Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 Thirukural Book Back Solution

இயல் 6.6 – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 6.6 ‘Thirukural’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 6.6 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 6.6 Thirukural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirukural’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Thirukural Subject.

Previous Lesson: புணர்ச்சி

கற்பவை கற்றபின்

படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்

Samacheer Kalvi 9th Tamil Guide Thirukural

அ. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
      துன்பத்துள் துன்பங் கெடின்.

ஆ. ஏவவும் செய்கலான் தான்தே றான் அவ்வுயிர்
      போஒம் அளவும்ஓர் நோய்.

இ. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
      உழந்தும் உழவே தலை

விடை

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

பொருளுக்கேற்ற அடியைக் கண்டு பிடித்துப் பொருத்துக

  1. கண்டானாம் தான்கண்டவாறு –  அ. பகைவரையும் நட்பாக்கும் கருவி
  2. அறம்நாணத் தக்கது உடைத்து –  ஆ. தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்
  3. மாற்றாரை மாற்றும் படை –  இ. அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும்

விடை : 1 – ஆ, 2 – இ, 1 -அ

ஐந்து சால்புகளில் இரண்டு

  1. வானமும் நாணமும்
  2. நாணமும் இணக்கமும்
  3. இணக்கமும் சுணக்கமும்
  4. இணக்கமும் பிணக்கமும்

விடை : நாணமும் இணக்கமும்

கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக.

ப் பு று
டை வு
ல்
ம் ர்

1. அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள் _____________

விடை: ஒப்புரவு

2. உலகத்துக்கு அச்சாணி போன்றவர் _____________

விடை: உழவர்

3. தான் நாணான் ஆயின் _____________ நாணத் தக்கது.

விடை: அறம்

4. ஆழி என்பதன் பொருள் _____________

விடை: கடல்

5. மாற்றாரை மாற்றும் _____________

விடை: படை

6. ஒழுக்கமான குடியில் பிறந்தவர் _____________ செய்வதில்லை

விடை: தவறு

வினாக்கள்

1) இறக்கும்வரை உள்ள நோய் எது?

சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும் வரை உள்ள நோய்

2) அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)
    ஐந்துசால்பு ஊன்றிய தூண். – இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்கி எழுதுக.

இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி – ஏகதேச உருவக அணி

இலக்கணம்:-

செய்யுளில் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகம் – ஒன்று, தேசம் – பக்கம்)

விளக்கம்:-

சான்றாண்மைக்கு தாங்கும் தூண்களை உருவகம் செய்த வள்ளுவன், சான்றாண்மைக்கு உருவகம் செய்யாமல் விட்டதால் இது எகதேச உருவக அணி ஆகும்.

3) உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?

மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால், அவரே உலகத்துக்கு அச்சாணி ஆவர்.

4) காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு. – இக்குறட்பாவில் பயின்றுவரும் தொடை நயத்தை எழுதுக.

எதுகைத் தொடை

செய்யுளி்ல் சீர்களிலோ அல்லது அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.

  • தான்காணான் – தான்கண்ட

மோனைத் தொடை

செய்யுளில் சீர்களிலோ அல்லது அடிகளிலோ முதலாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.

  • காணாதான் – காட்டுவான்
  • தான்காணான் – தான்கண்ட

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
   எழுவாரை எல்லாம் பொறுத்து இப்பாடலில் பயின்று வரும் அணி

  1. பிறிது மொழிதல் அணி
  2. உவமை அணி
  3. ஏகதேச உருவக அணி
  4. எடுத்துக்காட்டு உவமை அணி

விடை: ஏகதேச உருவக அணி

2. உலகத்திற்கு அச்சாணியாக கருதப்படுபவர்

  1. ஆசிரியர்
  2. தச்சர்
  3. உழவர்
  4. வணிகர்

விடை: உழவர்

குறுவினா

1. கோடிப்பொருள் அடுக்கிக் கொடுத்தாலும் தவறு செய்யாதவர்கள் யார்?

கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை

2. சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாக வள்ளுவர் கூறுவன யாவை?

  • அன்பு பழிக்கு வெட்கப்படுதல்
  • அனைவரிடமும் இணக்கமும்
  • இரக்கம்
  • உண்மை

3. மாற்றாரை மாற்றும் படையாக வள்ளுவர் கூறவன யாவை?

  • செயல் செய்பவரின் ஆற்றல்
  • பணிவுடன் நடத்தல்

4. ஏகதேச உருவக அணி என்றால் என்ன? சான்று தருக

இலக்கணம்:-

செய்யுளில் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகம் – ஒன்று, தேசம் – பக்கம்)

சான்று:-

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்

விளக்கம்:-

சான்றாண்மை மிக்கவர் கடலுக்குக் கரை என்று உருவகம் செய்த வள்ளுவர், ஊழிக் காலத்தை உருவகம் செய்யாமல் விட்டதால் இது ஏகதேச உருவக அணி ஆகும்.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment