Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.2 Manimegalai Book Back Solution

இயல் 3.2 – மணிமேகலை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 3.2 ‘Manimegalai’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 3.2 மணிமேகலை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 3.2 Manimegalai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

மணிமேகலை வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Manimegalai’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Manimegalai Subject.

Previous Lesson: ஏறு தழுவுதல்

Class 8 Tamil Text Books – Download

நூல் வெளி

  • தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
  • மணிமேகலை  ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்றானது,
  • மணிமேகலையின் துறவு வாழக்கையைக் கூறுவதால் மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயருண்டு.
  • இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம், பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம்
  • சொற்சுவையும், பொருட்சுவையும் இயற்கை வருணைனைகளும் நிறைந்தது.
  • பெளத்த சமயம் சார்புடையது.
  • மணிமேகலை கதை அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்று கூறுவர்.
  • இது 30 காதையாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை
  • மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர்  சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
  • இவர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர்.
  • கூல வணிகம் (கூலம் – தானியம்) செய்ததால் கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் என்பர்.
  • இவரின் வேறுபெயர் –  தண்டழிச் சாத்தன், தண்டமிழ்ப்புலவன்.
  • கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
  • இவரும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் சமகாலத்தவர் என்பர்

சொல்லும் பொருளும்

  • சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்
  • பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள், குழீஇஒன்றுகூடி
  • தோம் – குற்றம்
  • கோட்டி – மன்றம்
  • பொலம் – பொன்
  • வேதிகை – திண்ணை
  • தூணம் – தூண்
  • தாமம் – மாலை
  • கதலிகைக் கொடி – சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது,
  • காழூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி
  • விலோதம் – துணியாலான கொடி
  • வசி – மழை
  • செற்றம் – சினம்
  • கலாம் – போர்
  • துருத்தி – ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு).

இலக்கணக்குறிப்பு

  • தோரணவீதியும், தோமறு கோட்டியும் – எண்ணும்மை
  • காய்க்குலை கழுகு, பூக்கொடிவல்லி, முத்துத்தாமம் – இரணடாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மாற்றுமின், பரப்புமின் – ஏவல் வினைமுற்று
  • உறுபொருள் – உரிச்சொல் தொடர்
  • தாழ்பூந்துறை – வினைத்தொகை
  • பாங்கறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • நன்பொருள், தண்மணல், நல்லுரை – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. பரப்புமின் = பரப்பு +மின்

  • பரப்பு – பகுதி
  • மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி

2. அறைந்தான் = அறை + த்(ந்) + த் +அன் + அன்

  • அறை – பகுதி
  • த் – சந்தி (ந்) ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அன் – சாரியை
  • அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

  1. திசைச்சொற்கள்
  2. வடசொற்கள்
  3. உரிச்சொற்கள்
  4. தொகைச்சொற்கள்

விடை : தொகைச்சொற்கள்.

சிறு வினா

1. பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் இடஞ்சுட்டி பொருள் விளக்குக

இடம்:

மணிமேகலை விழாவறைக் காதையில் முரசு கொட்டுபவன் இவ்வரிகளை கூறினான்

பொருள் விளக்கம்:

புகார் நகரில் 28 நாட்கள் இந்திர விழா நடைபெறுவதால், தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று முரசு கொட்டுபவன் தெரிவித்தான்.

2. பட்டிமண்டபம், பட்டிமன்றம் இரண்டும் ஒன்றா? விளக்குக எழுதுக

பட்டிமன்றம், பட்டிமண்டபம் இரண்டும் ஒன்றே!

விளக்கம்:

புலவர்கள் சொற்போரிட்டு வாதிடும் இடம் பட்டிமண்டபம் ஆகும். இவையே இன்று பட்டிமன்றம் என்றும் அழைக்கப்டுகிறது.

குறு வினா

உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.

ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகள்:-

  • தோரணம் கட்டுதல், தெருக்களையும், கோவில் மண்டபங்களையும் தூய்மைப்படுத்தி வண்ணம் அடித்தல், கோலமிடுதல் போன்றவற்றை செய்தனர்.
  • பனையோலை, மாவிலை தோரணங்களை கட்டுவர். வாழை மரங்களை கட்டி வைப்பர்.
  • நாடகம், இசைக்கச்சேரி, பட்டிமன்றம் ஆகியவை நடக்க ஏற்பாடு செய்வர்.

இந்திரவிழா நிகழ்வுகள்:-

  • தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றில் அழகுப் பொருட்கள் பலவற்றை அழகுபடுத்தினர்.
  • பாக்கு, வாழை, வஞ்சிக் கொடி, பூங்கொடி, கரும்பு ஆகியவற்றை நட்டு வைத்தனர்.
  • தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றில் புது மணலைப் பரப்பினர்.
    பட்டிமண்டபத்தில் வாதிட ஏற்பாடு செய்தனர்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மணிமேகலை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பல மொழி பேசும் மக்களைக் குறிக்கும் சொல் ______________

  1. பன்மொழியாளர்
  2. பாடை மக்கள்
  3. சமயக்கணக்கர்
  4. எண்பேராயம்

விடை : பாடை மக்கள்

2. புகார் நகரில் நடைபெறும் விழா

  1. இந்திர விழா
  2. சித்திரை திருவிழா
  3. வைகாசி திருவிழா
  4. ஓணம் திருவிழா

விடை : இந்திர விழா

4. தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழும் நூல்கள்

  1. சிலப்பதிகாரம், மணிமேகலை
  2. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி
  3. சீவகசிந்தாமணி, மணிமேகலை
  4. குண்டலகேசி, வளையாபதி

விடை : சிலப்பதிகாரம், மணிமேகலை

4. தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழும் நூல்கள்

  1. சிலப்பதிகாரம், மணிமேகலை
  2. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி
  3. சீவகசிந்தாமணி, மணிமேகலை
  4. குண்டலகேசி, வளையாபதி

விடை : சிலப்பதிகாரம், மணிமேகலை

5. மணிமேகலையின் முதல் காதை

  1. விழாவறை காதை.
  2. பவத்திறம் அறுக காதை
  3. பாவை நோற்ற காதை
  4. விவாத காதை

விடை: விழாவறை காதை

6. மணிமேகலையின் இறுதிக் காதை

  1. விழாவறை காதை.
  2. விவாக காதை
  3. பாவை நோற்ற காதை
  4. விவாத காதை

விடை: பாவை நோற்ற காதை

7. மணிமேகலையில் உள்ளட பாடல் அடிகளின் எண்ணிக்கை

  1. 4575
  2. 4557
  3. 4755
  4. 4775

விடை: 4755

8. இளங்கோவடிகளை சீத்தலை சாத்தனார் ________, ___________, _______________ என பாராட்டியுள்ளார்

  1. தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன்
  2. தண்டமிழ் ஆசான், பாட்டுக்கொரு தலைவன், நன்னூற்புலவன்
  3. கவித்தந்தை, பாட்டுக்கொரு தலைவர், நன்னூற்புலவன்
  4. சாத்தன், பாட்டுக்கொரு தலைவர், நன்னூற்புலவன்

விடை: தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன்

9. பொருந்தாத இணையைக் கண்டறிக

  1. மணிமேகலை – சீத்தலைசாத்தனார்
  2. மணிமேகலை – மணிமலைத் துறவு
  3. மணிமேகலை – 30 காதைகள்
  4. மணிமேகலை – மூன்று காண்டங்கள்

விடை : மணிமேகலை – மூன்று காண்டங்கள்

10. பொருந்தாத இணையைக் கண்டறிக

  1. சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்
  2. பாடைமாக்கள் – பலமொழி பேசும் மக்கள்
  3. எண்பேராயம் – அயல்நாட்டினர்
  4. ஐம்பொருங்குழு – அமைச்சர் குழு

விடை : எண்பேராயம் – அயல்நாட்டினர்

8. இந்திர விழா நடைபெறும் நாட்கள்

  1. 28
  2. 26
  3. 24
  4. 22

விடை : 28

9. எண்பேராயத்தைச் சாரதவர் ………….

  1. கனகச் சுற்றம்
  2. படைத்தலைவர்
  3. இவுளி மறவர்
  4. யானை மறவர்

.விடை : படைத்தலைவர்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தங்கதத் தூண்களிலே _____________ மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன

விடை : முத்து

2. சிலப்பதிகாரக் கதையின்  தொடர்ச்சியாக கூறப்படும் காப்பியம் _____________

விடை : மணிமேகலை

3. தண்டமிழ் ஆசான் என்று சீத்தலைச்சாத்தனாரைப புகழந்தவர் _____________

விடை : இளங்கோவடிகள்

4. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம் _____________

விடை : மணிமேகலை

5. மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியர் _____________

விடை : சீத்தலைச் சாத்தனார். 

சிறு வினா

1. இந்திர விழாவினைக் காண வந்தவர் என மணிமேகலையால் குறிப்பிடப்படுபவர்கள் யாவர்?

சமயவாதிகள், காலக்கணிதர், மக்கள் உருவில் கடவுளர், பல மொழி பேசும் அயல்நாட்டின் ஐம்பெருங்குழு, எண்பேராயம்

2. ஐம்பெருங்குழுவில் இடம் பெற்ற நபர்கள் யாவர்?

  • அமைச்சர்
  • சடங்கு செய்விப்பாேர்
  • படைத்தலைவர்
  • தூதர்
  • சாரணர் (ஒற்றர்)

2. இந்திர விழாக் காட்சிகளை வெளிப்படுத்தும் மணிமலைக் காதை எது?

  • விழாவறைக் காதை
  • இக்காதை மணிமேகலையின் முதல் காதை

3. எண்பேராயம் குழுவில் உள்ளவர்கள் யார்?

  • கரணத்தியலவர் (கணக்கு எழுதுபவர்)
  • கருமவிதிகள் (புரோகிதர்)
  • கனகச்சுற்றம் (பொருட்காப்பாளர்)
  • கடைக்காப்பாளர் (வாயிற்காப்பாளர்)
  • நகரமாந்தர் (மக்கள் சார்பாளர்)
  • படைத்தலைவர்
  • யானை வீரர்
  • இவுளி மறவர் (குதிரை வீரர்)

4. மணிமேகலை – குறிப்பு வரைக

  • ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்றானது,
  • மணிமேகலைத் துறவு என்பது இதன் வேறு பெயராகும்.
  • பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம்
  • பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம்
  • சொற்சுவையும், பொருட்சுவையும் இயற்கை வருணைனைகளும் நிறைந்தது.
    பெளத்த சமயம் சார்புடையது.
  • மணிமேகலை கதை அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்று கூறுவர்.
  • இது 30 காதையாக அமைந்துள்ளது.

5. சீத்தலைச் சாத்தனார் பற்றிய குறிப்புகளை எழுதுக

  • மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர்  சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
  • தானிய வணிகம் செய்ததால் கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் என்பர்.
  • இவரின் வேறுபெயர் –  தண்டழிச் சாத்தன், தண்டமிழ்ப்புலவன்.
  • கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
  • திருச்சி சீத்தலையில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்பர்.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment