Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 Uyir Gunangal Book Back Solution

இயல் 9.1 – உயிர்க்குணங்கள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 9.1 ‘Uyir Gunangal’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 9.1 உயிர்க்குணங்கள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 9.1 Uyir Gunangal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

உயிர்க்குணங்கள் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Uyir Gunangal’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Uyir Gunangal Subject.

Previous Lesson: திருக்குறள்

உயிர்க்குணங்கள் பாடல்

அறிவுஅருள் ஆசைஅச்சம்
அன்புஇரக்கம் வெகுளிநாணம்

நிறைஅழுக்காறு எளிமை
நினைவுதுணிவு இன்பதுன்பம்

பொறைமதம் கடைப்பிடிகள்
பொச்சாப்பு மானம்அறம்
வெறுப்புஉவப்பு ஊக்கம்மையல்
வென்றிஇகல் இளமைமூப்பு

மறவிஓர்ப்பு இன்னபிற
மன்னும்உயிர்க் குணங்கள்எல்லாம்

குறைவறப் பெற்றவள்நீ
குலமாதே பெண்ணரசி

இறைமகன் வந்திருக்க
இன்னும்நீ உறங்குதியோ

புறப்படு புன்னகைநீ
பூத்தேலோ ரெம்பாவாய்!

– இறையரசன்

பாடலின் பொருள்

அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை, பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை இவ்வுலகில் நிலைபெற்ற மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும். இவற்றையுடைய மனித குலத்தில் பிறந்த பெண்ணே! நற்பண்புகள் எவையென அறிவுறுத்த இறைவனின் திருக்குமாரன் வந்த பின்னும் நீ உறங்கலாமா? உண்மையை உணர, புன்னகை பூத்து நீ புறப்படுவாயாக!

தெரிந்து கொள்வோம்

பாவை நூல்கள்

  • மார்கழி மாதம் பொழுது விடியும் முன்பே, பெண்கள் தூக்கத்திலிருந்து எழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் பாவை நோன்பு ஆகும்.
  • திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்கள் எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை ஆகும். ஆண்டாள் இந்நூலை பாடியுள்ளார்.
  • சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை ஆகும். இந்நூலை பாடியவர் மாணிக்கவாசகர்.

நூல் வெளி

  • இறையரசனின் இயற்பெயர் சேசுராசா என்பதாகும்.
  • கல்லூரி ஒன்றில் தமிழப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்
  • ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.

சொல்லும் பொருளும்

  • நிறை – மேன்மை
  • அழுக்காறு – பொறாமை
  • பொறை – பொறுமை
  • மதம் – கொள்கை
  • பொச்சாப்பு – சோர்வு
  • இகல் – பகை
  • மையல் – விருப்பம்
  • மன்னும் – நிலைபெற்ற
  • ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அடுத்தவர் வாழ்வைக் கண்டு ___________ கொள்ளக்கூடாது.

  1. உவகை
  2. நிறை
  3. அழுக்காறு
  4. இன்பம்

விடை : அழுக்காறு

2. நாம் நீக்க வேண்டியவற்றுள் ஒன்று ___________

  1. பொச்சாப்பு
  2. துணிவு
  3. மானம்
  4. எளிமை

விடை : பொச்சாப்பு

3. இன்பதுன்பம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ___________

  1. இன்பம் + துன்பு
  2. இன்பம் + துன்பம்
  3. இன்ப + அன்பம்
  4. இன்ப + அன்பு

விடை : இன்பம் + துன்பம்

4. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________

  1. குணங்கள்எல்லாம்
  2. குணமெல்லாம்
  3. குணங்களில்லாம்
  4. குணங்களெல்லாம்

விடை : குணங்களெல்லாம்

பொருத்துக

  1. நிறை –  பொறுமை
  2. பொறை –  விருப்பம்
  3. மதம் –  மேன்மை
  4. மையல் –  கொள்க

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

குறு வினா

1. மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

  • அறிவு
  • அச்சம்
  • சினம்
  • பொறாமை
  • துணிவு
  • பொறுமை
  • மானம்
  • மகிழ்ச்சி
  • வெற்றி
  • முதுமை
  • கருணை
  • அன்பு
  • நாணம்
  • எளிமை
  • இன்பம்
  • கொள்கையைப் பின்பற்றுதல்
  • அறம்
  • ஊக்கம்
  • பகை
  • மறதி
  • ஆசை
  • இரக்கம்
  • மேன்மை
  • நினைவு
  • துன்பம்
  • சோர்வு
  • வெறுப்பு
  • விருப்பம்
  • இளமை
  • ஆராய்ந்து தெளிதல்

ஆகியன மனிதர்களின் பொது இயல்புகள் ஆகும்

2. மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?

அறிவு, இரக்கம், பொறுமை, கருணை, மேன்மை, அறம், அன்பு, எளிமை, வெற்றி

சிறு வினா

மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

  • அறிவு
  • அச்சம்
  • சினம்
  • பொறாமை
  • துணிவு
  • பொறுமை
  • மானம்
  • மகிழ்ச்சி
  • வெற்றி
  • முதுமை
  • ஆசை
  • இரக்கம்
  • மேன்மை
  • நினைவு
  • துன்பம்
  • கருணை
  • அன்பு
  • நாணம்
  • எளிமை
  • இன்பம்
  • கொள்கையைப் பின்பற்றுதல்
  • அறம்
  • ஊக்கம்
  • பகை
  • மறதி
  • சோர்வு
  • வெறுப்பு
  • விருப்பம்
  • இளமை
  • ஆராய்ந்து தெளிதல்

ஆகியன மனிதர்களின் பொது இயல்புகள் ஆகும்

சிந்தனை வினா

மனிதர்கள் வளர்க்க வேண்டிய பண்புகளையும் விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?

வளர்க்க வேண்டிய பண்புகள்

  • உண்மை
  • இரக்கம் கொள்ளுதல்
  • தன்னம்பிக்கை
  • கருணை
  • மூத்தோரை மதித்தல்
  • கடின உழைப்பு
  • சான்றோர்களைப் பின்பற்றுதல்
  • சினம் கொள்ளாமை
  • நேர்மை
  • ஏழைக்கு உதவுதல்
  • முயற்சி
  • அறம்
  • அறிவு

விலக்க வேண்டிய பண்புகள்

  • பொய்
  • களவு
  • சோம்பல்
  • சினம்
  • புறம் கூறுதல்
  • மறதி
  • அச்சம்
  • ஆசை
  • ஆடம்பரம்
  • பொறாமை

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “உயிர்க்குணங்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஆண்டாள் இயற்றிய நூல்

  1. திருவாசகம்
  2. திருவெம்பாவை
  3. திருப்பாவை
  4. திருக்குறள்

விடை : திருப்பாவை

2. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்

  1. திருவாசகம்
  2. திருவெம்பாவை
  3. திருப்பாவை
  4. திருக்குறள்

விடை : திருவெம்பாவை

3.  _____________ தழுவித் கன்னிப்பாவை நூலை இறையரசன் எழுதினார்

  1. திருவாசகம்
  2. திருவெம்பாவை
  3. திருப்பாவை
  4. திருக்குறள்

விடை : திருப்பாவை

4.  கன்னிப்பாவை நூலின் ஆசிரியர்

  1. ஆண்டாள்
  2. மாணிக்கவாசகர்
  3. சுந்தரர்
  4. இறையரசன்

விடை : இறையரசன்

5. நிறை என்ற சொல்லின் பொருள்

  1. மேன்மை
  2. பொறுமை
  3. சோர்வு
  4. விருப்பம்

விடை : மேன்மை

6. பொறை என்ற சொல்லின் பொருள்

  1. பொறாமை
  2. மதம்
  3. கல்
  4. நிறை

விடை : அழுக்காறு

7. அழுக்காறு என்ற சொல்லின் பொருள்

  1. மதம்
  2. கல்
  3. பொறாமை
  4. நிறை

விடை : பொறாமை

8. அழுக்காறு என்ற சொல்லின் பொருள்

  1. மதம்
  2. கல்
  3. பொறாமை
  4. நிறை

விடை : பொறாமை

9. அறிவருள் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. அறிவு + வருள்
  2. அறிவு + ஆருள்
  3. அறிவு + அருள்
  4. அறிவு + இருள்

விடை : அறிவு + அருள்

10. குறைவுற என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. குறைவு + வற
  2. குறைவு + ஆற
  3. குறைவு + உற
  4. குறைவு + அற

விடை : குறைவு + உற

11. குணங்களெல்லாம் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. குணங்கள் + யெல்லாம்
  2. குணங்கள் + ளெல்லாம்
  3. குணங்க + எல்லாம்
  4. குணங்கள் + எல்லாம்

விடை : குணங்கள் + எல்லாம்

சிறு வினா

1. பாவை நூல் கருதப்படும் மூன்று நூல்களை எழுதுக

திருப்பாவை. திருவெம்பாவை. கன்னிப்பாவை

2. பாவை நோன்பு என்பது யாது?

மார்கழி மாதம் பொழுது விடியும் முன்பே, பெண்கள் தூக்கத்திலிருந்து எழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் பாவை நோன்பு ஆகும்.

3. திருப்பாவை குறிப்பு வரைக

  • திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்கள் எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை ஆகும்.
  • திருப்பாவை நூலை பாடியவர் ஆண்டாள்.

4. திருவெம்பாவை குறிப்பு வரைக

  • சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருப்பாவை ஆகும்.
  • திருப்பாவை நூலை பாடியவர் மாணிக்கவாசகர்.

5. இறையரசன் – குறிப்பு வரைக

  • இறையரசனின் இயற்பெயர் சேசுராசா என்பதாகும்.
  • கல்லூரி ஒன்றில் தமிழப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்
  • ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.

Leave a Comment