Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.2 Poothoduthal Book Back Solution

இயல் 6.2 – பூத்தொடுத்தல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 6.2 ‘Poothoduthal’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 6.2 பூத்தொடுத்தல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 6.2 Poothoduthal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

பூத்தொடுத்தல் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Poothoduthal’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: நிகழ்கலை

பூத்தொடுத்தல் பாடல்

இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?

சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.
இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்-
ஒருவேளை,
என் மனமே நூலாகும்
நுண்மையுற்றாலொழிய.

-உமா மகேஸ்வரி

நூல் வெளி

  • கவிஞர் உமா மேகஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • தற்பாேது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார்.
  • நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப் படைத்துள்ளார்
  • கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.

பலவுள் தெரிக

மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

  1. அள்ளி முகர்ந்தால்
  2. தளரப் பிணைத்தால்
  3. இறுக்கி முடிச்சிட்டால்
  4. காம்பு முறிந்தால்

விடை : தளரப் பிணைத்தால்

சிறு வினா

நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.

இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்- நவீன கவிதை
கையாலே பூவெடுத்தா – மாரிக்குக்
காம்பழுகிப் போகுமின்னு
விரலாலே பூவெடுத்தா – மாரிக்கு
வெம்பி விடுமென்று சொல்லி
தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்குத்
தாங்கி மலரெடுத்தார்- நாட்டுப்புறப் பாடல்

விடை:-

நவின கவிதையில்

பூவின் மென்மை, அழகு, நளினத்தன்மை, எதற்கும் வருந்தாமல் சிரிக்கும் மலரைப்ப பெண்ணோடு ஓப்பிட்டுள்ளார்.

நாட்டுப்புறப் பாடலில்

பெண் தெய்வமாகிய மாரியோடு ஒப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது.

நவீன கவிதை கருத்து நாட்டுப்புறப் பாடல் கருத்து
பூவைக் இறுக்கி முடிச்சிட்டால் காம்பின் கழுத்து முறிவது போல பெண்களின் கழுத்து முறியும். மரியாகிய பெண் தெய்வத்திற்குக் கையாலே பூப்பறித்தால் காம்பு அழுகிவிடும் என்று கையாலே பூப்பறிக்கவில்லை.
தளப்பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவுவது போல பெண் தளர்ந்தால் வாழ்வு நழுவும். விரால் பூப்பறித்தால் பயனற்றதாய் வெம்பிவிடும் என்று விரலால் பூப்பறிக்கவில்லை.
வாசலிலே மரணம் வந்து நின்றாலும் வருந்தாமல் சிரிக்கும் பூவைப் போல பெண்ணும் வருத்தங்கள் வந்தபோது அவற்றைச் சுமையாகக் கருதாமல் கும்பத்தைக் காப்பாள். மேற்கண்ட காரணத்தால் மாரியாகி பெண் தெயவத்துக்குத் தங்கத் துரட்டி கொண்டு பூப்பறித்தார்.

மேற்கண்ட இரு பாடலிலும் பெண்ணை மலரோடு ஒப்பிட்டுப் பாடுவதை அறிய முடிகிறது.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பூத்தொடுத்தல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. மனித வாழ்விற்கு _____________ அழகூட்டுபவை

  1. கலைகள்
  2. செல்வம்
  3. கல்வி
  4. வெற்றி

விடை : கலைகள்

2. உமா மகேஸ்வரி _____________ பிறந்தவர்

  1. திருநெல்வேலி
  2. தூத்துக்குடி
  3. கன்னியாகுமரி
  4. மதுரை

விடை : மதுரை

3. தற்போது கவிஞர் உமா மேகஸ்வரி வாழ்ந்து வரும் மாவட்டம்

  1. திருநெல்வேலி
  2. தூத்துக்குடி
  3. கன்னியாகுமரி
  4. தேனி

விடை : தேனி

4. கவிஞர் உமா மேகஸ்வரி எழுதிய கவிதைத் தாெகுதிகளில் பொருந்தாது

  1. நட்சத்திரங்களின் நடுவே
  2. வெறும் பாெழுது
  3. கற்பாவை
  4. தோற்பாவை

விடை : தோற்பாவை

5. இறுக்கி இலக்கணக்குறிப்பு தருக

  1. பெயரெச்சம்
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை
  4. வினையெச்சம்

விடை : வினையெச்சம்

6. தளர இலக்கணக்குறிப்பு தருக

  1. பெயரெச்சம்
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை
  4. வினையெச்சம்

விடை : பெயரெச்சம்

6. தளர இலக்கணக்குறிப்பு தருக

  1. பெயரெச்சம்
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை
  4. வினையெச்சம்

விடை : பெயரெச்சம்

சிறு வினா

1. கவிஞர் உமா மேகஸ்வரி படைத்துள்ள  கவிதைத் தாெகுதிகளை கூறுக

நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை

2. கவிஞர் உமா மேகஸ்வரி சிறு குறிப்பு வரைக

  • பிறப்பு – மதுரை மாவட்டம்
  • வாழுமிடம் – தேனி மாவட்டம் (ஆண்டிபட்டி)
  • கவிதைத் தாெகுதி படைப்புகள் – நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை
  • தனித்தன்மைகள் – கவிதை, சிறுகதை, புதினம்

Leave a Comment