[Term-3] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 Vayalum Valvum Book Back Solution

இயல் மூன்று – வயலும் வாழ்வும்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.2 ‘Vayalum Valvum’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 1.2 வயலும் வாழ்வும்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.2 Vayalum Valvum Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

வயலும் வாழ்வும் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Vayalum Valvum’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Vayalum Valvum subject.

Next Lesson: விருந்தோம்பல்

வயலும் வாழ்வும் பாடல்

ஓடை எல்லாம் தாண்டிப்போயி – ஏலேலங்கிடி ஏலேலோ
ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து – ஏலேலங்கிடி ஏலேலோ
சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி – ஏலேலங்கிடி ஏலேலோ
சேத்துக்குள்ளே இறங்குறாங்க – ஏலேலங்கிடி ஏலேலோ

நாத்தெல்லாம் பிடுங்கையிலே – ஏலேலங்கிடி ஏலேலோ
நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க – ஏலேலங்கிடி ஏலேலோ
ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் – ஏலேலங்கிடி ஏலேலோ
ஓடியோடி நட்டோமையா – ஏலேலங்கிடி ஏலேலோ

மடமடன்னு மடைவழியே – ஏலேலங்கிடி ஏலேலோ
மண்குளிரத் தண்ணீர்பாய – ஏலேலங்கிடி ஏலேலோ
சாலுசாலாத் தாளுவிட்டு – ஏலேலங்கிடி ஏலேலோ
நாலுநாலா வளருதம்மா – ஏலேலங்கிடி ஏலேலோ

மணிபோலப் பால்பிடித்து – ஏலேலங்கிடி ஏலேலோ
மனதையெல்லாம் மயக்குதம்மா – ஏலேலங்கிடி ஏலேலோ
அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் – ஏலேலங்கிடி ஏலேலோ
ஆளுபணம் கொடுத்துவாரான் – ஏலேலங்கிடி ஏலேலோ

சும்மாடும் தேர்ந்தெடுத்து – ஏலேலங்கிடி ஏலேலோ
சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் – ஏலேலங்கிடி ஏலேலோ
கிழக்கத்தி மாடெல்லாம் – ஏலேலங்கிடி ஏலேலோ
கீழே பார்த்து மிதிக்குதையா – ஏலேலங்கிடி ஏலேலோ

கால்படவும் கதிருபூரா – ஏலேலங்கிடி ஏலேலோ
கழலுதையா மணிமணியா – ஏலேலங்கிடி ஏலேலோ

தொகுப்பாசிரியர் – கி.வா. ஜகந்நாதன்

பாடலின் பொருள்

உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். பெண்கள் புடவையை இறுகக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர். நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர்.

ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் 0பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

நூல் வெளி

  • நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.
  • இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.
  • பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.

தெரிந்து தெளிவோம்

அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

மாடுகட்டிப் போரடித்தால் மாளாதுசெந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை

(நாட்டுப்புறப்பாடல்)

சொல்லும் பொருளும் 

  • குழி – நில அளவைப்பெயர்
  • சீலை – புடவை
  • சாண் – நீட்டல் அளவைப்பெயர்
  • மடை – வயலுக்கு நீர் வரும் வழி
  • மணி – முற்றிய நெல்
  • கழலுதல் – உதிர்தல்
  • சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உழவர் சேற்று வயலில் __________ நடுவர்.

  1. செடி
  2. பயிர்
  3. மரம்
  4. நாற்று

விடை : நாற்று

2. வயலில் விளைந்த முற்றிய நெற்பயிர்களை __________ செய்வர்.

  1. அறுவடை
  2. உழவு
  3. நடவு
  4. விற்பனை

விடை : அறுவடை

3. தேர்ந்தெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. தேர் + எடுத்து
  2. தேர்ந்து + தெடுத்து
  3. தேர்ந்தது + அடுத்து
  4. தேர்ந்து + எடுத்து

விடை : தேர்ந்து + எடுத்து

4. ஓடை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. ஓடைஎல்லாம்
  2. ஓடையெல்லாம்
  3. ஓட்டையெல்லாம்
  4. ஓடெல்லாம்

விடை : ஓடையெல்லாம்

பொருத்துக.

  1. நாற்று –  பறித்தல்
  2. நீர் –  அறுத்தல்
  3. கதிர் – நடுதல்
  4. களை – பாய்ச்சுதல்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை, எதுகைச் சொற்களை எழுதுக

மோனைச் சொற்கள்

  • டை – டியோடி
  • நாத்தெல்லாம் – நாலு நாலா
  • ணிபோல – னதையெல்லாம்
  • டமன்னு – ண் குளிரத்
  • சும்மாடும் – சுறுசுறுப்பும்

எதுகைச் சொற்கள்

  • சாலுசாலத் – நாலுநாலா
  • ண்டும் – தண்ணீர்பாய
  • லேலங்கடி – ஏலேலோ
  • ண்ணரைக் குழி – மண்குளிர
  • சேத்துக்குள்ளே – நாத்தெல்லாம்
  • கிக்கத்தி – கலுதையா

பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக.

  • போயி – போய்
  • பிடிக்கிறாங்க – பிடிக்கிறார்கள்
  • வளருது – வளர்கிறது
  • இறங்குறாங்க – இறங்கிறார்கள்
  • வாரான் – வரமாட்டான்

குறு வினா

1. உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?

நாற்றுப் பறிக்கும்போது உழவர்கள் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர்

2. நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?

கிழகத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெற்கதிரிலிருந்து நெல்மணியைப் பிர்ப்பர்

சிறு வினா

உழவுத் தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக

  • ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.
  • நடவு நட்ட வயிலின் மண் குளிருமாறு மடை வழியே நீர் பாய்ச்சினர்.
  • நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.
  • பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன.
  • அறுவடை செய்யும் ஆட்களுக்கு பணம் கொடுத்தனர்.
  • அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுக் கட்டுகளாக கட்டி தலைக்கு சும்மாடு வைத்து தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர்.
  • கிழகத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.
  • மாடுகள் மதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

சிந்தனை வினா

உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.

ஆற்றங்கரையில் நாகரிகம் உருவாகக் காரணமானது உழவுத்தொழில். விதைகளை விதைப்பதும், அவற்றுக்கு நீர் பாய்ச்சி வளர்ப்பது மட்டுமே பழங்காலத்தில் நடைபெற்றது. பின்னர், மனிதன் தன் சுய அறிவால் உழவுத்தொழிலுக்கு உதவியாக மாடுகளை பயன்படுத்தி இயற்கை எருக்களை கொண்டு பயிரிட்டான். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உழுகருவிகளையும் விதைத்தல் கருவிகளையும், பூச்சிக்கொலி, செயற்கை உரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினான். 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வயலும் வாழ்வும்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. நாட்டுப்புற பாடல்களை ____________ இலக்கியம் எனக் கூறுவர்

  1. எழுத்து மொழி
  2. வாய்மொழி
  3. பேச்சு மொழி
  4. சைகை மொழி

விடை : வாய்மொழி

2. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை மலை அருவி என்னும் நூலில்  தொகுத்தவர்.

  1. ந. பிச்சமூர்த்தி
  2. கி.வா.ஜெகந்நாதன்
  3. கி.ராஜநாரயணன்
  4. கு. அழகிரிசாமி

விடை : கி.வா.ஜெகந்நாதன்

3. குழி என்பதன் பொருள்

  1. நீர் அளவைப்பெயர்
  2. நில அளவைப்பெயர்
  3. முகத்தல அளவைப்பெயர்
  4. நீட்டல் அளவைப்பெயர்

விடை : நில அளவைப்பெயர்

4. கழலுதல் என்பதன் பொருள்

  1. உதிர்தல்
  2. அடித்தல்
  3. மடித்தல்
  4. அள்ளுதல்

விடை : உதிர்தல்

5. மணி என்பதன் பொருள்

  1. முற்றிய நெல்
  2. முற்றிய காய்
  3. முற்றிய பழம்
  4. முற்றிய கோதுமை

விடை : முற்றிய நெல்

6. தாண்டி + போயி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. தாண்டி போயி
  2. தாண்டிப்போயி
  3. தாண்டிப்போய்யி
  4. தாண்டிட்டுபோயி

விடை : தாண்டிப்போயி

7. சீலை + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. சீலை எல்லாம்
  2. சிலையெல்லாம்
  3. சீலையெல்லாம்
  4. சிலை எல்லாம்

விடை : சீலையெல்லாம்

8. நாத்து + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. நாத்தெல்லாம்
  2. நாத்து எல்லாம்
  3. நாத்துதெலாம்
  4. நத்துதெல்லாம்

விடை : நாத்தெல்லாம்

குறு வினா

1. உலகின் முதன்மையாக வைத்து கூறப்படும் தொழில் எது?

பசி தீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழிலே முதன்மையாக வைத்து கூறப்படுகிறது.

2. உழவுத் தொழிலின் முக்கிய செயல்பாடுகளானவை கூறுக

  • நிலத்தைத் தெரிவு செய்தல்
  • நாற்றுப் பறித்தல்
  • நாற்று நடுதல்
  • நீர் பாய்ச்சுதல்
  • அறுவடை செய்தல்
  • போரடித்தல்
  • நெல் பெறுதல்

3. போரடித்தல் என்றால் என்ன?

அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளை பிரிப்பதற்காக மாடுகளை கொண்டு மிதிக்கச்செய்வர். இதற்கு போரடித்தல் என்று பெயர்

Leave a Comment