Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 Maduriaikanchi Book Back Solution

இயல் 7.4 – மதுரைக்காஞ்சி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 7.4 ‘Maduriaikanchi’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 7.4 மதுரைக்காஞ்சி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 7.4 Maduriaikanchi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

மதுரைக்காஞ்சி பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Maduriaikanchi’  which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Maduriaikanchi Subject.

Previous Lesson: முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி பாடல்

மதுரை மாநகர்

மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை
தொல்வலி நிலைஇய, அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு
வையை அன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வானம் மூழ்கி
சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்
ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப
மாகால் எடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்ப ணை அறைவனர் நுவல
கயம் குடைந்தன்ன இயம்தொட்டு இமிழிசை
மகிழ்ந்தோ ர் ஆடும் கலிகொள் சும்மை
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து

(அடிகள் 351-365)

நூல் வெளி

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.
  • காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.
  • மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.
  • இந்நூல் 782 அடிகளைக் கொண்டது.
  • இதில் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன. இதைப் பெருகுவள மதுரைக்காஞ்சி என்பர்.
  • இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
  • மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
  • எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

சொல்லும் பொருளும்

  • புரிசை – மதில்
  • அணங்கு – தெய்வம்
  • சில்காற்று – தென்றல்
  • புழை – சாளரம்
  • மாகால் – பெருங்காற்று
  • முந்நீர் – கடல்
  • பணை – முரசு
  • கயம் – நீர்நிலை
  • ஓவு – ஓவியம்
  • நியமம் – அங்காடி

இலக்கணக்குறிப்பு

  • ஓங்கிய – பெயரெச்சம்
  • நிலைஇய – சொல்லிசை அளபெடை
  • குழாஅத்து – செய்யுளிசை அளபெடை
  • வாயில் – இலக்கணப் போலி
  • மா கால் – உரிச்சொல் தொடர்
  • முழங்கிசை, இமிழிசை – வினைத் தொகை
  • நெடுநிலை, முந்நீர் – பண்புத் தொகை
  • மகிழ்ந்தோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. ஆழ்ந்த = ஆழ் + த்(ந்) + த் + அ

  • ஆழ் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

2. ஓங்கிய = ஓங்கு + இ(ன்) + ய் + அ

  • ஓங்கு – பகுதி
  • இ(ன்) – இறந்தகால இடைநிலை
  • ய் – உடம்படுமெய்
  • அ – பெயரெச்ச விகுதி

3. மகிழ்ந்தோர் – மகிழ் + த்(ந்) + த் + ஓர்

  • மகிழ் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி

குறு வினா

மதுரைக்காஞ்சி –  பெயர்க்காரணத்தை குறிப்பிடுக

காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.

சிறு வினா

“மாகால் எடுத்த முந்நீர்போல” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம் சுட்டல்

இவ்வடி மாங்குடிமருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி நூலில் இடம் பெற்றுள்ளன.

விளக்கம்

விழாவைப் பற்றிய முரசறைவாேர் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடல் ஒலி போல் ஒலிக்கின்றது. பெருங்காற்று புகுந்தவுடன் கடல் பேரொலி எழுப்பும். அதனைப் போல மிகுதியான ஓசையுடன் முரசறைவோர் விழா பற்றி முழக்கம் செய்தனர்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மதுரைக்காஞ்சி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. மதுரைக்காஞ்சி வழங்கப்படும் பெயர்களில் பொருந்தாதது

  1. மாநகர் பாட்டு
  2. கூடற்தமிழ்
  3. காஞ்சிப்பாட்டு
  4. மதுரைப்பாட்டு

விடை : மதுரைப்பாட்டு

2. மதுரைக்காஞ்சி நூலிற்கு மாநகர் பாட்டு என்ற பெயரினை வழங்கியவர்

  1. பரிதிமாற்கலைஞர்
  2. மறைமலையடிகள்
  3. ச.வே.சுப்பிரமணியன்
  4. சுப்பிர பாரதி மணியன்

விடை : ச.வே.சுப்பிரமணியன்

3. பழங்காலத்தில் தமிழகத்தில் வனவிலங்குச் சரணாலயம் இருந்ததைக் _____________ நூல் குறிப்பிட்டுள்ளது.

  1. புறநானூறு
  2. நான்மாடக்கூடல்
  3. மதுரைக்காஞ்சி
  4. பட்டினப்பாலை

விடை : மதுரைக்காஞ்சி

4. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன்

  1. பரிதி இளம்வழுதி
  2. கரிகாலன்
  3. செங்குட்டுவன்
  4. பாண்டிய நெடுஞ்செழியன்

விடை : பாண்டிய நெடுஞ்செழியன்

5. மதுரைக்காஞ்சியை பாடியவர்

  1. மாங்குடி மருதனார்
  2. நத்தனார்
  3. திருத்தக்கத்தேவர்
  4. ஓரம்போகியார்

விடை : மாங்குடி மருதனார்

6. மாங்குடி மருதனார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ____________ என்னும் ஊரில் பிறந்தவர்.

  1. மாங்காடு
  2. மாங்குடி
  3. திருத்து
  4. பனையங்குறிச்சி

விடை : மாங்குடி

7. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை

  1. 10
  2. 21
  3. 22
  4. 13

விடை : 13

8. மதுரைக்காஞ்சி நூலிலில் உள்ள அடிகளின் எண்ணிக்கை

  1. 762
  2. 782
  3. 792
  4. 772

விடை : 782

9. மதுரையைப் பாடிய பதினெண்மேற்கணக்கு நூலில் முதன்மையானது

  1. புறநானூறு
  2. நான்மாடக்கூடல்
  3. பட்டினப்பாலை
  4. மதுரைக்காஞ்சி

விடை : மதுரைக்காஞ்சி

10. மதுரையில் காணப்படும் பகல் கடைகளுக்கு வழங்கப்படும் பெயர்

  1. அல்லங்காடி
  2. நாளங்காடி
  3. புரிசை
  4. கயம்

விடை : நாளங்காடி

11. மதுரையில் காணப்படும் இரவுக் கடைகளுக்கு வழங்கப்படும் பெயர்

  1. அல்லங்காடி
  2. நாளங்காடி
  3. புரிசை
  4. கயம்

விடை : அல்லங்காடி

குறு வினா

1. காஞ்சி என்பதன் பொருள் யாது?

காஞ்சி என்பதன் பொருள் நிலையாமை ஆகும்.

2. பதினெண்மேற்கணக்கு நூல்கள் யாவை?

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

3. முந்நீர் என்பதன் விரிவாக்கம் தருக

ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்

4. மதுரைக்காஞ்சியின் வேறு பெயர்கள் யாது?

பெருகுவள மதுரைக்காஞ்சி, மாநகர் பாட்டு, கூடற்தமிழ், காஞ்சிப்பாட்டு

5. மாங்குடி மருதனார் குறிப்பு வரைக

  • ஊர் – மாங்குடி (திருநெல்வேலி மாவட்டம்)
  • நூல் – மதுரைக்காஞ்சி, எட்டுத்தொகையில் 13 பாடல்கள்

6. மதுரைக்காஞ்சி பெயர்க்காரணம் கூறுக

மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.

7. மதுரைக்காஞ்சி பற்றிய குறிப்பு வரைக

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.
  • காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.
  • மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.
  • இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன .
  • இதைப் ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’ என்பர்.
  • இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment