Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.4 Manitha Yenthiram Book Back Solution

இயல் 8.4 – மனித யந்திரம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 8.4 ‘Manitha Yenthiram’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 8.4 மனித யந்திரம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 8.4 Manitha Yenthiram Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

மனித யந்திரம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Manitha Yenthiram’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Manitha Yenthiram Subject.

Previous Lesson: அயோத்திதாசர் சிந்தனைகள்

நூல் வெளி

  • சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைபித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாச்சலம்.
  • சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.
  • நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்,
  • சில திரைப்படங்களுக்கு கதை, உரையாடலும் எழுதியுள்ளார்.
  • கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒரு நாள் கழித்து போன்றவை இவரது சிறுகதைகளுள் புகழ் பெற்றவை.
  • மணிக்கொடி இதழில் வெளியான புதுமைபித்தனின் சிறுகதை ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.

முன்னுரை

“சிறுகதை மன்னன்” என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் எழுதிய கதை மனித யந்திரம் ஆகும். அதனை இனிக் காண்போம்.

மீனாட்சி சுந்தரம்

மீனாட்சி சுந்தரம் ஒரு கடையில் எழுத்தர் வேலை செய்பவர். 45 வருடங்களாக ஒரே கடையில் வேலை செய்கிறார். சம்பளம் மாதத்திற்கு 20 ரூபாய். அவர் மிகவும் சாது. அவரைப் பாரத்தாலே அனைவருக்கும் பழுதுபடாத எந்திரம் தான் ஞாபகத்திற்கு வரும். இவரை ஊரார் அப்பாவிப் பிராணி என்றுதான் கூறுவார்கள்.

மீனாட்சி சுந்தரத்தின் ஆசை

சாதுவாக இருந்த மீனாட்சி சுந்தரத்தின் மனில் ஆசைகள் முளைவிடத் தொடங்கின. மாடும் கன்றும் வாங்க வேண்டும். நிலத்தைத் திருப்ப வேண்டும். ஒருமுறை கொழும்புக்குப் போய் விட்டு தங்க அரைஞான், கடிகாரச் சங்கிலி, கையில் பணம் போன்றவற்றுடன் மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும். தெருவில் எதிரிலே வருகிறவர்கள் எல்லாரும் துண்டை இடுப்பில் கட்டி அண்ணாச்சி சவுக்கியமா? என்று கேட்க வேண்டும். இதுதான் மீனாட்சி சுந்தரத்தின் ஆசை.

மீனாட்சி சுந்தரத்தின் செயல்

கணக்கு வழக்கைப் பாரத்து விட்டுக் கடையை பூட்டிவிட்டுப் பணத்தை முதலாளி வீட்டில் ஒப்படைத்து விட்டு வருவதுதான் வழக்கம். மீனாட்சி சுந்தரம் தன்னுடைய ஆசைகளுக்கு வடிவம் கொடுக்க நினைத்தார். பெட்டியில் உள்ள பணத்தைத் திருடிச் சென்று விட முடிவு செய்தார். நாற்பது ரூபாயும் சில்லறையும் இருந்ததை எடுத்துக் கொண்டு கடையைப் பூட்டிவிட்டு சென்றார் மீனாட்சி சுந்தரம்.

மனமாற்றம்

மீனாட்சி சுந்தரம் கடையில் திருடிய பணத்தையும் சில்லறையும் எடுத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து தூத்துக்குடி வண்டியில் ஏறி அமர்ந்தார். திருடிய பயத்தில் வியர்வை பூத்தது. அந்த நேரத்தில் மீனாட்சி சுந்தரம் என்று ரயில்வே போலீஸ் நண்பர் கல்யாணசுந்தரம் மீனாட்சி சுந்தரத்தைக் கூப்பிட்டார். திருடிய பயத்தில் தூத்துக்குடி செல்வதாகக் கூறினார். காலை விடிந்தவுடன் எல்லா விஷயமும் ஊராருக்குத் தெரிந்.துவிடும். கல்யாண சுந்தரமும் நான் தூத்துக்குடி சென்றுள்ளதை சொல்லிவிடுவான். எனவே பயத்தில் மனமாற்றம் அடைந்தான். மீண்டு கடையை நோக்கி நடந்து தனக்குரிய பதினொண்ணே காலணா சம்பளத்தை எடுத்துக்கொண்டு, முதாலாளி ஐயா வீட்டிற்குச் சென்று சம்பளம் எடுத்துக் கொண்டதை சொல்லி விட்டுச் சென்றார்.

முடிவுரை

குற்றவுணர்வு மனதில் அழுத்திக் கொண்டே இருந்து, அது நம்மைத் தீயவை பக்கத்தில் விடாமல் காப்பாற்றும் என்பதை அறியலாம்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மனித யந்திரம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைபித்தனின் இயற்பெயர் 

  1. சொ. விருத்தாச்சலம்
  2. துரைமாணிக்கம்
  3. ராதகிருஷ்ணன்
  4. ராமகிருஷணன்

விடை: சொ. விருத்தாச்சலம்

2. சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர்

  1. தாராபாரதி
  2. வெ.இராமலிங்கனார்
  3. புதுமைபித்தன்
  4. சுரதா

விடை: புதுமைபித்தன்

3. புதுமைபித்தனின் சிறுகதைகளுள் பொருந்தாதது

  1. சாபவிமோசனம்
  2. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
  3. பொன்னகரம்
  4. இரு நாள் கழித்து

விடை: இரு நாள் கழித்து

4. புதுமைபித்தனின் சிறுகதை வெளியான இதழ்

  1. அன்னம் விடு தூது
  2. கவி
  3. மணிக்கொடி
  4. தென் சிட்டு

விடை: மணிக்கொடி

5. ஒரு ரூபாய் என்பது

  1. பன்னிரெண்டு அணாக்கள்
  2. எட்டு அணாக்கள்
  3. பதினாறு அணாக்கள்
  4. நான்கு அணாக்கள்

விடை: பதினாறு அணாக்கள்

6. அரை ரூபாய் என்பது

  1. பன்னிரெண்டு அணாக்கள்
  2. எட்டு அணாக்கள்
  3. பதினாறு அணாக்கள்
  4. நான்கு அணாக்கள்

விடை: எட்டு அணாக்கள்

7. கால் ரூபாய் என்பது

  1. பன்னிரெண்டு அணாக்கள்
  2. எட்டு அணாக்கள்
  3. பதினாறு அணாக்கள்
  4. நான்கு அணாக்கள்

விடை: நான்கு அணாக்கள்

குறுவினா

1. புதுமைபித்தனின் சிறுகதைகளுள் புகழ் பெற்றவை யாவை?

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒரு நாள் கழித்து

2. முற்காலத்தில் வழக்கிலிருந்த அளவைப் பெயர்கள் யாவை?

மகாணி, வீசம்

3. முற்காலத்தில் வழக்கிலிருந்த நாணயத்தின் பெயர்களை எழுதுக

அணா, சல்லி, துட்டு

Leave a Comment