Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.1 Valam Peruga Book Back Solution

இயல் 6.1 – வளம் பெருகுக

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 6.1 ‘Valam Peruga’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 6.1 வளம் பெருகுக

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 6.1 Valam Peruga Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

வளம் பெருகுக பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Valam Peruga’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Valam Perugasubject.

Previous Lesson: திருக்குறள்

வளம் பெருகுக பாடல்

பெருநீரால் வாரி சிறக்க! இருநிலத்து
இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார
முட்டாது வந்து மழை பெய்க! பெய்தபின்
ஒட்டாது வந்து கிளைபயில்க! அக்கிளை
பால்வார் பிறைஞ்சிக் கதிரீன! அக்கதிர்
ஏர்கெழு செல்வர் களம்நிறைக! அக்களத்துப்
போரெல்லாங் காவாது வைகுக! போரின்
உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு
நாரை பிரியும் விளைவயல்
யாணர்த் தாகஅவன் அகன்றலை நாடே!

பாடலின் பொருள்

சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்குக. அகன்ற நிலப்பகுதியில் இவ்விதைகள் குறைவின்றி முளைவிடுக. முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிக. தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்க. கிளைத்துச் செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களை ஈனுக. அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைக. அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குக. போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலததில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புதுவருவாயுடன் சிறந்து வி்ளங்குக.

நூல் வெளி

  • ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை.
  • தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது.
  • இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
  • இநநூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன

சொல்லும் பொருளும்

  • வாரி – வருவாய்
  • எஞ்சாமை – குறைவின்றி
  • முட்டாது – தட்டுப்பாடின்றி
  • ஒட்டாது – வாட்டம்இன்றி
  • வைகுக – தங்குக
  • ஓதை – ஓசை
  • வெரீஇ – அஞ்சி
  • யாணர் – புதுவருவாய்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ______________ எல்லாம் முளைத்தன.

  1. சத்துகள்
  2. பித்துகள்
  3. முத்துகள்
  4. வித்துகள்

விடை : வித்துகள்

2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ______________ பெருகிற்று.

  1. காரி
  2. ஓரி
  3. வாரி
  4. பாரி

விடை : வாரி

3. அக்களத்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. அ + களத்து
  2. அக் + களத்து
  3. அக்க + அளத்து
  4. அம் + களத்து

விடை : அ + களத்து

4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. கதிரென
  2. கதியீன
  3. கதிரீன
  4. கதிரின்ன

விடை : கதிரீன

குறு வினா

1. பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது யாது?

தகுந்த காலத்தில் பெய்யும் மழையே பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது ஆகும்.

2. உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?

நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர்

சிறு வினா

உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?

  • சேரனின் நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்கிறது.
  • அகலமான நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளை விடுகின்றன.
  • முளைத்த விதைகள் செழிப்புடன் வளர தட்டுபாடின்றி மழை பொழிகின்றது.
  • தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது.
  • செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப் பெற்றிருக்கின்றன.
  • அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல் இல்லாமலே இருக்கின்றது.
  • நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் ஒலி எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சி தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற நாடு புது வருவாயுடன் சிறந்து விளங்குகின்றது.

சிந்தனை வினா

உழவுத் தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?

உழவுத் தொழில் உயிர்தொழில்

நாகரீகம் என்ற பெயரில் இன்று யாரும் உழவுத் தொழில் செய்ய முன்வருவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒருவர் கட்டாயம் உழவுத்தொழில் செய்தல் வேண்டும். உழவுத்தொழில், அரசுப் பணியில் ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டும் உழவுத்தொழிலில் சிறந்து விளங்கும் உழவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளும் பரிசுத் தொகையும் கொடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் வேலை விருப்பப் பட்டியலில் உழவுத்தொழிலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே உழவுத்தொழில் நிச்சயம் சிறக்கும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வளம் பெருகுக” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில் _____________

  1. நெய்தல் தொழில்
  2. மீன்பிடித் தொழில்
  3. மண்பாண்டத் தொழில்
  4. உழவுத் தொழில்

விடை : உழவுத் தொழில்

2.யாணர் என்பதன் பொருள்

  1. வாரி
  2. எஞ்சாமை
  3. ஒட்டாது
  4. புதுவருவாய்

விடை : புதுவருவாய்

3. வளம் பெருக பாடல் _________ மன்னர் பற்றியது

  1. சேரர்
  2. சோழர்
  3. பாண்டியர்
  4. பல்லவர்

விடை : சேரர்

4. தகடூர் என்பதன் தற்போதைய பெயர் 

  1. மாமண்டூர்
  2. வடுவூர்
  3. தர்மபுரி
  4. பல்லவர்

விடை : தர்மபுரி

6. வைகுக என்பதன் பொருள் தருக

  1. ஓசை
  2. தங்குக 
  3. அஞ்சி
  4. கெஞ்சி

விடை : தங்குக

7. எஞ்சாமை என்பதன் பொருள் தருக

  1. குறைவா
  2. குறைவின்றி
  3. இனிதாக
  4. துன்பமாக

விடை : குறைவின்றி

8. அக்கிளை என்ற சொல்லைப் பிரிதது எழுதக் கிடைப்பது ____________.

  1. அக் + கிளை
  2. அ + கிளை
  3. அக்க + கிளை
  4. அம் + கிளை

விடை : அ + கிளை

9. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

  1. கதிரீன
  2. கதீர்ஈன
  3. கதீரென
  4. கதிரென

விடை : கதிரீன

10. அ + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

  1. அகதிர்
  2. அக்கெதிர்
  3. அக்கதிர்
  4. அக்கேதிர்

விடை : அக்கதிர்

11. உருகு + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

  1. உருகெழும்
  2. உருஎழும்
  3. உருஏழும்
  4. உருகேழும்

விடை : உருகெழும்

 

Leave a Comment