Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 Ilaiya Tholanuku Book Back Solution

இயல் 9.2 – இளைய தோழனுக்கு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 9.1 ‘Ilaiya Tholanuku’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 9.2 இளைய தோழனுக்கு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 9.2 Ilaiya Tholanuku Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

இளைய தோழனுக்கு பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Ilaiya Tholanuku’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Ilaiya Tholanuku Subject.

Previous Lesson: உயிர்க்குணங்கள்

இளைய தோழனுக்கு பாடல்

நட
நாளைமட்டுமல்ல
இன்றும்
நம்முடையதுதான்

நட
பாதங்கள்
நடக்கத்
தயாராய் இருந்ததால்
பாதைகள்
மறுப்புச் சொல்லப்
போவதில்லை.

நெய்யாய்த் திரியாய்
நீயே மாறினால்
தோல்வியும் உனக்கொரு
தூண்டுகோலாகும்!
வெற்றி
உனைச்சுற்றி
வெளிச்சவிதை
விதைக்கும்!

கவலைகளைத்
தூக்கிக்கொண்டு
திரியாதே…
அவை
கைக்குழந்தைகளல்ல..

*ஓடிவந்து கைகுலுக்க
ஒருவருமில்லையா?
உன்னுடன் நீயே
கைகுலுக்கிக் கொள்!

தூங்கி விழுந்ததால்
பூமி உனக்குப்
படுக்கையாகிறது.
விழித்து நடந்ததால்
அதுவே உனக்குப்
பாதையாகிறது!

நீ
விழித்தெழும் திசையே
பூமிக்குக் கிழக்கு!
உன்
விரல்களில் ஒளிரும்
சூரியவிளக்கு!

நட!
நாளைமட்டுமல்ல
இன்றும்
நம்முடையதுதான்
நட!

– மு.மேத்தா

பாடலின் பொருள்

செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல. இன்றும் நமது நாள் தான். உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப் போவதில்லை.

உலகிற்க ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் உன்னையே நீ மாற்றினால் தோல்வியும் உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும்! வெற்றி உன் அங்கமாககி, வாழ்வில் ஒளியேற்றும்.

கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம். உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தாதே! உன்னை விட ஒருவரும் உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட முடியாது.

நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்படுக்கையாகும். நீ கிளர்ந்து எழுந்தால் அது உனக்கும் பாதையாகும்.

நீ செயல்படப் புறப்டம் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு. கதிரவன் உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும். செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல. இன்றும் நமது நாள் தான்.

நூல் வெளி

  • வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா.
  • கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்
  • புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்
  • கண்ணீர்ப் பூக்கள், சோழ நிலா, மகுட நிலா உள்ளிட்ட பல நூல்களையும், திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
  • மு.மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உன்னுடன் நீயே ___________ கொள்.

  1. சேர்நது
  2. பகை
  3. கைகுலுக்கிக்
  4. நட்பு

விடை : கைகுலுக்கிக்

2. கவலைகள் ___________ அல்ல

  1. சுமைகள்
  2. சுவைகள்
  3. துன்பங்கள்
  4. கைக்குழந்தைகள்

விடை : கைக்குழந்தைகள்

3. விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

  1. விழி + எழும்
  2. விழித்து + எழும்
  3. விழி + தெழும்
  4. விழித் + தெழும்

விடை : விழித்து + எழும்

4. போவதில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

  1. போவது + இல்லை
  2. போ + இல்லை
  3. போவது + தில்லை
  4. போவது + தில்லை

விடை : போவது + இல்லை

5. படுக்கையாகிறது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

  1. படுக்கை + யாகிறது
  2. படுக்கையா + ஆகிறது
  3. படுக்கையா + கிறது
  4. படுக்கை + ஆகிறது

விடை : படுக்கை + ஆகிறது

6. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________

  1. தூக்கிகொண்டு
  2. தூக்குக்கொண்டு
  3. தூக்கிக்கொண்டு
  4. தூக்குகொண்டு

விடை : தூக்கிக்கொண்டு

7. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________

  1. விழியெழும்
  2. விழித்தெழும்
  3. விழித்தழும்
  4. விழித்துஎழும்

விடை : விழித்தெழும்

குறு வினா

1. கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தைகளாக உருவகப்படுத்துகிறார்

2. தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?

நெய்யாகவும், திரியாகவும் நீ மாறினால் தோல்வியும் உனக்கு தூண்டுகோலாகும்.

சிறு வினா

பூமி எப்போது பாதையாகும்?

  • நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய் படுக்கையாகும்
  • நீ பிடித்து நடந்தால் அந்த பூமியே உனக்குப் பாதையாகும்.

சிந்தனை வினா

வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

வாழ்வில் உயர

  • ஊக்கம்
  • தன்னம்பிக்கை
  • தளராத முயற்சி
  • காலம் அறிந்து செயல்படுதல்
  • செய்யும் செயலில் நேர்மை
  • சொல்லும் சொல்லில் உண்மை
  • நடுவுநிலைமை
  • ஒருமைப்பாடு
  • இரக்கம்
  • அன்பு

ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “இளைய தோழனுக்கு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மேத்தாவின் படைப்புகளில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற  நூல்

  1. கண்ணீர்பூக்கள்
  2. மகுட நிலா
  3. ஊர்வலம்
  4. ஆகாயத்துக்கு அடுத்தவீடு

விடை : ஆகாயத்துக்கு அடுத்தவீடு

2. மேத்தாவின் படைப்புகளில் பொருந்தாதது

  1. கண்ணீர்பூக்கள்
  2. மகுட நிலா
  3. தேர்வலம்
  4. ஆகாயத்துக்கு அடுத்தவீடு

விடை : தேர்வலம்

3. போவது + இல்லை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. போவதில்லை
  2. போவது இல்லை
  3. போவது தில்லை
  4. போவ்வதில்லை

விடை : போவதில்லை

4. உனக்கு + ஒரு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. உனக்கு ஒரு
  2. உனக்கு கொரு
  3. உனக்கொரு
  4. உனக் ஒரு

விடை : உனக்கொரு

5. கைக்குழந்தைகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. கைக் + குழந்தைகள்
  2. கைக்கு + குழந்தைகள்
  3. கை + குழந்தைகள்
  4. கை + ஐ + குழந்தைகள்

விடை : கை + குழந்தைகள்

5. படுக்கையாகிறது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. படுக்கை + யாகிறது
  2. படுக்கை + ஆகிறது
  3. படுக்க்கை + ஆகிறது
  4. படுக்க்கை + யாகிறது

விடை : படுக்கை + ஆகிறது

குறு வினா

1. மு.மேத்தாவின் படைப்புகளில் சிலவற்றை கூறுக

  • கண்ணீர்ப் பூக்கள்
  • சோழ நிலா
  • மகுட நிலா

2. மு. மேத்தாவின் சாகித்திய அகாதெமி விருது நூல் எது?

மு. மேத்தா எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

சிறு வினா

கவிஞர் மு.மேத்தா குறிப்பு வரைக

  • வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்
  • கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்
  • புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடி
  • கண்ணீர்ப் பூக்கள், சோழ நிலா, மகுட நிலா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்
  • இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

Leave a Comment