Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.2 Malaichoru Book Back Solution

இயல் 6.2 – மழைச்சோறு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 6.2 ‘Malaichoru’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 6.2 மழைச்சோறு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 6.2 Malaichoru Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

மழைச்சோறு பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Malaichoru ‘ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Malaichoru Subject.

Previous Lesson: வளம் பெருகுக

தெரிந்து தெளிவோம்

மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர். கொடிய பஞ்சத்தை காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிறங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.

நூல் வெளி

  • பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்நூலின் பதிப்பாசிரியர் அ.கெளரன்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் ____________

  1. பெருமழை
  2. சிறு மழை
  3. எடைமிகுந்த மழை
  4. எடை குறைந்த மழை

விடை : பெருமழை

2. வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. வாசல் + எல்லாம்
  2. வாசல் + எலாம்
  3. வாசம் + எல்லாம்
  4. வாசு + எல்லாம்

விடை : வாசல் + எல்லாம்

3. பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. பெறு+ எடுத்தோம்
  2. பேறு + எடுத்தோம்
  3. பெற்ற + எடுத்தோம்
  4. பெற்று + எடுத்தோம்

விடை : பெற்று + எடுத்தோம்

4. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. கால்லிறங்கி
  2. காலிறங்கி
  3. கால் இறங்கி
  4. கால்றங்க

விடை : காலிறங்கி

குறு வினா

1. மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறுப்படுகிறது?

  • கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது.
  • பெற்றெடுத்த குழந்தைகளின் பசியை தீர்க்க முடியவில்லை
  • கலப்பை பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, ஏற்றம் இறைப்பவரி மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர் வேதனைப் படுகின்றனர்

2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை எனவே மக்கள் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்

சிறு வினா

1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?

  • வாளியில் கரைத்த மாவால் வாசலில் கோலம் போட்டனர்
  • இந்தக் கோலத்தை கரைக்க மழை வரவில்லை.
  • பானையில் மாவைக் கரைத்து, பாதை எல்லாம் கோலம் போட்டனர்.
  • அந்தக் கோலம் கரைக்கவும் மழை வரவில்லை.

2. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.

  • கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை பெய்யவில்லை.
  • முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை.
  • கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை
  • மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை

3. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?

  • மழைச்சோறு எடுத்த பின், பேய் மழையாக ஊசி போல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.
  • சிட்டுப் போல மின்னி மின்னி ஊரெங்கும் பெய்கிறது.
  • ஊரெங்கும் செல்ல மழை பெய்கிறது.

சிந்தனை வினா

மழைவளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை?

  • மழை வளம் பெருக அதிகப்படியனா மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.
  • மரங்களை நட்டால் மட்டும் போதாது, அதனை நன்கு பராமரிக்க வேண்டும்.
  • எங்காவது மரங்கள் வெட்டும்போது, அதனைத் தடுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டி கட்டாயம் வைக்க வேண்டும்.
  • மழை பெய்யும் காலங்களுக்கு முன் குளங்கள் குட்டைகளை தூர்வார வேண்டும்.

 

பின்வரும் பகுதியில் “வளம் பெருகுக” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மழைச்சோறு பாடலானது பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள ______________ என்னும் கட்டுரையிலிருந்து  எடுக்கப்பட்டுள்ளது.

  1. பாண்டிய நாட்டு மழைச்சோற்று வழிபாடு
  2. சேர நாட்டு மழைச்சோற்று வழிபாடு
  3. பல்லவ நாட்டு மழைச்சோற்று வழிபாடு
  4. கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு

விடை : கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு

2. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர்

  1. பி.ச.குப்புசாமி
  2. ஜெயகாந்தன்
  3. அ.கெளரன்
  4. ந.பிச்சமூர்த்தி

விடை : அ.கெளரன்

3. வனவாசம் சென்று விடுவோம் என்று கூறியவர் _________

  1. உழவர்
  2. மறவர்
  3. புலவர்
  4. குறவர்

விடை : உழவர்

4. பாதையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. பாதை + எல்லாம்
  2. பாதை + இல்லாம்
  3. பாதை + யெல்லாம்
  4. பாதை + யேல்லாம்

விடை : பாதை + எல்லாம்

5. முருங்கைச்செடி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. முரு + கை + செடி
  2. முருங்கை + செடி
  3. முருங்கைச் + செடி
  4. முருகை + செடி

விடை : முருங்கை + செடி

6. பெற்று + எடுத்தேன் என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. பெற்று எடுத்தேன்
  2. பெற்றெடுத்தேன்
  3. பெற் எடுத்தேன்
  4. பேற்றெடுத்தேன்

விடை : பெற்றெடுத்தேன்

7. கால் + இறங்கி என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. காலில்றங்கி
  2. கால் இறங்கி
  3. காலிறங்கி
  4. காலில்லிறங்கி

விடை : காலிறங்கி

7. உலகம் + எங்கும் என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. உலகம்மெங்கும்
  2. உலகம் எங்கும்
  3. உலகமெங்கும்
  4. உலகம் ஏங்கும்

விடை : உலகமெங்கும்

குறு வினா

1. வாசல் மற்றும் பாதைகளில் இடப்பட்டது என்ன?

கோலம்

2. மழை இல்லாமல் வாடிய செடி எது?

கடலைச்செடி

3. உழவர்கள் எவற்றையெல்லாமதலையில் வைத்து செல்கின்றனர்?

மழைச்சோறு வாங்கிய பானை, அகப்பை, பழைய முறம் ஆகியவற்றை உழவர்கள் தலையில் வைத்து செல்கின்றனர்.

4. மழை எவ்வாறு மின்னியது?

சிட்டு போல மின்னியது மழை

Leave a Comment