozhi’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: செயற்கை நுண்ணறிவு

பரிபாடல் பாடல்

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்…

நூல்வெளி

  • பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  • பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார்.
  • இந்நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது.
  • இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
  • உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
  • இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

சொல்லும் பொருளும்

  • விசும்பு – வானம்
  • ஊழி – யுகம்
  • ஊழ – முறை
  • தண்பெயல் – குளிர்ந்த மழை
  • ஆர்தருபு – வெள்ளததில் மூழ்கிக் கிடந்த
  • பீடு – சிறப்பு
  • ஈண்டி – செறிந்து திரண்டு

இலக்கணக் குறிப்பு

  • ஊழ்ஊழ் – அடுக்குத்தொடர்
  • வளர்வானம் – வினைத்தொகை
  • செந்தீ – பண்புத்தொகை
  • வரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • தோன்றி, மூழ்கி – வினையெச்சங்கள்
  • கிளர்ந்த – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

கிளர்ந்த =  கிளர் + த் (ந்) + த் + அ

  • கிளர் – பகுதி
  • த் – சந்தி
  • த் (ந்) – ந் ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

பலவுள் தெரிக

பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

  1. வானத்தையும் பாட்டையும்
  2. வானத்தையும் புகழையும்
  3. வானத்தையும் பூமியையும்
  4. வானத்தையும் பேரொலியையும்

விடை : வானத்தையும் பேரொலியையும்

குறு வினா

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிதவற்றைக் குறிப்பிடுக

நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு

சிறு வினா

நம் முன்னோர் அறிவியல் கருத்துக்களை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாக தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியிலை நான்காம் தமிழாக கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில் அறிவயில் என்பது தமிழர் வாழ்வியேலாடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன.

சங்க இலக்கியமான் பரிபாடலில்….பூமியின் தோற்றம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

  • எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்கு காரணமான கரு பேராெலியுடன் தோன்றியது.
  • உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களடன் வளர்கின்ற என்னும் முதல் பூதங்கள் உருவாகின.
  • அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும் படியாகப் பல காலங்கள் கடந்தது.
  • பின்னர் பூமி குளிரும் படியாகத் தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
  • மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில்  இப்பெரிய புவி மூழ்கி உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
  • இச்சூழல் மாற்றத்தினால் உயிர்கள் தோன்றி நிலை பெற்று வாழ்கின்றன.
  • புவி உருவாகிய நிகழ்வை அறிவியல் அறிஞர்கள் கண்டறியும் முன்பே நம் தமிழர் கண்டறிந்தனர் என்பது தமிழருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியும் பெருமைக்குரிய செயலுமாகும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பரிபாடல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பரிபாடல் ___________ நூல்களுள் ஒன்று 

  1. பத்த்துபாட்டு
  2. ஐம்பெருங்காப்பியம்
  3. எட்டுத்தொகை
  4. ஐஞ்சிறுங்காப்பியம்

விடை : எட்டுத்தொகை

2. நமக்கு கிடைத்துள்ள பரிபாடலின் பாடல்களின் என்ணிக்கை ___________

  1. 24
  2. 42
  3. 108
  4. 72

விடை : 24

3. பரிபாடல் வழங்கப்படும் சிறப்பு பெயர்

  1. ஓங்கு பரிபாடல்
  2. நல் பரிபாடல்
  3. நல்ல பரிபாடல்
  4. நற்பரிபாடல்

விடை : ஓங்கு பரிபாடல்

4. பண்ணோடு பாடப்பட்ட சங்க நூல்

  1. நற்றிணை
  2. பரிபாடல்
  3. முல்லைப்பாட்டு
  4. பட்டினப்பாலை

விடை : பரிபாடல்

5. பரிபாடலில் __________ பாடல்கள் இருப்பதாகக் உரையாசிரியர்கள் கூறியுள்ளனர்

  1. 50
  2. 70
  3. 60
  4. 24

விடை : 70

6. 1924-இல் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்று நிருபித்தவர்.

  1. ஆல்பரட் ஐன்ஸ்டீன்
  2. எட்வின் ஹப்பிள்
  3. ஸ்டீபன் ஹாக்கிங்
  4. நியூட்டன்

விடை : எட்வின் ஹப்பிள்

7. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின் என்ற வரிகளை குறிப்பிட்டவர்

  1. ஆண்டாள்
  2. சுந்தரர்
  3. மாணிக்கவாசகர்
  4. திருமங்கையாழ்வார்

விடை: மாணிக்கவாசகர்

8. விசும்பு என்னும் சொல்லின் பொருள்

  1. வானம்
  2. காற்று
  3. யுகம்
  4. முறை

விடை : வானம்

9. ஊழி என்னும் சொல்லின் பொருள்

  1. வானம்
  2. காற்று
  3. யுகம்
  4. முறை

விடை : யுகம்

10. 1300 ஆண்டுகளுக்கு முன் திருஅண்டப்பகுதி பற்றிக் கூறியவர்

  1. மாணிக்கவாசகர்
  2. கீரந்தையார்
  3. பெருஞ்சித்திரனார்
  4. கபிலர்

விடை : மாணிக்கவாசகர்

11. குளிர்ந்த மழை என்னும் பொருள் தரும் சொல்

  1. தலை
  2. இய
  3. தண்பெயல்
  4. ஊழி

விடை : தண்பெயல்

குறு வினா

1. சங்க இலக்கிய நூல்கள் மூலம் நீவீர் அறிந்து கொள்ளும் செய்தி யாது?

  • ஈராயிம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை
  • அறிவாற்றல்
  • சமூக உறவு
  • இயற்கையப் புரிந்து கொள்ளும் திறன்.

2. பரிபாடல் நூல் குறிப்பு வரைக.

  • அகம் சார்ந்த பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் ” ஓங்கு பரிபாடல்” என்னும் புகழுடையது.
  • சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
  • உரையாசிரியர்கள்  எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
  • இப்போது 24 பாடல்களே கிடைத்துள்ளன.

3. அண்டப்பகுதி குறித்து மாணிக்கவாசகர் குறிப்பிடும் செய்தி யாது?

  • அண்டப்குதியின் உருண்டை வடிவம் ஒப்பற்ற வளமான காடசியும் ஒன்றுடன் ஒன்று நூறு கோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
  • கதிரவனின் ஒளிக்கற்றையில் தெரியும் தூசுத்துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.

4. பூமி வெள்ளத்தில மூழ்கக் காரணம் என்ன?

தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

Leave a Comment