Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.5 Yappu illakanam Book Back Solution

இயல் 8.5 – யாப்பு இலக்கணம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 8.5 ‘Yappu illakanam’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 8.5 யாப்பு இலக்கணம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 8.5 Yappu illakanam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

யாப்பு இலக்கணம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Yappu illakanam’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Yappu illakanam Subject.

Previous Lesson: மனித யந்திரம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அசை _____________ வகைப்படும்.

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

விடை : இரண்டு

2. விடும் என்பது _____________ சீர்.

  1. நேரசை
  2. நிரையசை
  3. மூவசை
  4. நாலசை

விடை : நிரையசை

3. அடி _____________ வகைப்படும்.

  1. இரண்டு
  2. நான்கு
  3. எட்டு
  4. ஐந்து

விடை : ஐந்து

4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _____________

  1. எதுகை
  2. இயைபு
  3. அந்தாதி
  4. மோனை

விடை : மோனை

பொருத்துக.

  1. வெண்பா –  துள்ளல் ஓசை
  2. ஆசிரியப்பா –  செப்பலோசை
  3. கலிப்பா –  தூங்கலோசை
  4. வஞ்சிப்பா –  அகவலோசை

விடை: 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

சிறு வினா

1. இருவகை அசைகளையும் விளக்குக.

நேரசை:-

குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.

(எ.கா.) ந, நம், நா, நாம்.

நிரையசை:-

இரண்டு குறில் எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.

(எ.கா.) கட, கடல், கடா, கடாம்

2. தளை என்பது யாது?

சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்.

3. அந்தாதி என்றால் என்ன?

ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை ஆகும்

4. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வெண்பா. ஆசிரியப்பா. கலிப்பா. வஞ்சிப்பா. என பா நான்கு வகைப்படும்.

மொழியை ஆள்வோம்

இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக.

1. முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.

விடை: முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.

2. மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை.

விடை: மழை நன்கு பெய்ததால் விளையாட முடியவில்லை.

3. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.

விடை: எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.

4. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

விடை: திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.

5. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.

விடை: அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று பின்பற்ற வேண்டும்.

6. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்.

விடை: குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

விபத்தில்லா வாகனப் பயணம்

சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

  • ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
  • சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும்.
  • சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
  • தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழி விட வேண்டும்.
  • எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
  • மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

வினாக்கள்

1. விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?

சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

2. கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?

  • தீயணைப்பு வாகனம்
  • அவசர சிகிச்சை ஊர்தி

3. சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?

சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

4. மலைச்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?

கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

5. வாகனம் செலுத்தும் முறையை எழுதுக.

வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.

மொழியோடு விளையாடு

படத்தைப் பார்த்து எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Yappu illakanam Badathai Parthu Eluthua a Samacheer Kalvi 8th Tamil Guide Yappu illakanam Badathai Parthu Eluthua b
ஓரெழுத்துச் சொல் பூ
இரண்டு எழுத்துச் சொல் பால் வாழை
மூன்று எழுத்துச் சொல் கன்று பழம்
நான்கு எழுத்துச் சொல் புல்வெளி வாழை இலை
ஐந்து எழுத்துச் சொல் தாய்ப்பசு கன்றுகள்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  • தொண்டு – Charity
  • பகுத்தறிவு – Rational
  • நேர்மை – Integrity
  • தத்துவம் – Philosophy
  • ஞானி – Saint
  • சீர்திருத்தம் – Reform 

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “யாப்பு இலக்கணம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை __________ என்பர்.

  1. மரபுக்கவிதைகள்
  2. புதுக்கவிதைகள்
  3. யாப்புகவிதைகள்
  4. சிறுகவிதைகள்

விடை : மரபுக்கவிதைகள்

2. இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு
மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகளைப் _____________ என்பர்.

  1. மரபுக்கவிதைகள்
  2. புதுக்கவிதைகள்
  3. யாப்புகவிதைகள்
  4. சிறுகவிதைகள்

விடை : புதுக்கவிதைகள்

3. யாப்பு இலக்கணம் _____________ எழுதப் பயன்படுகிறது.

  1. புதுக்கவிதைகள்
  2. யாப்புகவிதைகள்
  3. மரபுக்கவிதைகள்
  4. சிறுகவிதைகள்

விடை : மரபுக்கவிதைகள்

4. மோனை என்பது ________ எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது

  1. முதல்
  2. இரண்டாவது
  3. மூன்றாவது
  4. கடைசி

விடை : முதல்

5. மோனை என்பது ________ எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது

  1. முதல்
  2. இரண்டாவது
  3. மூன்றாவது
  4. கடைசி

விடை : முதல்

6. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ______________

  1. மோனை
  2. இயைபு
  3. அசை
  4. எதுகை

விடை : எதுகை

7. குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்ததாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்ததாலும் ___________ ஆகும்.

  1. ஓரசை
  2. ஈரசை
  3. நேரசை
  4. நிரை

விடை : நேரசை

8. இரண்டு குறில் எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்ததாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்ததாலும் ___________ ஆகும்.

  1. ஓரசை
  2. ஈரசை
  3. நேரசை
  4. நிரையசை

விடை : நிரையசை

9. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் ___________ என்பர்.

  1. தடை
  2. அடி
  3. தளை
  4. அசை

விடை : தளை

10. பா ___________ வகைப்படும்.

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

விடை : நான்கு

11. தொடை ___________ வகைப்படும்.

  1. இரண்டு
  2. நான்கு
  3. ஆறு
  4. எட்டு

விடை : எட்டு

12. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது _________ ஆகும்.

  1. தடை
  2. தளை
  3. அடி
  4. அசை

விடை : அடி

சிறு வினா

1. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் யாவை?

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை

2. எழுத்துகளின் வகைகளை கூறு?

  • குறில் – உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்
  • நெடில் – உயிர்நெடில், உயிர்மெய் நெடில்
  • ஒற்று – மெய்யெழுத்து, ஆய்த எழுத்து

3. சீர்களின் வகைகளை கூறு?

ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்

4. பா வகைகள் – விளக்கம் தருக

வெண்பா

  • வெண்பா செப்பல் ஓசை உடையது.
  • அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை.

ஆசிரியப்பா

  • ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது.
  • சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.

கலிப்பா

  • கலிப்பா துள்ளல் ஓசை உடையது.
  • கலித்தொகை கலிப்பாவால் ஆனது.

வஞ்சிப்பா

  • வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது.

Leave a Comment