Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 Thirukural Book Back Solution

இயல் 6.7 – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 6.7 ‘Thirukural’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 6.7 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 6.7 Thirukural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirukural’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: அகப்பொருள் இலக்கணம்

குறு வினா

1. கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள் கூறுக.

தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர்.

2. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

சீர்  அசை  வாய்ப்பாடு
தஞ் / சம் நேர் நேர் தேமா
எளி / யர் நிரை நேர் புளிமா
பகைக் / கு நிரை நேர் (நிரைபு) பிறப்பு

3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

இகழ்நது ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

4. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்

  • கூரான ஆயுதம் – உழைத்ததால் கிடைத்த ஊதியம்.
  • காரணம் –  இதுவே அவனுடைய பகைவனை வெலல்லும் கூரான ஆயுதம்.

சிறு வினா

1. வள்ளுவம், சிறந்த அமைச்சருககுக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பாெருந்துவதைக் குறள் வழி விளக்குக.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு

தொழில் செய்வதற்கு தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயல்களை செய்தல் வேண்டும்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சசு

மனவலிலமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களை கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைய வேண்டும்.

சூழ்ச்சிகள்:-

மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை

இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது.

நடைமுறைகளை அறிதல்:-

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்

ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

2. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை.  அவருக்கு உணர்த்தும் நாேக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

பகைவரின் வலிமை:-

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்புரியும் எதிலான் துப்பு

சுற்றாத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும் இருந்தால் அவரால் பகைவரின் வலிமையை எதிர் கொள்ள முடியாது.

பகைக்கு ஆட்படல்:-

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்கம் எளியன் பகைக்கு

மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பாெருந்தும் பண்பு இல்லாதவராய், பிறர்க்குகு காெடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும். 

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்ல தில்லை பொருள் இப்பாடலில் அமைந்துள்ள அணியை கூறுக

  1. உவமை அணி
  2. பொருள் பின்வருநிலையணி
  3. சொல் பின்வருநிலை அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : சொற்பொருள் பின்வருநிலையணி

2. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
    றுண்டாகச் செய்வான் வினை இப்பாடலில் அமைந்துள்ள அணியை கூறுக

  1. உவமையணி
  2. உருவக அணி
  3. சொல் பின்வருநிலை அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : உவமையணி

3. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
    மேவன செய்தொழு கலான் இப்பாடலில் அமைந்துள்ள அணியை கூறுக

  1. உருவக அணி
  2. உவமையணி
  3. வஞ்சப்புகழ்ச்சி அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : வஞ்சப்புகழ்ச்சி அணி

4. ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது ______________

  1. செல்வம்
  2. வறுமை
  3. இன்பம்
  4. பெருமை

விடை : செல்வம்

5. ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது ______________

  1. செல்வம்
  2. வறுமை
  3. இன்பம்
  4. பெருமை

விடை : செல்வம்

6. ______________, ______________ இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.

  1. விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல்
  2. குடிப்பெருமை, சிறந்த அறிவாற்றல்
  3. செல்வம், குடிப்பெருமை
  4. அறிவாற்றல், செல்வம்

விடை : விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல்

7. ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது என்றால் அது ____________ ஆகும்.

  1. வறுமை
  2. பெருமை
  3. அறிவாற்றல்
  4. செல்வம்

விடை : வறுமை

குறு வினா

1. எவற்றையெல்லாம் அறிந்து அரிய செயலைச் செய்பவரை அமைச்சர் ஆவார்.

தாெழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரை அமைச்சர் ஆவார்.

2. எவையெல்லாம் சிறப்பாக அமைந்தவர் அமைச்சர் ஆவார்?

மன வலிமை, குடிகளைக் காத்தல், விடா முயற்சி, ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல் ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவர்.

3. முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பாெருள் ஒருவருக்கு தருவன யாவை?

முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பாெருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்.

4. இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு உடையவர்கள் முன் எது நிற்க இயலாது?

இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது.

5. சொற்பொருள் பின்வருநிலையணிக்கு சான்றாக அமைந்துள்ள குறளை எழுதுக

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது

6. மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
    ஒப்பாரி யாம்கண்ட தில் இப்பாடலில் அமைந்துள்ள அணியை எழுதுக

உவமையணி

7. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
    மேவன செய்தொழு கலான் இப்பாடலில் அமைந்துள்ள அணியை எழுதுக

வஞ்சப்புகழ்ச்சி அணி

Leave a Comment