Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 Muthollayiram Book Back Solution

இயல் 7.3 – முத்தொள்ளாயிரம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 7.3 ‘Muthollayiram’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 7.3 முத்தொள்ளாயிரம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 7.3 Muthollayiram Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

முத்தொள்ளாயிரம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Muthollayiram’  which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Muthollayiram Subject.

Previous Lesson: சீவக சிந்தாமணி

முத்தொள்ளாயிரம் பாடல்

ஏமாங்கத நாட்டு வளம்

சேரநாடு

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

சோழநாடு

காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிைசக்கும் நாளோதை – காவலன்த ன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு.

பாண்டியநாடு

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும்-சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு.

நூல் வெளி

  • வெண்பாவால் எழுதப்பட்ட நூல்
  • மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாக பாடுகிறது.
  • மூவேந்தர்களைப் பற்றிய பாடப்பட்ட 900 பாடல்களை கொண்ட நூல் என்பதால் முத்தெள்ளாயிரம் என்று பெயர் பெற்றது.
  • நூல் முழுமையாக கிடைக்கவில்லை
  • புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில பதிப்பிக்கப்பட்டுள்ளன.
  • எழுதியவர், தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை.
  • இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரகக் கருதப்படுகிறார்.
  • சேர நாட்டை அச்சமில்லாத நாடாகவும், சோழ நாட்டை ஏர்களச் சிறப்பும், போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது.

சொல்லும் பொருளும்

  • அள்ளல் – சேறு
  • பழனம் – நீர் மிக்க வயல்
  • வெரீஇ – அஞ்சி
  • பார்பபு – குஞ்சு
  • நாவலோ – நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
  • இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்
  • நந்து – சங்கு
  • கமுகு – பாக்கு
  • முத்தம் – முத்து

இலக்கணக் குறிப்பு

  • அஞ்சி – பெயரச்சம்
  • வெண்குடை, இளங்கமுகு – பண்புத்தொகை
  • கொல்யானை, குவிமொட்டு – வினைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

கொண்ட = கொள்(ண்) + ட் + அ

  • கொள் – பகுதி
  • ண் – ஆனது விகாரம்
  • ட் – இறந்தகால இடைநிலை
  • இ – பெயரெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. சாெல்லும் பாெருளும் பாெருந்தியுள்ளது எது?

  1. வருக்கை – இருக்கை
  2. புள் – தாவரம்
  3. அள்ளல் – சேறு
  4. மடிவு – தொடக்கம்

விடை : மடிவு – தொடக்கம்

2. நக்சிலைவேல் காேக்காேதை நாடு, நல்யானைக் காேக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,

  1. பாண்டிய நாடு, சேர நாடு
  2. சாேழ நாடு, சேர நாடு
  3. சேர நாடு, சாேழ நாடு
  4. சாேழ நாடு, பாண்டிய நாடு

விடை : சேர நாடு, சாேழ நாடு

குறு வினா

1. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?

சேறு – அள்ளல், வயல் – பழனம்

2. கொற்கை நகரில் முத்துக்களைப் போல் உள்ள பொருள்களாக் காட்டப்பட்டுவன எவை?

சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள்

சிறு வினா

சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

சேரர்:-

வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.

சோழர்:-

உழவர்கள் நெய்போர் மீது ஏறி “நாவலோ” என்று கூறி மற்ற உழவர்களை அழைப்பர். இது போரில் யானை மீது நின்று “நாவலோ” என்று கூவி மற்ற வீரர்களை அழைப்பது போல் இருந்தது. இத்தகு வளம் சோழ நாட்டில் காணப்பட்டது.

பாண்டியர்:-

கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது.

2. தற்குறிப்பேற்றவணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

இலக்கணம்:-

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் மனக்கருத்தை ஏற்றிக் கூறவது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.

சான்று:-

“அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்டதென வெரீஇப்பு ள்ளினம்”

விளக்கம்:-

இயல்பான நிகழ்வு – வயலில் ஆம்பல் மலர்தல்.

கவிஞர் மனக்கருத்து – நீர் பறவைகள் வெள்ளத்தில் தீப்பற்றியதாக எண்ணி வருந்தி தன் குஞ்சுகளை காத்தல்.

ஆகையால் இச்செய்யுள் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சீவக சிந்தாமணி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. வெண்பாவால் எழுதப்பட்ட நூல் ____________ ஆகும்.

  1. முத்தொள்ளாயிரம்
  2. கலிப்பா
  3. ஆசிரியப்பா
  4. வஞ்சிப்பா

விடை : வெண்பா

2. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ____________ நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

  1. 2
  2. 5
  3. 7
  4. 8

விடை : 5

3. புறத்திரட்டு நூலிலிருந்து ___________ கிடைக்கபெற்று முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

  1. 101 செய்யுட்கள்
  2. 108 செய்யுட்கள்
  3. 105 செய்யுட்கள்
  4. 118 செய்யுட்கள்

விடை : 108 செய்யுட்கள்

4. அள்ளல் என்ற சொல்லின் பொருள்

  1. வயல்
  2. பாக்கு
  3. சேறு
  4. முத்து

விடை : சேறு

5. முத்தம் என்ற சொல்லின் பொருள்

  1. பவளம்
  2. தங்கம்
  3. முத்து
  4. வெள்ளி

விடை : முத்து

6. வெரீஇ என்ற சொல்லின் பொருள்

  1. நினைத்து
  2. இணைந்து
  3. துணிந்து
  4. அஞ்சி

விடை : அஞ்சி

பொருத்துக

  1. சேர நாடு – முத்துடைத்த நாடு
  2. சோழ நாடு – அச்சமில்லா நாடு
  3. பாண்டிய நாடு – போர்க்கள சிறப்புடைய நாடு

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

குறு வினா

1. வயல்களில் செவ்வாம்மல் மலர்கள் மலர்ந்திருந்ததைக் கண்டு நீர் பறவைகள் அஞ்சக் காரணம் என்ன?

வயல்களில் செவ்வாம்மல் மலர்கள் மலர்ந்திருந்ததைக் கண்டு, நீரில் தீப்பிடித்தது போல் இருந்ததால் நீர்ப் பறவைகள் அஞ்சியது.

2. சேர நாட்டு வளம் பற்றி முத்தெள்ளாயிரம் கூறுவனவற்றை எழுதுக

வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.

3. பாண்டிய நாட்டு வளம் பற்றி முத்தெள்ளாயிரம் கூறுவனவற்றை எழுதுக

கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது.

4. முத்தெள்ளாயிரம் நூற் குறிப்பு வரைக

  • வெண்பாவால் எழுதப்பட்ட நூல்
  • மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாக பாடுகிறது.
  • மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களை கொண்ட நூல் முத்தெள்ளாயிரம்
  • நூல் முழுமையாக கிடைக்கவில்லை
  • எழுதியவர், தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment