Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 Nachiyar Thirumolizhi Book Back Solution

இயல் 6.3 – நாச்சியார் திருமொழி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 6.3 ‘Nachiyar Thirumolizhi’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 6.3 நாச்சியார் திருமொழி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 6.3 Nachiyar Thirumolizhi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

நாச்சியார் திருமொழி பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Nachiyar Thirumolizhi’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Nachiyar Thirumolizhi Subject.

Previous Lesson: இராவணகாவியம்

நாச்சியார் திருமொழி பாடல்

கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

– ஆண்டாள்

நூல் வெளி

  • திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்திய பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்.
  • ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.
  • இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
  • ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும்.
  • இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன.
  • நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது.

சொல்லும் பொருளும்

  • தீபம் – விளக்கு
  • சதிர் – நடனம்
  • தாமம் – மாலை

இலக்கணக் குறிப்பு

  • கொட்ட – வினையெச்சம்
  • முத்துடைத்தாமம் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. தொட்டு – தொடு (தொட்டு) + உ

  • தொடு – பகுதி, தொட்டு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது – விகாரம்
  • உ – வினையெச்ச விகுதி

2. கண்டேன் – காண் (கண்) + ட் + ஏன்

  • காண் – பகுதி (’கண்’ எனக் குறுகியது விகாரம்)
  • ட் – இறந்தகால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

  1. கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
  2. தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
  3. ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
  4. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

விடை : ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

குறு வினா

கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

இசைக்கருவிகள் மற்றும் சங்குகள் முழங்க கண்ணன் புகுந்த பந்தலில் முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டு இருந்தது.

சிறு வினா

ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக

  • கைகளில் கதிரவன் போன்ற ஒளி யை உடைய விளக்கையும், கலசத்தையும் ஏந்தி வந்து அழைக்க, வடமதுரை மன்னன் கண்ணன் பாதுகை அணிந்து நடந்து வருகிறார்’.
  • இசைக்கருவிகள் சங்குகள் முழங்க, அத்தை மகனும், “மது” என்ற அரக்கனை அழித்தவனுமாகிய கண்ணன், புகுந்த பந்தலில் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டு இருந்தது. அதன் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

  

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “நாச்சியார் திருமொழி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. திருமாலை வழிபட்டுச் சிறப்பு நிலை எய்தியவர்கள்

  1. நாயன்மார்கள்
  2. ஆழ்வார்கள்
  3. பெளத்தர்கள்
  4. சமணர்கள்

விடை: ஆழ்வார்கள்

2. ஆண்டாள் ___________ மீது காதல் கொண்டாள்

  1. ஈசன்
  2. முருகன்
  3. பிரம்மன்
  4. திருமால்

விடை : திருமால்

3. கண்ணன் ___________ என்னும் அரக்கனை அழித்தவர்

  1. மது
  2. தராசுரன்
  3. பகாசூரன்
  4. தகாசூரன்

விடை : மது

4. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ___________ பாடிய பாடல் தொகுப்பு ஆகும்.

  1. நாயன்மார்கள்
  2. ஆழ்வார்கள்
  3. பெளத்தர்கள்
  4. சமணர்கள்

விடை: ஆழ்வார்கள்

5. நாச்சியார் திருமொழி _________ பாடல்களை கொண்டது.

  1. 101
  2. 102
  3. 143
  4. 115

விடை : 143

6. தீபம் என்னும் சொல்லின் பொருள் தருக

  1. நடனம்
  2. மாலை
  3. விளக்கு
  4. காலை

விடை : விளக்கு

7. சதிர் என்னும் சொல்லின் பொருள் தருக

  1. நடனம்
  2. மாலை
  3. விளக்கு
  4. காலை

விடை : நடனம்

8. தாமம் என்னும் சொல்லின் பொருள் தருக

  1. நடனம்
  2. மாலை
  3. விளக்கு
  4. காலை

விடை : மாலை

9. ஆண்டாள் ______________ என்பவரின் வளர்ப்பு மகள்

  1. பெரியாழ்வார்
  2. பேயாழ்வார்
  3. பொய்கையாழ்வார்
  4. நம்மாழ்வார்

விடை : பெரியாழ்வார்

குறு வினா

1. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவள் யார்? காரணம் கூறுக

  • சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவள் ஆண்டாள்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த மாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப்பெற்றார்.

2. ஆழ்வார்கள் பன்னிருவர் பாடிய பாடல்களின் தொகுப்பு யாது?

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

3. ஆண்டாளின் படைப்புகள் சிவலற்றை எழுதுக.

  • திருப்பாவை
  • நாச்சியார் திருமொழி

4. ஆண்டாள் சிறு குறிப்பு வரைக

  • பன்னிரு ஆழ்வார்களின் ஒருவர்
  • ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.
  • பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்

5. நாச்சியார் திருமொழி – குறிப்பு வரைக

  • ஆசிரியர் – ஆண்டாள்
  • பாடல்கள் – 143

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment